பாலி ஆறு நகர்கிறது 1968ல் எழுதப்பட்ட எனது முதல் கவிதை. இதை எழுதியபோது மல்லாவி என்ற வன்னிக் கிராமத்தில் கலகக் காரனாகத் திரிந்தேன். எனது கவிதைகளை பிரசுரிக்கும் அனுமதி கேட்டு ஆர்வலர்கள் எழுதுகிறார்கள். ஒரே தடவையில் 10 மேற்படாத எனது கவிதைகளை அனுமதி இன்றிப் பிரசுரிக்கலாம்.
அன்புடன், வ.ஐ.ச.ஜெயபாலன்
பாலி ஆறு நகர்கிறது
- வ.ஐ.ச.ஜெயபாலன்
அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி
ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.
என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.
ஆனாலும்
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது
அந் நாளில்
பண்டார வன்னியனின்*
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்
ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.
Saturday, October 20, 2007
Wednesday, September 26, 2007
அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும்
அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும்
வ.ஐ.ச.ஜெயபாலன்
இன்பம் துய்ததுடன்
முடிந்து விடுகிறதா எல்லாம்.
பிடித்த புத்தகத்தில்
இரசித்த பக்கமென
தட்டிச் செல்ல முடியவில்லையடி.
முட்டைகள் மீது
பின்காலால் மணல்மூடி
திரும்பியும் பாராத
ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய்.
மாயை போலாயிற்று எல்லாம்.
இன்பம் இருவரும் நாடியதுதான்.
நட்பு நான் மட்டுமே தேடியதோ ?
முதற் கண் பொழுதில்
முதுகு சில்லிட
ஒரு கணம் தரித்தாய்.
உன் இதயத்துள் இருந்து
அடி வயிறு அதிர இறங்கிய
இன்பச் சூனியம் மறைக்க
சினந்து முகம் திருப்பினாய்.
நானும் கள்வன் என்பதறியாது.
அடுத்த நாள்
ஆயிரம் ஒத்திகையோடு வந்து
மணி கேட்டேனே.
ஏழனம் தெறித்தது
உன் பார்வையில் எனினும்
கனத்த உன் முலைகளும்
இன்ப வலியில் குனித்த புருவமும்
செப்பிய காமமும்
பேசிய மொழிகளும் வேறு.
சொல்லி வைத்தாற்போல்
இருவர் கண்ணிலும்
வியர்த்தது வென்நீர்.
நெடுங் காலமாயிற்று.
நீயும் உன் முதலிரவில்
எனை நினைத்தாயா.
இரவுகள் என்னடி இரவுகள்.
கண் இமைத்தலுட் கழிந்த
இரண்டு புயல் பாம்புகளின்
மூன்று பொழுதுகள்.
முன்றாம் காலை விடிகையில்.
நம் சாதியும் சமயமும்
வேறு வேறெனக் கண்டுபிடித்தாய்.
தெரிந்ததாக தெரியேல் என்றது
நான்காம் பகல்
கருத்தரங்கு முடிந்து பிரிகையில்.
தெருவில் சிரிக்காதே
கடிதம் எழுதாதே
நண்பரோடு இதுபற்றி
கங்கை கொண்ட சோழனாய்
பெருமை பேசிவிடாதே என்றாய்
ஆண்கள் பற்றி இத்தனை தெளிவா.
அதன் பின் உனக்கு
நானும் யாரோ நீயும் யாரோ.
எப்படி முடிந்ததடி.
காலையில்
அந்தக் குண்டு வீச்சுச்
சேதி படித்தேன்.
மதியம் உனது
அகால மரணம் அறிந்ததிதில்
சிதறினேன்.
மாலை முழுவதும்
வெறுமையில் உழன்றேன்.
இரவு மனைவி தலை வலியா என
அணைந்த போது
ஒரு வழியாக தேறுதலடைந்தேன்.
வ.ஐ.ச.ஜெயபாலன்
இன்பம் துய்ததுடன்
முடிந்து விடுகிறதா எல்லாம்.
பிடித்த புத்தகத்தில்
இரசித்த பக்கமென
தட்டிச் செல்ல முடியவில்லையடி.
முட்டைகள் மீது
பின்காலால் மணல்மூடி
திரும்பியும் பாராத
ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய்.
மாயை போலாயிற்று எல்லாம்.
இன்பம் இருவரும் நாடியதுதான்.
நட்பு நான் மட்டுமே தேடியதோ ?
முதற் கண் பொழுதில்
முதுகு சில்லிட
ஒரு கணம் தரித்தாய்.
உன் இதயத்துள் இருந்து
அடி வயிறு அதிர இறங்கிய
இன்பச் சூனியம் மறைக்க
சினந்து முகம் திருப்பினாய்.
நானும் கள்வன் என்பதறியாது.
அடுத்த நாள்
ஆயிரம் ஒத்திகையோடு வந்து
மணி கேட்டேனே.
ஏழனம் தெறித்தது
உன் பார்வையில் எனினும்
கனத்த உன் முலைகளும்
இன்ப வலியில் குனித்த புருவமும்
செப்பிய காமமும்
பேசிய மொழிகளும் வேறு.
சொல்லி வைத்தாற்போல்
இருவர் கண்ணிலும்
வியர்த்தது வென்நீர்.
நெடுங் காலமாயிற்று.
நீயும் உன் முதலிரவில்
எனை நினைத்தாயா.
இரவுகள் என்னடி இரவுகள்.
கண் இமைத்தலுட் கழிந்த
இரண்டு புயல் பாம்புகளின்
மூன்று பொழுதுகள்.
முன்றாம் காலை விடிகையில்.
நம் சாதியும் சமயமும்
வேறு வேறெனக் கண்டுபிடித்தாய்.
தெரிந்ததாக தெரியேல் என்றது
நான்காம் பகல்
கருத்தரங்கு முடிந்து பிரிகையில்.
தெருவில் சிரிக்காதே
கடிதம் எழுதாதே
நண்பரோடு இதுபற்றி
கங்கை கொண்ட சோழனாய்
பெருமை பேசிவிடாதே என்றாய்
ஆண்கள் பற்றி இத்தனை தெளிவா.
அதன் பின் உனக்கு
நானும் யாரோ நீயும் யாரோ.
எப்படி முடிந்ததடி.
காலையில்
அந்தக் குண்டு வீச்சுச்
சேதி படித்தேன்.
மதியம் உனது
அகால மரணம் அறிந்ததிதில்
சிதறினேன்.
மாலை முழுவதும்
வெறுமையில் உழன்றேன்.
இரவு மனைவி தலை வலியா என
அணைந்த போது
ஒரு வழியாக தேறுதலடைந்தேன்.
இல்லறம்
இல்லறம்
-வ.ஐ.ச.ஜெயபாலன்.
ஆற்றம் கரையில்
இன்னும் தோற்றுப்போகாத மரம் நான்.
இன்று தெளிந்துபோய்
புல்லும் சிலும்பாமல் நடக்கிறது காட்டாறு.
விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி
ஹோலிப் பண்டிகைக் குறும்போடு
வண்ணங்கள் வீசி
தொட்டுத் தொட்டுடச் செல்கிறது அது.
நேற்று வெறிகொண்டாடியது தானல்ல என்பதுபோல.
எனது கன்றுகள்
முளைத் தெழுகிற நாள்வரையேனும்
கைவிட்டகலும் வேர்மண் பற்றி
பிழைத்திருக்கிற போராட்டத்தில்
நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்
அது நானல்ல என்பதுபோல.
நேற்றைய துன்பமும் உண்மை
நாளைய பயமோ அதனிலும் உண்மை.
எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு.
சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்.
துள்ளி மகிழுதே பொன்மீன்கள்.
நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்.
-வ.ஐ.ச.ஜெயபாலன்.
ஆற்றம் கரையில்
இன்னும் தோற்றுப்போகாத மரம் நான்.
இன்று தெளிந்துபோய்
புல்லும் சிலும்பாமல் நடக்கிறது காட்டாறு.
விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி
ஹோலிப் பண்டிகைக் குறும்போடு
வண்ணங்கள் வீசி
தொட்டுத் தொட்டுடச் செல்கிறது அது.
நேற்று வெறிகொண்டாடியது தானல்ல என்பதுபோல.
எனது கன்றுகள்
முளைத் தெழுகிற நாள்வரையேனும்
கைவிட்டகலும் வேர்மண் பற்றி
பிழைத்திருக்கிற போராட்டத்தில்
நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்
அது நானல்ல என்பதுபோல.
நேற்றைய துன்பமும் உண்மை
நாளைய பயமோ அதனிலும் உண்மை.
எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு.
சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்.
துள்ளி மகிழுதே பொன்மீன்கள்.
நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்.
மூன்றாவது மனிதனின் கவிதை.
மூன்றாவது மனிதனின் கவிதை.
- வ.ஐ.ச.ஜெயபாலன்.
என்றோ ஆழ்மனதுள் தைத்து
இன்ன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும்
காலமுகமான
ஒரு கவிதையடி நீ.
தொடுவான் எரிய
மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே
ஈடன் பூந்தோட்டத்து வழி தவற
ஓயாமல் சபிக்குமொரு
ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான்.
ஏவாள் நீ இன்றெங்கே.
உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை
இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே
நீ இச்சித்தும் நான் தவிர்த்த
அந்த விலக்கப் பட்டகனி இன்னும் இருக்கிறதா.
உன்னிடத்தே வளைய வளைய வந்து
எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே
அந்த அருவருத்த பாம்பு
அது எங்கே.
உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து
மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற
ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை என் மனசு.
இருள் கலைய முன்னெழுந்து காடு செலல்
நள்ளிரவிற் சுமையோடு வீடடைதல்
இரவெல்லாம் பதனிடுதல் என்றிருக்கும்
ஆதாம் சுகமா.
காட்டான்தான்
என்றாலும் எம்முன்னே
நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள்
இன்றும் கமழும்.
ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காட்தலின்ன முன்
இந்த ஞாலம் கடுகு.
இது யாருடைய வாழ்வு.
யார் பட்டி மந்தைகள் நாம்.
கூடல் கழிதல் பெருகல் பிரிதலென்று
நம் இருப்பு யாருடைய கணித விழையாட்டு.
எது பகடை எவர் காய்கள்
இது எவருடைய சதுரங்கம்.
- வ.ஐ.ச.ஜெயபாலன்.
என்றோ ஆழ்மனதுள் தைத்து
இன்ன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும்
காலமுகமான
ஒரு கவிதையடி நீ.
தொடுவான் எரிய
மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே
ஈடன் பூந்தோட்டத்து வழி தவற
ஓயாமல் சபிக்குமொரு
ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான்.
ஏவாள் நீ இன்றெங்கே.
உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை
இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே
நீ இச்சித்தும் நான் தவிர்த்த
அந்த விலக்கப் பட்டகனி இன்னும் இருக்கிறதா.
உன்னிடத்தே வளைய வளைய வந்து
எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே
அந்த அருவருத்த பாம்பு
அது எங்கே.
உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து
மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற
ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை என் மனசு.
இருள் கலைய முன்னெழுந்து காடு செலல்
நள்ளிரவிற் சுமையோடு வீடடைதல்
இரவெல்லாம் பதனிடுதல் என்றிருக்கும்
ஆதாம் சுகமா.
காட்டான்தான்
என்றாலும் எம்முன்னே
நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள்
இன்றும் கமழும்.
ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காட்தலின்ன முன்
இந்த ஞாலம் கடுகு.
இது யாருடைய வாழ்வு.
யார் பட்டி மந்தைகள் நாம்.
கூடல் கழிதல் பெருகல் பிரிதலென்று
நம் இருப்பு யாருடைய கணித விழையாட்டு.
எது பகடை எவர் காய்கள்
இது எவருடைய சதுரங்கம்.
Monday, September 17, 2007
பூவால் குருவி - வ.ஐ.ச.ஜெயபாலன்
பூவால் குருவி
நெஞ்சுக்குள் தொலையாதிருந்து
ஒரு சிற்றாறாய் ஊருகின்ற
என் முதல் காதல் பெட்டை
ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி.
பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில்
வன்னிக் கிராமத் தெருவொன்றில்
வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும்
பொன் சருகை கலையா முகமும்
இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய்
போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு
போட்டிச் சிறு நடையில்.
அது என்ன போட்டி.
காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.
அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய்.
என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில்
இன்று நீ அன்னை.
நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும்.
ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான்.
இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும்
குளக்கரையின் மான் குட்டி.
நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா.
இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற
திருட்டுச் சிறு பயலா.
அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று
உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து
நீந்த முயன்றதெல்லாம் எண்ணில்
மேனி இன்பத் துணுக்குறுதே.
எறிகுண்டாய் வானத்தியமன்
கூரை பிரித்துன் பின்வீட்டில் இறங்கிய நாள்
உன் முன்வீட்டுப் பிள்ளை தொலைந்தாளாம்.
பின் ஒருநாள் ஊர் காண
காக்கி உடையோடு வந்து காட்டோரம் பூப்பறித்து
கூந்தலிலே சூடி நடந்தாளாம்.
தெருவெல்லாம்
நீ உனது பூப்படைந்த பெண்ணின் காவலிலே
நிழலாய் திரிகிறியாம்.
இது பெருங்காவல்.
எல்லாம் அறிந்தேன்.
எங்கிருந்தோ வந்து
நம் தெருவோர மரக்கிளையில் குந்தி
தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த
அந்தக் குருவியைப் போல்
காணாமல் போனதடி காலங்கள்.
நெஞ்சுக்குள் தொலையாதிருந்து
ஒரு சிற்றாறாய் ஊருகின்ற
என் முதல் காதல் பெட்டை
ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி.
பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில்
வன்னிக் கிராமத் தெருவொன்றில்
வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும்
பொன் சருகை கலையா முகமும்
இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய்
போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு
போட்டிச் சிறு நடையில்.
அது என்ன போட்டி.
காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.
அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய்.
என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில்
இன்று நீ அன்னை.
நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும்.
ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான்.
இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும்
குளக்கரையின் மான் குட்டி.
நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா.
இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற
திருட்டுச் சிறு பயலா.
அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று
உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து
நீந்த முயன்றதெல்லாம் எண்ணில்
மேனி இன்பத் துணுக்குறுதே.
எறிகுண்டாய் வானத்தியமன்
கூரை பிரித்துன் பின்வீட்டில் இறங்கிய நாள்
உன் முன்வீட்டுப் பிள்ளை தொலைந்தாளாம்.
பின் ஒருநாள் ஊர் காண
காக்கி உடையோடு வந்து காட்டோரம் பூப்பறித்து
கூந்தலிலே சூடி நடந்தாளாம்.
தெருவெல்லாம்
நீ உனது பூப்படைந்த பெண்ணின் காவலிலே
நிழலாய் திரிகிறியாம்.
இது பெருங்காவல்.
எல்லாம் அறிந்தேன்.
எங்கிருந்தோ வந்து
நம் தெருவோர மரக்கிளையில் குந்தி
தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த
அந்தக் குருவியைப் போல்
காணாமல் போனதடி காலங்கள்.
Friday, September 7, 2007
ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா
ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா
வ.ஐ.ச. ஜெயபாலன்
எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி பாரதிதாசன் மட்டுமே கடைச் காலத்தில் அம்மாவுடன் இருக்கிற பாக்கியத்தைப் பெற்றான். அவன் 2001ல் அம்மா அப்பாவை (வ.ஐ.சண்முகம்பிள்ளை) பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவென்று ஜெர்மனியில் இருந்து சென்றிருந்தான். அன்றிருந்து இறுதிவரை அவர்களுடனேயே இருந்தான். அது ஒன்றுதான் கடந்த ஐந்துவருடங்களாக எமக்கிருந்த ஒரே ஆறுதல். சொந்த மகளைப்போல எங்கள் அம்மாவை நெடுங்காலமாக பராமரித்த மச்சாள் மகள் சசியின் அரவணைப்பில் எனது அம்மாவின் கண் மலர்கள் இறுதியாகக் குவிந்தன. இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு அஞ்சி பாதுகாப்புக் காரணங்களால் அம்மாவின் மரணச் சடங்கில்கூட கலந்து கொள்ள முடியவில்லை. நாம் எல்லோரும் அவளது இறுதி நாட்களில் வன்னியில் கூடி ‘தீயினை முந்தி திரு உடலில் முத்தமிட’ வாய்க்குமென நம்பியிருந்தோம். சிரமத்துகிடையே லண்டனில் இருந்து வன்னிக்கு சென்ற தங்கை லலிதாவுக்கும் இறுதித் தருணங்களில் அம்மாவின் திரு உடலைத் தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. உலகம் முழுவதும் அகதிகளாக சிதறி இருந்த நாம் எமது துணைகளோடும் பிள்ளைகளோடும் சென்னையிலும் பிராங்பேட்டிலும் ஒஸ்லோவிலும் ரொறன்ரோவிலும் கூடி அம்மாவின் பெருவாழ்வு பற்றி பேசி அழுது மனம் ஆறினோம். ஓரிரு தடவைகள் மட்டுமே அவளை சந்தித்திருந்த பேரப் பிள்ளைகள் பல்வேறு மொழிகளில் அஞ்சலிக் கவிதை எழுதினார்கள். அம்மா அன்னிய நாடுகளில் சிதறி வெவ்வேறு அன்னிய மொழிகளைப் பேசும் அவர்க¨ளை பேசும் தமிழும் உன்னுடைய நினைவும் தாயகக் கனவும்தானே அம்மா இணைத்து வைத்திருக்கிறது.
எங்கள் அம்மாவும் அப்பாவும் 1920ம் ஆண்டு பிறந்ததாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த காலத்தில் பிரிட்டிஸ் நிர்வாகம் பெண்களின் திருமண வயதை இரண்டு வருடங்களால் அதிகரித்ததாம். இதனைப் புறந்தள்ள பெரும்பாலான யாழ்ப்பாணத்துப் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் வயதை இரண்டு வருடங்களால் அதிகரித்து பதிவு செய்தார்களாம். அம்மாதான் சொன்னாள். இந்த வழக்கப் படி 1920ல் பிறந்ததாகப் பதிவுசெயப்பட்ட எனது அம்மாவின் உண்மையான பிறந்த ஆண்டு 1922 எனவும் ஒரு கருத்துள்ளது. எனினும் உறுதி செய்ய முடியவில்லை.
பெயர் அற்று மறைந்துபோன பல அறியப்படாத பெண் விடுதலைப் போராளிகளது பங்களிப்புகளிலேயே நமது பெண்கள் இன்று தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள். வாழ்விலும் கலைகளிலும் போராட்டங்களிலும் தலை பணியாத சதாரண மனிதர்களின் சரித்திரமும் சேர்ந்தது அன்றோ நம் வீர வரலாறு. அறியப் படாத பெண் விடுதலைப் போராளியான என்னருமை அம்மாவின் போராட்ட வாழ்வை பதிவு செய்ய விரும்புகிறேன். பெண் விடுதலை சாதி சமத்துவம் என்கிற இரு கனிகளின் விதைகளை அம்மா எங்கள் நெஞ்சிலும் பயிரிட்டார். அம்மா எப்பொழுதும் எங்களின் ஆதர்சமாகவும் வழி காட்டியாகவும் இருக்கிறார்.
அம்மாவின் கருத்தியலை கிறிஸ்துவ மிசனரிகளால் நடத்தப் பட்ட உடுவில் மகளிர் கல்லூரியில் கற்ப்பித்த அமரிக்க பெண்கள்து வாழ்வும் மகாத்மா காந்தியின் கொள்கைகளும் ஆழமாக பாதித்திருந்தது.
அந்நாளைய பெண் விடுதலை வாதிகளின் கோட்டையாக இருந்த உடுவில் மகளிர் கல்லூரியும் சின்னம் சிறுமியாக இருந்தபோது இடம்பெற்ற ஒரு சந்திப்புமே அம்மாவின் வாழ்க்கைகான கருத்தியலை நிர்ணயித்தது.
1927ல் உடுவில் மகளிர் கல்லூரியில் ஒரு பெருவிழா இடம்பெற்றது. பூந்தோட்டமாய் செளித்திருந்த வளாகத்துக்குள் முழு யாழ்ப்பாணக் குடா நாடுமே கூடியிருந்தது. வளமைக்கு மாறாக மண்டப முன்றில் வரை அனுமதிக்கப்பட்ட கருப்புக் காரில் இருந்து வாழ்த்துக் கோசங்கள் ஒலிக்க விழா நாயகன் மேடைக்கு அழைத்துச் செல்லப் படுகிறார். அவரோடு கூட மேடையில் பத்து பிரமுக பிரமுகிகள் இருந்தனர். இவை எல்லாம் எண்பத்தி ஐந்துவயதில் நாம் அம்மாவை உடுவில் மகளிர் கல்லூரிக்கு அழைத்த்ச் சென்ற போது அவள் சொன்ன கதைகள். அந்த விழாவின் ஆரம்பதில் அம்மாவும் ஒன்பது சிறுமிகளும் மலர் மாலை ஏந்தி நடனமாடியபடி ஐந்து ஐந்து பேரார்கொண்ட இரு அணிகளாகப் பிரிந்து இரு புறத்தில் இருந்தும் மேடை ஏறினார்களாம். வலதுபக்க அணிக்குத் தலமை தாங்கி ஆடிச் சென்ற அம்மாவிடம் நடு நாயகமாக இருக்கும் சட்டை போடாத மாமாவுக்கு மாலை போடும்படி கூறப் பட்டிருந்தது. அம்மா அந்த நிகழ்வை தனது முழு வாழ்நாளிலும் இடம்பெற்ற மிகப் பெரும் பாக்கியமாக கருதினாள். பின்னர் அம்மாவின் வாழ்நாள் முழுவதையும் அவளது வாழ்வின் கருத்தியலையும் அந்த மாலை சூடிய நிகழ்வு பாதித்தது. மகாத்மா காந்திதான் அந்த சட்டை போடாத மனிதர்.
2
அம்மா 1955ம் ஆண்டுவரை வரை உடுவில் கிராமத்திலும் அதன்பின்னர் ஒன்பது வருடங்கள் நெடுந்தீவிலும் வாழ்ந்தார். 1964ல் இருந்து இறுதிவரை வன்னி மாநிலத்தில் உள்ள வடகாட்டில் வாழ்ந்த அம்மாவும் அப்பாவும் இடையில் இரண்டு வருடங்கள் (2001 - 2003) தம்பி பாரதியுடன் தமிழகத்தில் தங்கியிருந்தனர். அவள் பெற்ற பிள்ளைகள் எல்லோருமே அகதிகளாக உலக உருண்டையில் அலைகிறோம். கடைசி ஆறு வருடங்களாக அம்மா அப்பாவைப் பராமரித்ததில் இருந்து அம்மாவின் மரணச் சடங்குவரைக்கும் எங்கள் எல்லோரது கடமைகளையும் தம்பி பாரதிதாசன்தான் நிறைவுசெய்தான்.
அம்மாவும் அப்பாவும் கவிதையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அம்மாவுக்கு தமிழ் ஆங்கிலக் கவிதைகளிலும் அப்பாவுக்கு தமிழ் கவிதைகளிலும் நல்ல புலமை இருந்தது. அப்பாவுக்கு சிங்களக் கவிதைகளிலும் நல்ல கேழ்வி ஞானம் இருந்தது. கவிதை ஒன்று மட்டுமே அவர்களின் சந்திப்பு புள்ளியாக இருந்தது.
நானும் தங்கை இராதாராணியும் உடுவிலில் பிறந்தோம். வணிதாசனை பெறுவதற்காக அம்மாவுடன் நாங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து 1949ல் நெடுந்தீவுக்கு சென்றுவந்தோம். அதுதான் எங்களது முதல் நெடுந்தீவுப் பயணம். நிறைமாதமாக இருந்தபோதும் அம்மா அயராத உழைப்பாளியாக இருந்தாள். உதவிக்கு ஆட்கள் பலர் இருந்தும் தானே எல்லாவற்ரையும் வலிந்து செய்வாள். தம்பி பிறந்த அன்று காலையில் உதவிக்கு வந்தவர்களை நிராகரித்துவிட்டு பிடிவாதமாக தனது கைகளால் கிணற்றில் இருந்து பாரத் துலா ஏற்றத்தில் நீர் இறைத்து எங்களைக் குளிப்பாட்டினாள். அந்த நாட்களில் மகப் பேறுகால மரணத்தின் விழுக்காடு அதிகமாக இருந்தது. நெடுந்தீவில் மருத்துவ வசதிகளும் இல்லை. அந்த நாள் தனது இறுதி நாளாக அமைந்துவிடக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை அவள் உணர்ந்திருந்தாள். இதனால் பிரசவத்துக்கு முந்திய தருணங்களை எங்களோடு எங்கள் பணியில் களிக்க விரும்பியிருக்கிறாள். குளிப்பாட்டும்போது எங்கள் மெய் தீண்டி மகிழவும் அறிவுரை கூறவும் விரும்பினாள். எங்களுக்கு குளிப்பாட்டி முடிந்த கையோடு அம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது இப்பவும் நினைவில் இருக்கிறது. இதுதான் எங்கள் அம்மா.
அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் DSc பட்டத்தை இலக்காக வைத்து படித்தவள். வீட்டில் அடுத்தடுத்து ஏற்ப்பட்ட மரணங்களால் கல்வி தடைப் பட்டபோது அங்கேயே ஆசிரியராக பணிபுரிகிற வாய்ப்பு அவளுக்கு கிட்டியது. அந் நாட்களின் விடுதலை அடைந்த பெண்கள் பலரைப் போலவே அம்மாவும் ஆண்களது மனிதாபிமானத்தில் அவநம்பிக்கையும் திருமணத்தில் வெறுப்பும் கொண்டவராகவும் திருமணத்துக்கு தப்பி ஓடுகிறவராகவும் இருந்தார். திருமணத்தைத் தொடர்ந்த தடைகளை மீறி அம்மா உடுவிலில் மிகவும் செல்வாக்காக இருந்தாள். என்ன கஸ்டப் பட்டாலும் எங்களை யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் கற்பிக்க வேண்டும் என்கிற வெறி அவளுக்கு இருந்தது.
அப்பா சிறுவயதிலேயே கல்வியை விட்டுவிட்டு வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிய தென் இலங்கைக்குச் சென்றார். அயராத உழைப்பாலும் திறமையாலும் மிகக் குறுகிய காலத்திலேயே அவர் மத்துகம நகரின் பிரபல வர்த்தகராக மேம்பட்டுவிட்டார். உடுவில் கிராமத்தில் சுருட்டுக் கைத்தொழிற்சாலை ஆரம்பித்தார். அவருக்கு அம்மாவின் சகோதரர்களின் உதவியும் நட்பும் கிடைத்தது. இப்படித்தான் அப்பாவுக்கு அம்மாவின் குடும்பதோடு தொடர்பேற்பட்டது. நிறைந்த கேழ்வி ஞானம் இருந்தபோதும் அம்மாவைப்போல முறைப்படி கற்கவில்லையே என்கிற கவலை அப்பாவை ஒரு மனச் சிக்கலாகவே பீடித்திருந்தது. ஆரம்பத்தில் இருந்தே என்னையும் தம்பிகளையும் அம்மாவின் விருப்பத்துக்கு மாறாக வர்த்தகதில் ஈடுபடுத்தவேணும் என்கிறதுதான் அப்பாவின் விருப்பமாக இருந்தது. இதன்மூலம் அம்மாவைத் தோற்கடித்து இறுதி வெற்றி பெற்றுவிடலாம் என அவர் நம்பினார். எனது சகோதரிகள் படிக்கிறதையும் அவர் விரும்பவில்லை. அம்மாவோ நாளை எனது பிள்ளைகள் பிச்சை எடுத்தாலும் பறுவாயில்லை அவர்கள் படித்து புகழுடன் வாழவேண்டும் என போராடுவாள். அதுமட்டுமே அம்மாவின் தவமாகவும் விருப்பமாகவும் இருந்தது.
சிறு பிராயத்தில் இருந்தே செல்வாக்காகவும் பலமாகவும் இருந்த உடுவில் கிராமத்தில் இருந்து அம்மாவின் வேர்களை அறுத்து 1955ல் நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்றபோது அம்மாவைத் தனிமைப் படுத்துகிறதில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக அப்பா பெருமிதம் அடைந்தார். ஆனால் நெடுந்தீவிலும் எங்கள் அம்மா ஓய்ந்திருக்கவில்லை. அப்பா வருடத்தில் பெரும்பாலான நாட்கள் வெளி ஊர்களில் இருப்பார். மோதல் வாழ்வில் அம்மாவுக்கு ஆறுதலாக இருந்த விடயம் அதுதான். அந்த காலங்களில் எங்கள் வீடு நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்களின் ஆசிரமம் போலாயிற்று. வானொலி கேட்க்க, பத்திரிகை வாசிக்க, தையல் மெசின் பழக, ஆங்கிலம் படிக்கவென்று இளம் பெண்கள் எப்பவும் அம்மாவைச் சுற்றி இருப்பார்கள். விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் பற்றியும் அறிந்துகொள்ளவென்று நெடுந்தூரத்தில் இருந்தும் பெண்கள் வருவார்கள். நெடுந்தீவில் 1950களின் நடுப்பகுதியில் இருந்து 1960பதுகளின் நடுப்பகுதி வரைக்குமான காலக் கட்டத்தில் பெண் விடுதலைக்கும் தமிழர் விடுதலைக்குமாக இளம் பெண்களை அணிதிரட்டுவதற்க்கு அம்மாவும் அவளது தோழிகளும் அயராமல் உழைத்தார்கள்.
வ.ஐ.சண்முகம் பிள்ளை சகோதரர்களுக்கு மத்துகமவிலும் (V.I.Shanmugampillai & Brothers) மன்னாரிலும் (மன்னார் ஸ்ரோஸ்) நெடுந்தீவிலும் (புதுக்கடை) கடைகள் இருந்தது. அக்கரையானிலும் மண்ணியா குளத்திலும் விவசாய பண்ணை இருந்தது. இதனால் அப்பா பெரும்பாலும் இலங்கையின் தென் நகரமான மத்துகம சென்றுவிடுவார். அல்லது அக்கரையான் பண்ணையிலோ மன்னார் கடையிலோ இருப்பார். இது வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் அம்மாவுக்கு சுதந்தரமாக செயல்படுவதற்க்குத் தேவையான வெளியை உருவாகியது. விடுமுறையில் அப்பா வீடு வருவதை நாங்கள் அஞ்சினோம். இத்தகைய மோதல் துன்புறுத்தல் பின்னணியிலும் அம்மா பணிந்துபோகாமல் தொடற்சியாக வெற்றி பெற்றாள். அயராத மாதர் இயக்க சமூக அரசியல் பணிகள்மூலம் இளம் பெண்கள் மதியிலும் ஏழைகள் மத்தியிலும் அம்மா செல்வாக்குப் பெற்றபோது அப்பா ஆடிப்போனார். எத்தனை அடித்து நொருக்கினாலும் நீ வென்றுவிடவில்லை என்றபடி மீண்டும் உயிர்த்தெழுகிற வல்லமையை அவள் மகாத்மா காந்தியிடம் இருந்து வரித்திருந்தாள். அம்மாவைத் தனிமைப் படுத்தி தோற்கடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு அவளை நெடுந்தீவுக்கு அழைத்து வந்த அப்பாதான் இறுதியில் தோற்றுப் போனார். அம்மா நெடுந்தீவிலும் ஆலமரம்போல வேரூண்றி விழுதுவிட்டாள். இதன்னால் வெறுத்துப்போய் அப்பா எங்களை வன்னியின் காட்டு பகுதியில் இருந்த வடகாட்டுக்கு பிடிவாதமாக அழைத்துச் சென்றார். எங்கள் கல்விபற்றி எப்பவும் அவருக்கு அக்கறை இருக்கவில்லை. அம்மாவை தனிமைப் படுத்தி வெற்றி பெறுவது மட்டுமே அவரது ஒரே குறிக்கோளாக இருந்தது. இப்படி 1964ல் நிரந்தரமான குடியிருப்புகளோ பாடசாலைகளோ இல்லாத நடுக் காட்டில் எங்களை குடிவைத்த பிறகுதான் அப்பா அமைதி அடைந்தார். எங்கள் சகோதரிகளது கல்வி வாய்ப்பு முற்றாகப் பட்டுப் போனது. எங்கள் கல்விக்காக அம்மா நித்தமும் போராட வேண்டி இருந்தது. வீட்டிலும் நாட்டிலும் நிலவிய ஒடுக்குதல் சூழல் மாணவப் பருவத்திலேயே என்னை ஒரு கிளற்சிக் காரனாக்கியது. இத்தனை ஒடுக்குதலையும் நெருக்கடிகளையும் அம்மாவால் எப்படி சாத்வீகமாக எதிர்கொள்ள முடிந்தது?
அம்மாவும் அப்பாவும் எங்கள் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் நெடுங்கால ஆதரவாளர்கள். அம்மா 1961ல் யாழ் கச்சேரிக்கு முன் ஈழத்துக் காந்தி என புகழ் பெற்ற திரு எஸ்,ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற வரலாற்றுப் புகழ் பெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் நெடுந்தீவு மாதர்சங்க தோழியர்களோடு சென்று பங்குபற்றினாள். அப்பா தீவிர தமிழ் தேசிய வாதியானபோதும் அரசியலில் பெண்களது பணி நிகழ்ச்சிகளில் தேனீரும் உணவும் தயாரித்து வளங்குவது மட்டும்தான் என்று நம்பினார். அப்பாவின் தமிழ் தேசியவாதமும் வெளிவாரியானது. வெளிவாரியாக மட்டுமன்றி தமிழரிடையே உள்வாரியாகவும் பால் சாதி சமத்துவத்துக்கும் தமிழர் போராட்டங்கள் வழி வகுக்க வேண்டும் என்கிற ‘சம ஆசனம் சம போசனம்’ கொள்கையை அம்மா ஆதரித்தார். அம்மா செல்வாக்குப் பெறுவதை அப்பா விரும்பவில்லை. அதன் பின்னர்தான் அம்மாவுக்கும் எங்களுக்கும் வனவாச தண்டனை கிடைத்தது. 1964ல் விருப்பத்துக்கு மாறாக வன்னியின் காட்டுப் பகுதியான வடகாட்டில் இருந்த விவசாயப் பண்னைக்கு நாங்கள் அழைத்துவரப்பட்டோம்.
1970பதுகளின் ஆரம்பத்தில் இருந்தே சிங்கள இனவாதிகளால் தேயிலை ரப்பர் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். அவர்கள் வாழும் பெருந்தோட்டங்களில் உணவு நெருக்கடி ஏற்படுத்தப் பட்டது. அவர்களில் சிலர் அகதிகளாக தங்கள் பெண்டு பிள்ளைகளோடு வன்னி மாநிலத்துக்குப் புலம் பெயரத் தொடங்கினார்கள்.
மலையகத் தமிழர்கள் எங்கள் காட்டுத் தெரு வழியே அகதிகளாக செல்லத் தொடங்கினர். ஒவ்வொரு நாழும் எங்கள் தனிக் காட்டு வீட்டு வாசலில் அகதிகளின் குரல் கேட்கும். மலையக தமிழ் அகதிகள் வரவால் அந்தக் காட்டுக்கும் அம்மாவுக்கும் புது வாழ்வு உருவாகியது. மிழகாய் வெண்காயம்போன்ற பணப் பயிர் செய்கையில் லாபம் அதிகரித்துச் சென்ற அந்த நாட்களில் கூலி ஆட்களின் தட்டுப்பாடுதான் வன்னியின் பெரும் பிரச்சினையாக இருந்தது. மலைய தமிழ் அகதிகளின் வரவு வன்னியின் விவசாய வளற்ச்சியிலும் அரிசி ஆலைகள் போன்ற சிறு கைத்தொழில் வளர்ச்சியிலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. 1970பதுகளின் நடுப்பகுதியில் வீதியால் சென்ற மலையகத் தமிழ் அகதிகளின் தன்னீர்ப் பந்தலாக தங்குமடமாக எங்கள் வீடு மாறியது. இயன்றவரை அம்மா அவர்களுக்கு ஆதரவாக இருந்தாள். அவர்களுக்கு உதவ சொந்த வீட்டிலும் சொந்த பண்னையிலும் திருடினாள்.
மலையக தமிழ் அகதிகளின் வியர்வையிலும் கண்ணீரிலும் வன்னியின் பணப் பயிர் விவசாயம் பொற் சுரங்கமாக மாறிய நாட்கள் அவை. மலையக தமிழ் அகதிகள் வன்னி தோடங்கள் சிலவற்றில் மறுவாழ்வு பெற்றனர். சிலவற்றில் குறைந்த சம்பளம் அதிக வேலை என சுரண்டப் பட்டனர் சிலவற்றில் அவர்கள் கொத்தடிமைகளாக சிதைக்கப் பட்டதைக் கண்டு நானும் என் தோழர்களும் கொதித்தோம். அகதிகளில் சிலர் வடகாட்டிலும் குடியேறினார்கள். இறுதியாக அந்த காட்டின் மத்தியிலும் மக்கள் வாழும் சிற்றூர் ஒன்று மெல்ல மெல்ல உருவாகி வளர்ந்தது.
பொல்லாத விதிக்கு எங்கள் அம்மாவை அடிக்கடி வேரறுக்கவும் அடித்து நொருக்கவும் முடிந்தது ஆனால் ஒருபோதும் அவளை வெற்றிபெற முடியவிலை.
3
1944ல் அம்மாவின் திருமணம் ஒரு விபத்துப் போல நிகழ்ந்தது. திருமண நெருக்கடிகள் உடுவில் மகளிர் கல்லூரி விடுதிக் கதவையும் தட்ட ஆரம்பித்தபோது அம்மா தென் இலங்கைக்கு மாற்றமாகி தப்பிச் சென்றாள். கொழும்பு புறநகார தெகிவளை மகளிர் கல்லூரியில் அவளுக்கு வேலை கிடைத்தது. எனினும் அம்மவின் அண்ணன்மார் அவளது பாட்டியார் மரணமாகிவிட்டதாக பொய் தந்தி கொடுத்து அழைத்து திருமணம் செய்துவைத்து விட்டனர். அம்மாவின் பெண் சுதந்தர வேட்கையே திருமண நிராகரிப்புக்கு காரணமாக இருந்தது. ஆனால் அப்பாவோ தனது கல்வி நிலை காரணமாகவே அம்மா தன்னை நிராகரித்ததாக தவறாகப் புரிந்து கொண்டார். இன்றுகூட ஆண்கள் பலர் தங்கள் வட்டத்தைத் தவிர பெண்களுக்கு வேறு உலகம் இல்லை என்று கருதுகிறார்களல்லவா? இன்றும்கூட ஆண்கள் பலர் பெண்களுக்குத் தாங்கள் மையப்படாத கருத்துக்களும் காரியங்களும் விருப்பு வெறுப்புகளும் கிடையாது என்று நம்புகிறார்கள் அல்லவா?. இந்த ஆண் புத்தி அபத்த புத்தி.
திருமனத்துக்குப் பின்னர் அம்மா அஞ்சியதுபோலவே அவளது கனவுகள் நொறுங்க சிறகுகள் முறிக்கப் பட்டது. அம்மா தனது சிறை இருப்பிலும் இறுதிவரை போராடி தனது இலட்சியங்களைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்தாள் என்பதுதான் சிறப்பு. அவளுடைய ஆற்றலுக்கும் தலைமைப் பண்புக்கும் இலட்சிய நோக்கிற்க்கும் ஓரளவுக்கேனும் பெண்ணுரிமைச் சூழல் உள்ள வீடும் வாழ்வும் அமைந்திருந்தால் மானுடம் பயனுறும் பெருவாழ்வு வாழ்ந்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.
உடுவில் மகளிர் கல்லூரியில் பணிபுரிந்த அமரிக்க பெண்களின் கருத்துக்களும் மகாத்மா காந்தியின் கொள்கைகளும் அம்மாவில் அதிகம் செல்வாக்குச் செலுத்தின. உறுதியான சீர்திருத்த வாதியான அவள் சத்தியம் வெல்லும், சாதகமான மாற்றங்கள் எப்படியும் ஏற்பபடும் என உறுதியாக நம்பினாள்.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வருவாய் மார்க்கங்கள் பெருகி மதியதர வர்க்க வளற்ச்சி துரிதப் பட்டு சுவர்க்கம் எனப்பட்ட யாழ்ப்பாணம் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் நரகமாவே இருந்தது.
இத்தனைக்கும் தென்னாசியாவில் அதிக சமூக பொருளாதார பாதுகாப்புள்ள பெண் சமூகங்களுள் இலங்கைத் தமிழ் பெண் சமூகம் முன்னணியில் இருந்தது. இலங்கையில் மரபுரீதியாக தமிழர்களின் சொத்துடைமை திருமண முறைமை என்பவை பெரிதும் தாய்வழி சமூக அம்சங்களைக் கொண்டிருந்தது. நிலம் வீடு போன்ற சொத்துக்கள் பெரும்பாலும் பெண்ணுக்கே சீதனமாகச் சேர்ந்தது. 1850பதுகளில் ஒரு ஐரோப்பியர் யாழ்பாணத்து நிலங்களில் பெரும்பகுதி பெண்களது உடமையாக இருந்ததை பதிவு செய்திருக்கிறார். யாழ்ப்பாணத்து மரபுச் சட்டமான தேச வளமையின் படி சீதனத்தை கணவன் விற்கவோ பிறருக்கு கொடுக்கவோ முடியாது. அது மரபு ரீதியாக அவர்களது பெண்பிள்ளைகளுக்கும் பின்னர் பெண் பேரப் பிள்ளைகளுக்குமே உரியது. நடைமுறையிலும் சொத்து பகிர்வில் முன்னுரிமையும் பெண்களுக்கே இருந்தது. இந்தியாவைப் போல திருமணத்தின் பின்னர் பெண் கணவனின் விட்டுக்குச் சென்று வாழ்கிற மரபும் இலங்கைத் தமிழர்களிடயே நிலவவில்லை. இலங்கைத் தமிழரது மரபுப்படி கணவன் தனக்கு சீதனமாக கிடைத்த மனைவியின் வீட்டுக்கே செல்கிறான். பெண்களுக்கு இத்தனை சமூக பொருளாதாரப் பாதுகாப்புகள் இருந்த யாழ்ப்பாணத்தில் ஏன் எனது அம்மா பெரியம்மா சின்னம்மா எல்லோரும் மிக மோசமாக ஒடுக்கப்பட்டனர் என்கிற விசாரண எப்பவும் எனக்குள் இருந்தது.
சமூக மாற்றங்கள் பெண்களது தழைகளை அறுத்துவிடும் நிலை ஏற்பட்டபோதெல்லாம் சமய கலாச்சார விவாதங்கள் மேலோங்கின. இத்தகைய விவாதங்களின் கொடுமுடி ஆறுமுக நாவலர் தலைமைதாங்கிய விவாதங்களாகும். இத்தகைய விவாதங்கள் அன்னியர்களையும் அன்னிய சமயங்களையும் குற்றம் சாட்டினாலும் அடிப்படையில் அவர்களது அச்சங்கள் மாற்றங்களுள் சாதிய அமைப்பை மாறாமல் காப்பாற்றுவது பற்றியதே. மொழி கல்விவளர்ச்சி சார்பான நாவலரின் பங்களிப்புகளும் அவரது அன்னிய சமய கலாச்சார எதிர்ப்பும் அவரது பன்முக ஆழுமைகளும் அவரது பிற்போக்கான கருத்தியலை நியாயப் படுத்திவிடாது. நாவலரின் மொழிசார்ந்த்த பங்களிப்புகளைப் பதிவுசெய்வது அவசியம். ஆனால் 1970பதுகளின் பின்னர் முற்போக்கான தமிழ் அறிஞர்கள் சிலர் நாவலரது பிற்போக்கான கருத்தியலையும் இயக்கத்தையும் முற்போக்கான கொலோனியல் எதிர்ப்பு கருத்தியலாகவும் இயக்கமாகவும் அடையாளப் படுத்த ஆரம்பித்தது அதிற்ச்சியும் ஆச்சரியம் தருகிறது.
நாவலரின் இயக்கம் கிறிஸ்துவ சேர்ச்சுகளை எதிர்த்தாலும் உண்மையில் தமிழ் மக்கள் சார்பு பக்தி மார்கமான சிறுதெய்வ கோவில்களையும் வழிபாட்டையுமே திவிரமாக எதிர்த்தது. அடிப்படையில் நாவலரின் போராட்டம் கிராமிய பூசாரிகள் தலைமையிலான கிராமிய கலைகளை வளர்த்த பெண்கள் பங்களிப்புள்ள தமிழ் வழிபாட்டு சிறுதெய்வக் கோவில்களை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து பெரும்பாலும் துடைத்தழித்தது. மக்களிடம் இருந்து வழிப்பாட்டையும் கலாசாரத் தலைமையையும் இலக்கியத்தையும் பிடுங்கி மேல் சாதியனரதும் ஆகமக் கோவிகளின் கையில் களினதும் கைகளில் கொடுப்பதே நாவலர் இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.
தமிழக வரலாற்றிலும் பகுத்தறிவு இயக்கம் சிறுதெய்வ வழிபாட்டினைப் பலகீனப் படுத்தியதன் மூலம் தனது நோக்கத்துக்கு மாறாக ஆகமக் கோவில்களும் சமஸ்கிரதமயமாகுதலும் பலப்பட வழிவகுத்துவிட்டது. நமது கொள்கைகள் எதுவானாலும் நமக்கு முன் உள்ள வரலாற்று தெரிவு மக்கள் சார்ப்பான சிறுதெய்வ தமிழ் வழிபாட்டுக்கும் ஆகம கோவில் சார்ந்த சமஸ்கிரத மயமாதலுக்கும் இடையிலானதுதான். இதில் நடுநிலை வகித்தாலும் நமது தெரிவுமாக சமஸ்கிரத மயமாகலே வெற்றிபெறும்.
அதிஸ்டவசமாக தமிழர்களின் கலைப் பொக்கிசங்கள் செழித்திருந்த மட்டக் களப்பையும் திருகோண மலையையும் வன்னியில் சில பகுதிகளையையும் நாவலரின் செல்வாக்கு பாதிக்கவில்லை. இதனால் இன்று ஈழத் தமிழரின் கலை என்று தலைநிமிர வடமோடிக் கூத்து எஞ்சி உள்ளது. இன ஒடுக்குதலால் கிராமிய விழாக்கள் அமைப்பு குலைந்துபோய் கிராமியக் கலைஞர்களும் அ XXXXXXXXXXXXண்ணாவிமார்களும் அகதிமுகாங்களில் முதுமை அடைந்து காலமாகிற அபாயம் ஏற்பட்டுள்ளபோதும் உதவிகள் ஏதும் இல்லாத நிலையிலும் 1970களில் இருந்தே இக்கலைகளைக் காக்க டாக்டர் மெள்னகுரு போன்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவது நம்பிக்கை தருகிறது. இவ்வகையில் மட்டக் களப்புப் பல்கலைக் களகத்துக்கும் தமிழர்கள் அனைவரும் நன்றி சொல்லவேண்டும்.
தொடற்ச்சியாக தென்னிலங்கையிலும் மலேசிய சிங்கபூரிலும் கேரளத்திலும் இருந்து பாய்ந்த பணத்தினால் யாழ்ப்பானத்தில் மட்டுமீறி நடுத்தர வர்க்கம் வளற்ச்சிபெற்ற சென்ற நூற்றாண்டின் ஆரம்பதிலேயே பெண்கள் விடுதலை செயல்பட்டிருக்க வேண்டும். ஏன் அது இடம்பெறவில்லை? ஏன் எனது அம்மாவின் காலங்கள் துயரமானது? தவறு எங்கே இருந்தது?
விடுதலைக்கு கட்டியம்கூறும் சமூக பொருளாதார மாறங்கள் எல்லாம் பெண்கள் விடுதலைக்கு ஏன் வழி வகுக்கவில்லை? உண்மையில் தென்னாசிய சாதிய சமூகங்களில் பரந்துபட்ட தலத்தில் சமூக பொருளாதார வளற்ச்சியும் புதிய வர்க்கங்களின் எழுச்சியும் இடம்பெறும் வாய்ப்புகள் இல்லை. சகல அபிவிருத்திகளும் சாதி ரீதியாக மட்டுப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் சாதிய சமூகங்களில் சமூக பொருளாதர வளற்சியும் மாற்றங்களும் பரவலான மக்கள் மட்டத்தில் சுதந்தரமாக செயல்பட்டுகிற வாய்ப்பு மறுக்கப் படுகிறது.இப்படி ஒற்றைக் கால் ஒற்றைக் கண் பறிக்கப் பட்டு நொண்டியாக்கப் படுகிற மாறுதல்களுக்கான சமூக பொருளாதார கலாச்சார சக்திகள் பழைய தளங்களை உடைத்துக் கொண்டு எழுகிற வாய்ப்பையும் வீரியத்தையும் இழது விடுகின்றன. இப்படித்தான் வளற்சியை சாதி அடிப்படையில் திசைதிருப்பி பொருளாதார மாற்றங்களில் சமூக கலாச்சார மாறாமையை பரமரிக்கும் சமரசங்கள் மேடை ஏற்றப் படுகின்றன. இதனால் பழைய வர்க்க அமைப்பை உடைத்துக்கொண்டு எழ வேண்டிய புதிய வர்க்கங்கள் சாதிய அடிப்படையில்ருயர் சாதிசார் உயர் வர்க்க அமைப்புடன் சமரசமாக அதன்மீதே நிகழ நிர்பந்திக்கப் படுகிறது. இதுதான் இந்திய சமூகங்களின் மாற்றங்களிலும் மாறா நிலையின் யின் அடிப்படை. எனது அம்மாவும் அவளது தலைமுறைப் பெண்களும் அவலது காலத்தில் தீவிரமாக இருந்த இத்தகைய சமரசங்களால்தான்.
உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட முதல் விடிவு 1930 – 1970களில் தலித்துகளின் தலைவர்களும் கம்யூனிஸ்டுகளும் ஒருசில காந்திய வாதிகளும் முன்எடுத்துச் சென்ற சாதி ஒடுக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களின் வெற்றிகள்தான் காண்கிறேன். சாதிரீதியாக பிழவு பட்டிருந்த தமிழர்கள் பலமான ஒரு தேசிய இனமாக ஒன்றுபட மேற்படி வெற்றிகள் வழிவகுத்தன. பெண்விடுதலையின் குரல்களும் இக்காலக் கட்டதில் இருந்தே யாழ்ப்பாணத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. பின்னர் தென்னிலங்கை கம்யூனிஸ்டுகள் சிங்கள இனவாதிகளுடன் சமரசம் செய்ததால் கம்யூனிச இயக்கம் தோற்றுப் போனது. எனினும் தமிழ் மக்களின் முதல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற திருவாளர்கள் யோவேல் போல், எம்.சி.சுப்பிரமணியம், என்.சண்முகதாசன், என்.ரி.நாகரத்தினம், கே.டானியல், டோமினிக் ஜீவா போன்றவர்களை எமது வீர வரலாற்றின் முன்னொடிகளாக அடையாளப் படுத்த நாங்கள் ஒருபோதும் தயங்கக் கூடாது. இது வீரமிக்க தேசிய இன விடுதலைப் போரட்டத்தின் வரலாற்றுக் கடமையும்கூட.
சாதிய ஒடுக்குதலுக்கான எல்லா தழைகளும் கலாச்சாரமும் இறுதியில் பெண்கள்மீதே பிணிக்கப் படுகிறது. பெண் கற்புப் பற்றிய விவாதங்கள் எல்லாம் அடிப்படையில் சாதிரீதியாக பெண்களை தனிமைப் படுத்தும் விவாதங்கள்தான். இன சாதியவரம்புகளை உடைக்கக்கூடிய மானிடகலசமான கருப்பை இல்லாத ஆணுக்கு கலாச்சாரங்கள் கற்பை வலியுறுத்தவில்லை. நமது பத்தாம் பசலிக் கலாச்சாரத்தில் ஆணுக்கு கட்டில்லை. பெண்னோ கட்டுப்பட்டு இன சாதி தூய்மையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றவெண்டியவள். சமூக பொருளாதார வளற்ச்சி துரிதப் பட்டிருந்த எனது அம்மாவின் காலங்கள் பற்றிய ஆய்வு எனக்கு உணர்த்திய விடயங்கள் இவைதான்.
தாய்வழி சமூக அடிப்படையில் பெண்களது உரிமைகளை உறுதிப் படுத்திய அதே யாழ்பாணத்து தேசவழமைச் சட்டமும் மரபுகளும் தலித்துகள் மீது மிக கொடுமையான ஒடுக்குதலை கட்டவிழ்த்து விட்டிருந்தது. எல்லா இன அமைப்பும் உள்வாரியான சமூக ஒடுக்குதலுக்கு வாய்ப்பளிக்கும் எல்லா கலாசார மரபுகளையும் சட்டங்களையும் பெண்களை ஒடுக்க பயன்படுத்தும். சாதி ஒடுக்குதல் மார்க்கங்கள் எல்லாம் இறுதியில் பெண் ஒடுக்குதலிலேயே போய் முடிவடைகிறது. பெண்விடுதலைக்கு முன்நிற்கிற நமது பெண்கள் அணிகள் பெண்கள் விடுதலையையும் மாற்ங்களையும் விரும்புகிற எங்களது இளைஞரது அணிகள் ஆண் பெண் உறவில் சாதி வேறுபாட்டை தகர்க்காமல் பெண் விடுதலை இல்லை என்கிறதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
4
மாணவப் பருவம் மட்டிலுமாவது கிறிஸ்துவ மிஷனரி¢மாரால் நடத்தப் பட்ட மகளிர் கல்லூரிகளும் - விடுதிகளும் பெண் விடுதலைக் கருத்துக்களின் பசும்தரையாக இருந்தது. திருமணம் வரையேனும்முடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளும் ஆசிரியர்களும் பெண் விடுதலைக் காற்றைச் சுவாசித்தனர். பின்னர் ஐரோப்பியரான லேடி ராமநாதனின் நிர்வாகத்தில் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் ஓரளவுக்கு அத்தகைய சுழல் அமைந்தது என்று அம்மா சொல்லி இருக்கிறாள். வட்டுக்கோட்டையில் இயங்கிய யாழ்ப்பாணக் கல்லூரியும் மதுரை கிறிஸ்துவக் கல்லூரியும் உடுவில் மகளிர் கல்லூரியின் சகோதர நிறுவனங்களாகும்.
யாழ்ப்பாணத்தில் பொருளாதார மேம்பாட்டோடு கலாச்சார பிற்போக்குவாதம் வெற்றிகரமாக கைகோர்த்துக் கொண்டபோது கிறிஸ்துவ நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தின் முதன்மை சமூகத்துடன் சமரசம் செய்துகொண்டன. இத்தகைய சமரசங்கள் காலம் மாறுகிறது என்கிற நம்பிக்கையுடனும் விடுதலைக் கனவுகளுடனும் வாழ்ந்த அம்மாவின் தலைமுறைப் பெண்களையும் நசித்தது. திருமணத்துக்கான நிர்ப்பந்தம் வந்தபோதுளம்மா முதலில் வீட்டைத் துறந்து மகளிர் கல்லூரி விடுதிக்கும் பின்னர் பணி மாற்றம் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் துறந்து கொழும்பு மாநகருக்கும் சென்றாள். ???????????????????????
உடுவில் மகளிர் கல்லூரியின் பக்கத்தில் இருந்த அம்மாவின் வீட்டில் பெண்களும் எல்லோருமே விடுதலைக் கனவுள்ளவர்களாக இருந்தில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. மாணவப் பருவத்திலேயே பிரபல நாட்டிய நாடக கலைஞராக விளங்கிய அம்மாவின் அக்கா லில்லி சின்னம்மா அன்றைய இளைய யாழ்ப்பாணத்தின் கனவுக் கன்னியாக இருந்ததாக பல முதியவர்கள் நேர்காணல்களின்போது சொல்லியிருக்கிறார்கள். லில்லி சின்னம்மா பெண் விடுதலைக்கும் காதலுக்கும் எதிரான சூழலில் இளம்வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்டார். விடுதலை வேட்கையுள்ள அம்மாவின் இரண்டாவது அக்கா நகுலேஸ்வரி (நாகம்மா) திருமணத் தழைக்கு அஞ்சி கன்னியாஸ்திரியாகினார். எனினும் அவரது கதையும் இளம் வயதிலேயே முடிந்துபோகிறது.
அமெரிக்காவில் கற்று சிங்கப்பூரில் டாக்டராக பணிபுரிந்த அம்மாவின் அண்ணன் கனகரத்தினமும் ஆசிரியைகளான (ஒருவர் கன்னியாஸ்திரி) அவளது இரண்டு அக்காமாரும் அடுத்தடுத்து இளம் வயதிலேயே மரணமடைந்து போனார்கள். அந்த சோகத்தில் அம்மாவின் தாயாரும் இறந்து போனாள். தொடர்ந்த மரணங்களால் பணக்கார விவசாயியான எனது பாட்டனார் இடிந்துபோனார். அம்மாவின் குடும்பத்தில் இரண்டு அண்ணமாரும் ஒரு தங்கையும் தம்பியும் மட்டுமே எஞ்சி இருந்தார்கள்.
இலங்கைவாழ் தமிழர்களைப் பொறுத்து வடகிழக்கு மாகாணங்களில் வாழும் இலங்கைத் தமிழர் மத்தியில் அகவாழ்வில் தாய்வழி சமூக அமைப்பின் செல்வாக்கு வலுவாக இருந்தது. தமிழகத்தில் போல திருமணத்தின் பின்னர் பெண் தனது கனவனின் வீட்டுக்கு சென்றுவாழும் மரபு இல்லை. பதிலாக பெண்ணுக்கு சீதனமாக வீடும் நிலமும் கொடுக்கப் படுகிறது. நடைமுறையில் சொத்தில் பெண்பிள்ளைகளின் சீதனம்தான் முன்னுரிமை பெறுகிறது. சீதணத்தில் ஆண் கைவைக்க முடியாது. ஒப்பீட்டு ரீதியாக இத்தகைய அமைப்பில் பெண்ணுக்கு அக வாழ்வு ரீதியான பாதுகாப்பு அதிகம் என்பது உண்மைதான். எனினும் புற வாழ்வில் யாழ்பாணத்து ஆண் அதிக்க சாதி ஆதிக்க கலாசாரம் பெண்ணையும் ஒரு சாதிபோல ஆறாவது வர்ணமாக தாழ்த்தியே வைத்திருந்தது.
மேம்பட்ட கல்வியும் உள்வாரி வெளிவாரி புலப் பெயர்வுகளின் தாக்கமும் மத்திய தர வர்க்க எழுச்சியும் சாதி மற்றும் பெண்கள் விடுதலை கருத்துக்களின் நாற்றாங்கால்கள் ஆயின???????????????????????????????????
இப்படியே விட்டுவிட்டால் அம்மாவின் தங்கை கனகம்மாவும் அதே பாதையில் போய்விடுவாளென என் பாட்டனார் கவரமடைந்திருந்தார். ஒருநாள் என் சின்னம்மா, மண் விளையாடிக் கொண்டிருந்த போது, சின்னம்மாவை அவசரம் அவசரமாக பிடித்துக் குளிப்பாட்டி, தனது நிலத்தில் வேலைசெய்த உறவுக்காரப் பையனுக்கு அவசரத் திருமணம் செய்து வைத்துவிட்டார். திருமணம் முடிந்த கையோடு மகிழ்ச்சியுடன் மீண்டும் மண் விளையாட ஒடிய சின்னம்மாவை துரத்திப் பிடித்த உறவினர்கள் “நீ இனி சின்னப் பிள்ளையல்ல கல்யாணமான குடும்பப் பெண்,” என்று அறிவுரை(?) கூறினார்களாம்.
அம்மாவின் தாயார் உடுவில் கிராமத்தைச் சேர்ந்தவரென்பதை ஏற்கனவே குறித்துள்ளேன். அம்மாவின் தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்த பிரபல சித்த சக ஆயுர்வேத மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். செங்கமாரி (Hepatitis) நோய்க்கு கீழ்காய் நெல்லியை அடிப்படையாக கொண்டு வைதியம் செய்வதில் அவர்கள் குடும்பம் முன்னிலை வகித்தது. 1930களின் ஆரம்பத்தில் அலோபதி டாக்டராக பணிபுரிந்த கனகரட்ணம் மாமா விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருக்கு கீழ்காய் நெல்லி அடிப்படையிலான குடும்ப வைத்தய சூத்திரங்களை அறியும் நோக்குடன் குடும்ப வைதிய ஏடுகளை தேடி நெடுந்தீவு சென்றிருந்தபோது யும் நோக்கில் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்திருந்தபோது “””””””””””””””””””””””””””
திருமணத்தின் பின்னர் சிறகுகள் யாவும் நொறுக்கப்பட்டு, சமையலறை மூலையில் வீசப்பட்ட அம்மாவின் வாழ்க்கை நெறி எது? அதன் கருத்தியல் எது என்ன? அது எப்படி உருவானது?.
x
எனது அம்மா ஏழு பிள்ளைகள் பெற்று எட்டு பிள்ளைகளை வளர்த்து ஆளக்கியிருக்கிறாள். ஈழத்து நியதிபோல ஏழு பிள்ளைகளுமே வெளிநாட்டுகளில் சிந்திச் சிதறிப் போய்விட்டார்கள். வளர்த்த எட்டாவது பிள்ளையும் எட்ட இருந்தான். இருந்தபோதும் பெரும்பாலான ஈழத்து பெற்றோர்களைவிடவும் எனது அம்மாவும் அப்பாவும் அதிர்ஷ்டக் காரர்களாய் இருந்தார்கள். எனது தம்பி பாரதிதாசன் தான் அதற்குக் காரணம். சற்றும் யோசியாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு 2001 ஆகஸ்டில் இலங்கை சென்றவன் தொடர்ந்து கடந்த 6 வருடங்களாக அப்பா அம்மாவின் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கிறான். அதற்காகத்தான் திருமணம்கூட செய்யாமல் இருந்தான் என்று தோன்றுகிறது. பிறாங்பேட் பல்கலைக்களக பழைய மானவனும் ஜெர்மனிய பிரசையுமான அவன் முன்னர் “கடைசி காலத்தில் அம்மா அப்பாவோடு போய் இருப்பேன்” என்று சொல்கிற போதெல்லாம் நாங்கள் யாரும் அது சாத்தியமானது என்று கருதியதுமில்லை பொருட்படுத்தியதும் இல்லை. இலங்கை தமிழரின் வளமைபோல புலம் பெயர்ந்துள்ள பிள்ளைகளில் ஒருவரின் வீட்டுக்கு அழைத்து வைத்திருப்பதுதான் எங்கள் திட்டமுமாக இருந்தது.நாங்கள் இந்தியா, நோர்வே, ஜெர்மனி, லண்டன், பிரன்ஸென சிதறி இருந்தோம். அழைப்பது தொடர்பான ஆரம்ப பிரச்சினைகள் தீர்ந்தபோது தங்கள் கடைசி காலத்தை வடகாட்டில் உள்ள பண்ணையில் கழிக்கிற விருப்பத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இந்த நிலையில் பாரதி ஜெர்மனியில் இருந்து திரும்பிவந்து அம்மா அப்பாவுடன் இணைந்து கொண்டான். பாரதி 2001ன் செப்ரெம்பரில் அவர்களை இந்தியா அழைத்து வந்தபோது நானும் சென்னையில் இருந்தேன். சென்னையில் எனது சகோதரி ராதாராணி நடராசா 1989ல் இருந்து சென்னையில் வசிக்கிறாள்.அப்பாவுக்கு அப்பலோ வைத்திய சாலையில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த ஒரு சிறுநீரகம் அகற்றப் பட்டது. அப்பா இலங்கைக்கு போக வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். சென்னையின் வறண்ட சுவர்த் தோப்புகளுக்கும் செழித்த வன்னிக் காட்டு பண்ணைவீட்டுக்கும் இடையில் தேர்வு அவர்களுக்கு மிகவும் இலகுவானதாக இருந்தது. அம்மா மட்டும் இலங்கையில் எங்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை வரலாம் என்கிற அச்சத்தில் இந்தியாவில் இருக்க அரைமனசுடன் சம்மதித்தாள். சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். அவர்கள் சென்னையில் ஏறக் குறைய இரண்டு வருடங்கள் இ¢ருந்தார்கள்.
இக்காலத்தில் அவர்கள் சென்னைக்கு முன்றுதடவைகள் வருகை தந்திருக்கிறார்கள். கடைசித் தடவை தம்பி பாரதியும் அவர்களும் முன்று வருடங்கள் (199 – 199 ) சென்னையில் வாழ்ந்திருக்கிறாள். நாங்கள் பாதுகாப்புக் கருதி அவர்களைச் சென்னையில் வைத்திருக்கவே விரும்பினோம். அப்பா திரும்ப வன்னிக்குப் போகிற பிடிவாதத்தில் இருந்தார். அம்மா எங்கள் பாதுகாப்பு கருதி சென்னையில் இருக்க அரைமனசுடன் இணங்கினாள். இந்த தருணத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டு சொந்தக்காரரின் தந்தையார் காலமாகினாஅர். என்னோடுகூட பெசன்ற் நகர் மின் சுடுகாட்டில் நடந்த ஈமைக் கிரிகைகளுக்கு தானும் வர அம்மா விரும்பினாள். அம்மாவுக்கு அவர்கள் யாரையும் தெரியாது என்னினும் அம்மா பிடிவாதமாகக் கேட்டதால் அவளையும் அழைத்துச் சென்றாள். மின் சுடலையில் இடம்பெற்ற எல்லா சடங்குகளையும் அமைதியாக கவனித்துவந்தவள் திடீரென நடுங்கத் தொடங்கினாள். உடல் மின் சூழையுள் தள்ளப் பட்டு நீறாக்கப் படுகிறதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “இங்கிருந்தால் என்னையும் இதற்குள்தான் வைப்பீர்கள். எனக்கு விறகில் எரிய வேண்டும். என்னை ஊருக்கு கொண்டுபோங்கள்” என தீர்க்கமாக சொன்னாள். நான் அவளை தேற்றும் முகமாக “இல்லை அம்மா உனக்கு சந்தண விறகு அடுக்கி நீ விரும்பும் முறைப் படி ஈமக் கிரிகைகள் செய்வோம்” என வாக்குறுதி அளித்தேன். சென்னையில் அது சாதியமென்ன்று அம்மா நம்ப தயாராக இல்லை. அவள் திரும்பவும் வன்னியில் உள்ள தனது அசோக வனத்துக்குப் போகிற தீர்மானத்தில் இருந்தாள். அம்மாவோ நினைத்ததை என்ன விலைகொடுத்தும்
பிடிவாதமாக அடைந்து விடுகிற பெண்.
நெடுங்காலமாக எமது பெற்றோர்கள் வசித்து வருகிற விவசாய பண்ணை வீடு போராளிகளின் கட்டுப் பாட்டில் உள்ள வன்னி மாநிலத்தின் மேற்கு பகுதியில் இருக்கிறது. ஈழத்தமிழனின் விதிபோல பிள்ளைகள் யாவரும் இந்தியா நோர்வே ஜெர்மனி பிரான்ஸ் பிரிட்டன் என்று அகதிகளாக சிதறிப்போய் விட்ட பின்னர் எனது பெற்றோர் தனிமைப் பட்டு விட்டனர். எனது மைத்துணியின் மகளான சசிதான் அம்மா அப்பாவுக்கு உதவியாக இருந்தாள். இந்த நிலையில் 2001ல் ஜெர்மனியில் இருந்து சென்ற எனது கடைசித் தம்பி பாரதி அப்பா அம்மாவோடு சேர்ந்துகொண்டான்.
எனது அம்மாவின் குடும்பக் கதை கிளற்ச்சியும் சோகமும் நிறைந்தது. அம்மாவின் தாய் வழிப் பாட்டன் உடுவில் கிராமத்தைச் சேர்ந்தவர். இலங்கை சிங்கபூர் இடையே ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரும் செல்வந்தராக இருந்தவர் அம்மாவின் தாய்வழிப் பாட்டியை இரண்டாம் தாரமாக காதல் திருமனம் செய்துகொண்டார். நெடுந்தீவைச் சேர்ந்த எனது அம்மாவின் பாட்டிய 1890களில் உடுவில் மகளிர் கல்லூரியில் சிற்றூளியராக இருந்திருக்கிறார். இப்படி ஆரம்பத்தில் இருந்தே உடுவில் மகளிர் கல்லூரி எங்கள் அம்மாவின் இளமைக் காலக் கதையின் களனாக அமைந்திருந்தது.
எனது அம்மாவின் சின்ன வயது வாழ்க்கையும் கிளற்ச்சி மிக்கதாகவே இருந்தது. அந்த நாட்களில் பெண்களுக்குப் பொதுவாக பூப்படைந்த நாட்களில் இருந்தே கலாச்சாரம் அடிமைத் தளையாகிவிடும். பெண்கள் கல்வியைத் தொடர்வது சிரமமாகும். பதின்நான்கு பதினைந்து வயதுகளுக்கு முன்னமே பெண்களுக்கு திருமணமும் செய்து வைத்து விடுவார்கள். அந்த நாட்களில் சிறுவயது விவாகத்தில் இருந்து தப்பிப்பதற்க்காகவும் கல்வியை தொடர்கிறதற்க்காகவும் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரிகளை தஞ்சம் அடைந்த சுதந்தர உணர்வு கொண்ட பெண்களுள் என் அம்மாவும் ஒருத்தி. கிறிஸ்தவ பெண்கள் கல்லூரிகளுக்கு வெள்ளையர் அரசில்
செல்வாக்கு இருந்ததால் சட்டப்படியான திருமணவயதுவரை காத்திருக்கும்படி மாணவிகளின் பெற்றோரை நிர்ப்பந்திக்க முடிந்தது. அல்லது தங்கள் விடுதிகளில் உதவி கோரும் மாணவிக்கு அடைக்கலம் தர முடிந்தது.
வீடு உடுவில் மகளிர் கல்லூரிக்கு பக்கதில் இருந்ததால் எனது இரண்டு பெரியம்மாக்களும் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு மேற்படிப்பு படித்தார்கள். அம்மாவும் அந்த வழியைத் தொடர்ந்தவர்தான்.
லில்லி சின்னம்மா அந்த நாட்களில் யாழ்பானத்தில் பிரபலமான மாணவியாக இருந்த எனது மூத்த பெரியம்மாவின் பெயர். பேரழகியான அவர் கல்லூரி நாட்களில் ஆடலிலும் நாடகத்திலும் புகழ் பெற்றிருந்தார். லில்லி சின்னம்மா நடித்து யாழ்பாணம் முழுவதும் 1920பதுகளில் மேடையேற்றப் பட்ட உடுவில் மகளிர் கல்லூரி நாடகம் பற்றி 1990களில் நான் பேட்டி கண்ட 90 வயது பெரியவர் ஒருவர் தெரிவித்த விடயங்கள் சுவாரஸியமானவை.
அந்த நாட்களில் மாணவி லில்லிச் சின்னம்மா யாழ்பாணத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்திருக்கிறார்.
சின்ன வயதுகளிலேயே போராட்ட அரசியலால் ஈர்க்கப் பட்டு ஊர்ப் பெரிசுகளதும் தந்தையர்களதும் கோபத்துக்கு ஆளாகி பொலிஸ் தொல்லைகளோடு வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தால்தான் அம்மாவின் அருமை தெரியும். எனது அம்மா பருந்துகளுடன் போராடி தன் குஞ்சுகளைக் காப்பாற்றும் பறவை போன்று எங்களைக் காப்பாற்றியவள். வீட்டில் அப்பா கழுகுபோல இருந்தார்.
அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் கற்று திருமணம் வரை அங்கேயே ஆங்கில ஆசிரியராக பனிபுரிந்தவர். சிறுவது முதலே ஆடல், பாடல் நாடகம் என ஈடுபட்டு அந்த கிறிஸ்துவ பெண்கள் கல்லூரியின் புகழ் பெற்ற மணவியாக இருந்தார். அப்பா வர்த்தக நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே பெரும் தனவந்தராக மேம்பட்டவர். கேழ்வி ஞானம் மிக்கவர். அவருக்கு தமிழிலும் சிங்களத்திலும் நல்ல புலமை இருந்தது. அம்மா கல்விமூலமும் அப்பா கேள்வி மூலமும் கவிதையிலும் காவிய இலக்கியங்களிலும் நல்ல தேற்ச்சி பெற்றிருந்தார்கள். அது ஒன்றுதான் அவர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை.
விபத்துப்போல நடந்துவிட்ட திருமணத்தின் பின்னர் அப்பா தழ்வுச் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அம்மாவின் ஆசிரிய தொழில் முதல் பலியானது. அம்மா இரண்டாவது பலி. மூன்றாவது பலி எங்களது கல்வி. சின்னவயதில் இருந்தே காரண காரியமில்லாமல் உதைபடும் அம்மாவை பார்த்தது வளர்ந்ததுதான் என்னை கோபக் காரனாக ஆக்கியிருக்க வேண்டும்.
----------------------------------------
பெருந்தெய்வ வழிபாடும் வெள்ளாளரின் தொகை நில உடமை சார் தனி ஆதிக்கமும் மேம்பட்டிருந்த யாழ்பாணத்தின் நிலமற்ற கோ
இந்திய வம்சவளியினரான மலையக தமிழர்களைப் பொறுத்து எண்பது விழுக்காடு தமிழகத்து வரண்ட மாவட்டங்களின் சாதிரீதியாக ஒடுக்கப் பட்ட கிராமிய உழைப்பாளர் சமூகங்களில் இருந்து வந்தவர்கள். சிறுதெய்வ வழிபாடு சார்ந்த அவர்களது கலாச்சாரத்தில் ஒப்பீட்டு ரீதியாக பெண்களுக்கான வெளி (space) அதிகம். அவர்கள் வேலை செய்த தேயிலை ரப்பர் பெருந்தோட்டங்களில் நிலம் கம்பனியதும் கலச்சாரம் தொழிலாளர்களதும் கட்டுப்பாட்டில்மிருந்தது. அவர்களுக்கு கம்பனிக்குச் சொந்தமான ஓர் அறை வீடுகள் வளங்கப் பட்டதி பெரும்பாலும் தனிக்குடித்தன வாய்ப்பிருந்தது.
மலையகப் நூறு விழுக்காடு சம்பளம் உழைக்கும் தொழிலாளர்களாகவும் தொழிற் சங்க அங்கதித்னராகவும் முன்னணிப் போராளிகளாகவும் இருக்கிறதில் புற வாழ்வில் வல்லமை பெற்றிருந்தனர்.
3
கடந்த ஆடி மாதத்தில் இருந்தே இறுதி நாட்களிலாவது அம்மாவைச் சென்று பார்த்திட முடியும் என்கிற நம்பிக்கை ஆவலுடன் நான் சென்னையில் தங்கியிருந்தேன். பல்வேறு தரப்பு நண்பர்கள் குறிப்பாக எனது முஸ்லிம் சிங்கள நண்பர்கள் விமர்சிக்கும் தமிழ் கலைஞர்களையும் தமிழ் அறிஞர்களையும் மகிந்த ராஜபக்ச அரசு குறிவைத்திருக்கிறது. “இப்போது இலங்கை வருவது உனக்குப் பாதுகாப்பில்லை” என என்னை தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். மிகுந்த சிரமங்களுக்கிடையில் எனது தம்பி பாரதிதாசன் நோய்வாய்ப் பட்டிருந்த அம்மாவை கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து செஞ்சிலுவைச் சங்க அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்திய சாலைக்கு எடுத்துவந்திருந்தான்.
அம்மா எப்போதும் தன்னை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்கிறவளல்ல. அவளை இரத்தப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதென்றாலும்கூட நிறைய போராட வேண்டியிருந்தது. “கடவுள் தந்த உடலை குத்திக் கிழிக்காமல் என்னை இப்படியே போக விடுங்கள்”, என சண்டைபோடுவாள். “ஏழை சனங்களுக்கு எங்கே பரிசோதனைகளும் வைத்தியங்களும் நடக்கிறது? என்னையும் அவர்கள் போல போக விடுங்கள்”, என்று என்னுடன் ஒருமுறை பெரிய சண்டை போட்டாள். பலகீனமாக இருந்தபோதுகூட பிடிவாதமாக தனது ஆடைகளைத் தானே துவைப்பாள். இறுதிவரை பிடிவாதமாக தனது வேலைகளை தானே செய்தாள். நிலத்தில் மட்டுமே படுப்பாள். கேட்டால் சின்ன வயசில் மகாத்மா காந்திக்கு மாலை போட்டேன். சாகும் வரை அவரைப் போலவே வாழ்வேன் என்று பிடிவாதமாகச் சொல்வாள். அவளுடைய பிடிவாதத்தால் இந்தியாவிலும் கொழும்பிலும் இருந்தபோது ஏற்பாடு செய்த சிறந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு அவள் ஒத்துழைக்கவில்லை. ஒத்துழைத்திருந்தால், நிச்சயமாக இன்னும் சிறிதுகாலம் வாழ்திருப்பாள்.
முதலில் அம்மா கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டாள். அங்கு அவரது சுவாசப் பை பாதிக்கப் பட்டிருந்தமை கண்டு பிடிக்கப் பட்டது. மேற்க்கொண்டு கிளிநொச்சி வைத்திய சாலையில் எதுவும் செய்ய முடியாத நிலமை. அரசின் தடைகளால் அங்கு போதிய மருந்துகளும் மருத்துவக் கருவிகளும் இல்லை. கடுமையான நோயாளிகள் எல்லோருக்கும் தமிழ் பகுதியில் இருந்த பெரிய வைத்திய சாலையான யாழ்பாணம் வைத்திய சாலைதான் விருப்பத் தேர்வாக இருந்தது. ஆனால் அரசு யாழ்பாணம் செல்லும் எ 9 பதையை மிலேச்சத் தனமாக மூடி வைத்திருந்தது. அடுத்த பெரிய வைத்திய சாலையான அனுராதபுரம் வைத்தியசாலையோ சிங்கள இனவெறியர்களின் கோட்டையாக இருந்தது. கிளிநொச்சி வைத்தியசாலை வடாரம் குண்டு வீச்சுக்கு இலக்கான அன்று எனது தம்பி பாரதிதாசன் வேறு வழி இன்றி வன்னிமாநிலத்தின் எல்லையில் அரசு கட்டுப்பாட்டில் இருந்த வவுனியா நகர வைத்திய சாலைக்கு அம்மாவை கொண்டு வந்தான். அந்த குண்டு வீச்சில் எனது தூரத்து உறவினர்கள் சிலரும் கொல்லப் பட்டனர். அதிர்ஷ்ட வசமாக அந்தக் குண்டுவீச்சில் இருந்து தப்பியவர்களுள் எனது தம்பியும் ஒருவன்.
அம்மா காலமாவதற்கு இரண்டுநாள் முன்னர்தான் அவளோடு தொலைபேசியில் பேசினேன். ஒருபோதும் இங்கே வந்துவிடாதே என்றுதான் அவள் திரும்ப திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தாள். அம்மாவோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய இரண்டாவது நாள் 8.11.2006 புதன்கிழமை காலையில் அம்மா உயிர் நீத்த துயரச் சேதி கிடைத்தது. மாரி காலத்து காலைப் பொழுதொன்றில் போர்க் களமாகச் சிதைந்திருந்த ஈழத்தின் தென் எல்லை நகரமான வவுனியா வைத்தியசாலையில் எனது மைத்துனியின் மகள் சசியின் அன்பான அரவணைப்பில் எனது அம்மாவின் இதயத் துடிப்பு ஓய்ந்தது. கடைக் குட்டியான பாரதியை தவிர வேறு பிள்ளைகளுக்கும் அம்மாவின் கடைசித் தருணங்களில் அவளுடன் இருந்து வழி அனுப்புகிற பாக்கியம் கிட்டவில்லை. எனது நான்கு தங்கையர்களில் ஒருத்தி மட்டும் லண்டனில் இருந்து சென்று ஒருவாறு அம்மாவின் ஈமைக் கிரிகைகளில் கலந்துகொள்கிற அதிர்ஷ்டத்தைப் பெற்றாள்.
அம்மா நீ கண்மூடியபோது இலங்கையில் காலைப் பொழுது. நோர்வேயிலோ கடைச் சாமம்.அந்தச் சமயம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த என் இளைய மகன் யாரோ தன் காதுகளை வருடியதை உணர்ந்தானாம். தொடர்ந்து கால்களை தடவும் உணர்வில் அவன் திடுக்குற்று விழித்தபோது சிவப்பு சேலையுடன் ஒரு பெண் வெளியேறுவதை கண்டிருக்கிறான். அதன் பின் அவனால் தூங்க முடியவில்லையாம். என் அம்மாவின் மரணச் சேதியைச் சொல்ல நோர்வேயில் வாழும் என் குடும்பத்தினரை தொலைபேசியில் அழைந்தபோது என் மனைவி இளைய மகனின் தரிசனம் பற்றிய சொல்லி ஆச்சரியப் பட்டாள். என்மகனும் அழுதபடி தன் காட்சி பற்றி விவரித்தான். ஐயோ அம்மம்மாவை போய் பார்த்திருக்கலாமே என அவன் அழுதான். இதுதான் பிராங்பேட்டிலும் கனடாவிலும் கூடியிருந்த எல்லா பேரப் பிள்ளைகளினதும் ஓலமாக இருந்தது. பின்னர் நான் பாரதியை அழைத்து என் மகனின் காட்சி பற்றிய சேதியைச் சொல்லிய போது அவன் “அண்ணா அம்மா சிவப்பு சேலைதான் கட்டியிருக்கிறாள்” என உடைந்து அழுதான். வாழ்வின் இத்தகைய புதிர்களை யாரோ விடுவிக்க வல்லவர்கள்??
என் அருமை அம்மா, கொடுங்கோல் அரசின் கொலைக் கரத்துக்கு அஞ்சி நேரில் வந்து உன்னை வழியனுப்ப முடியவில்லை என்பதுதான் உன் மரணத்தில் எனக்கு நேர்ந்த பெருஞ்சோகம். அம்மா நீயும்தானே வார்த்தைக்கு வார்த்தை என்னை வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாய். ஆறு வருடங்கள் உன்னோடு வாழ்ந்த பாரதிக்கும் லண்டனில் இருந்து உனது மரணச் சடங்கிற்க்கு வந்த சகோதரி லலிதாவுக்கு மட்டும் உனது திரு உடலில் கண்ணீர் வடிக்கும் பாக்கியம் கிட்டியது. உலகம் முழுவதும் சிதறிக் கிடந்த ஏனைய உனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சென்னையிலும் பிராங்பேட்டிலும் ஒஸ்லோவிலும் ரொரன்ரோவிலும் துயர் பகிர ஒன்றுகூடினோம். ஓயாமல் தொலைபேசியில் மாறி மாறி தொடர்புகொண்டு கண்ணீர் சிந்தினோம்.
அம்மா உனது மரணச் சடங்கில் கலந்துகொண்டு அழுது ஆறுதல் அடைகிற பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. கொடுங்கோன்மை நம்மை சிதறியது மட்டுமன்றி தொடர்ந்தும் குதறிக் கொண்டும் இருக்கிறது. உன்னை வந்துபார்க்கிற வாய்ப்பையும்கூட அது பறித்துக்கொண்டது. எல்லாம் முடிந்துவிட்டது. நிச்சயம் உன் அசோக வனத்துப் பறவைத் தோழிகளுக்கு ஆறுதல் சொல்ல நானும் என் சகோதரர்களும் உன்னுடைய அனைத்துப் பேரப் பிள்ளைகளுடனும் வன்னிக்கு வருவோம். அந்த நாளில் உன் சமாதியையாவது முத்தமிட்டு கண்ணீர் வடித்து உன் கதைகள் பேசி மனம் ஆறுவோம்.
----------------------------------
ஆற்றல்மிக்க எங்கள் அம்மா ஒரு சாதாரண வீட்டு பெண்ணாக இருக்க விதிக்கப் பட்டாள். ஒரு ஆணாக இருந்திருந்தால் தியாகமும் தலைமைப் பண்புகளும் மிக்க அவளது வாழ்வும் வரலாறும் வேறுமாதிரி அமைந்திருக்கும். அவளது ஆளுமைக்கு திருமண வாழ்வு தந்த பரிசு ஓயாத அடியும் கொடுமைகளும்தான். எனினும் அம்மா அத்தனை இலகுவில் பணிந்து போகிற பெண்ணல்ல. இளமையில் திருமணத்துக்கு இணங்காமல் வீட்டுடன் முரண்பட்டுக் கொண்டு கல்வி, கல்லூரிக் கலை நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகள் என துடிதுடிப்பாக இருந்திருக்கிறாள். வீட்டில் நெருக்கடிகள் அதிகரிக்கிறபோது அவளுக்குப் புகலிடமாக உடுவில் மகளிர் கல்லூரி விடுதிக் கதவுகள் திறந்து கிடந்தது.
1927ல் மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். 1930பதுகளில் இருந்து அரை நூற்றாண்டுகளாக இலங்கை தமிழரது அரசியலில் செல்வாக்குச் செலுத்திய காந்திய வாதத்தினதும் அறவழி சத்தியாக்கிரக போராட்டங்களினதும் மகத்தான வரலாறு காந்தியின் மேற்படி வருகையுடந்தான் ஆரம்பிக்கிறது.
நான் அறிவறிந்த காலத்தில் இருந்தே தினமும் சூரியனை முந்திக்கொண்டு எழுந்து முற்றம் பெருக்குவதுதான் அம்மாவின் பொழுதுபோக்காக இருந்தது. முதலில் உடுவில் கிராமத்தில் அடுத்து நெடுந்தீவில் பின்னர் வன்னியில் என்று அவள் அதிகாலையில் விளக்குமாறும் கையுமாக முற்றம் பெருக்கியபடி மரங்களோடும் பறவைகளோடும் துயில் கலையும் சூரியனோடும் மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிற காட்சிகள்தான் நினைவில் நிறைகிறது. அடுப்பில் தேனீருக்காக கொதித்துக் கொண்டிருக்கும் வென்னீரின் சுருதி முற்றதில் நிறையும். முற்றம் பெருக்கும் விளக்குமாறும் தாளம் பிசகாமல் அசையும். சிலசமயம் அம்மா தன்னை மறந்து தனது கல்லூரிக் காலத்து தமிழ் பாடல்களையோ அல்லது ஆங்கிலப் பாடல்களையோ பாடுவாள். எப்போதும் எங்கள் நலன் கருதி வாழ்ந்த எங்கள் அம்மா தொடர்ந்தும் இல்வாழ்வின் கொடுமைகளை தாங்குவதற்க்கான பலத்தை அதிகாலைகளிடமிருந்துதான் பெற்றாள் என்று தோன்றுகிறது.
போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிக்காட்டின் நடுவே நெடுஞ்சாலையில் அமைந்திருந்த எங்கள் பண்ணை வீட்டு முற்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட முதிய அசோக மரங்கள் நிரையாக நிறைந்து நிற்கின்றன. அவற்றுடன் கிணற்றடியில் நெல்லிமரம், வேலியில் தேக்க மரங்கள் பக்கவாட்டில் பனை தென்னைகள் என எங்கள் வீட்டு முற்ற வெளி ஒரு சோலையாகவே செழித்திருக்கிறது. சீதையைப் போல அம்மா வாழ்ந்த அந்த அசோக வனத்தில் எப்பவும் அணில்களுக்கும் அருகிய பச்சைப் புறாக்களும் கானத்துப் பறவைகளும் ஆட்டமும் பாட்டுமாக நிறைந்திருக்கும். சில சமயங்களில் அதி காலையிலும் மாலையிலும் வீட்டின் பின் பக்கமாக தோகையை நெளி¢த்தபடி மயில்கள் வரும். இருளில் பின் புறமாக பண்ணைக்கு வரும் இரவு விருந்தினர் பட்டியல் முயல்கள் மான்கள் காட்டுப் பன்றிகள் முள்ளம் பன்றிகள் யானைகள் என நீளும். ஒரு தடவை நள்ளிரவில் எங்கள் ஆட்டுப் பட்டிக்கு சிறுத்தைப் புலிவந்துவிட்டது. அம்மா அதனை சுட்டுக் கொல்ல அனுமதிக்காமல் தீப் பந்தத்தால் மிரட்டி விரட்டியிருக்கிறாள்.
எங்கள் முற்றத்து அசோக வனமும் அங்கு வசிக்கும் தேவதைகளும்தான் என் அம்மாவின் தோழிகள். விடிந்தும் விடியாததுமான காலைப் பொழுதில் எழுந்து காணியின் இரும்பு கேற் படலையை திறந்து விட்டு முற்றத்தைப் பெருக்க ஆரம்பிப்பாள். உண்மையில் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் அவள் தடி விளக்குமாறும் கையுமாக அந்த அசோக வனத்தில் இயற்கை அழகில் லயித்து இழந்த தன் இளமையை மீட்டு நெஞ்சத்தால் வாழ்ந்து குதூகலிப்பாள். பொல பொல வென பொழுது விடிகிறபோது அயலில் உள்ள பெண்கள் தண்ணீர் மொள்ள எங்கள் காணிக்கு வருவார்கள். அவர்கள் அம்மாவுக்கு ஊர் புதினங்கள் சொல்லுவார்கள். இனி நெடுங்காலத்துக்கு அந்த அசோக வனத்து பறவைகள் காலைப் பொழுதுகள் தோறும் தங்கள் இனிய தோழியை தேடித் தவித்திருக்கும். நீர் மொள்ள வரும் பெண்களும் அந்த அசோக வனத்தில் கால் வைக்கிறபோது அம்மாவை நினைத்து ஒருகணம் உறைந்து போவார்கள்.
2
முதலில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அம்மா காச நோயால் பாதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகித்தார்கள். பின்னர் வவுனியா வைத்தியசாலையில் அம்மாவுக்கு சுவசப்பை புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அந்தச் சமயம் அம்மாவை பார்கிறதற்க்கு இலங்கை செல்லும் விருப்பத்தோடு
சென்னையில் காத்திருந்தேன். என்னை இலங்கை வரவேண்டாம் என எல்லாத் தரப்பில் இருந்தும் எச்சரித்தபடி இருந்தார்கள். கொழும்பில் உள்ள மேல் மட்ட தொடர்புகளைக் கொண்டுள்ள எனது முஸ்லிம் நண்பர்களும் இப்போதைக்கு கொழும்புக்கு வந்துவிடாதே என்றார்கள். இத்தகைய எச்சரிக்கைகளை வெறும் ஊகம் மட்டும்தான் என்று புறம் தள்ளிவிடவும் முடியவில்லை.
அம்மா காலமாவதற்க்கு இரண்டுநாள் முன்னாடி சென்னையில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு அவளுடன் பேசினேன். விரைவில் உன்னைப் வந்து பார்க்கிறேன் அம்மா என்று நான் கூறியபோது அம்மாவும் பதட்டப் பட்டாள். அவள் தனது இறுதி நாட்களில்கூட தன்னைப் பற்றி கவலைப் படாமல் என்னைப் பற்றியே கவலைப் பட்டாள். தனது மரண வேதனைகளை மறந்துவிட்டு அந்த நிலமையிலும் “இங்கு உனக்கு பிரச்சினை, நீ ஒருபோதும் இலங்கைக்கு வந்துவிடாதே” என்று என்னிடம் மன்றாட தொடங்கிவிட்டாள். அவள் எப்பவும் இப்படித்தான். பருந்துகள் மத்தியில் ஓயாமல் போராடி தன் குஞ்சுகளை காப்பாற்றும் ஒரு பறவைபோலவே அவள் எங்களைக் காப்பாற்றினாள்.
எனது பணக்கார அப்பா நானும் எனது சகோதரர்களும் கல்வி கற்பதை விட்டு விட்டு சிறுவயதிலேயே வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் என முரட்டுத் தனமாக விரும்பினார். படித்த என் அம்மாவுக்கும் பணக்காரரான எனது அப்பாவுக்கும் இடையில் எப்பவும் ஒரு பனிப்போர் நடந்தது கொண்டிருந்தது. எனது தம்பி பாரதியை பள்ளிக்கு ஒழுங்காக போக விடாமல் வருடத்தில் பாதி நாளாவது தனது அரிசி குத்தும் ஆலையில் வேலைசெய்யவைத்து விடுவார். எங்கள் கல்விக்காகவே அம்மா நிறைய போராட வேண்டி இருந்தது. சிறுவயதில் ஆரம்பித்து இருந்தே போராடி வாழ்ந்த எனது அம்மாவை ஒரு ஆரம்பகால பெண்விடுதலை ஆர்வலர் என்று தயக்கமின்றிக் கூறுவேன். அவள் வீட்டில் அப்பவால் மிக கொடூரமாகத் தாக்கப்பட்ட வேளைகளில்கூட அவள் தலை பணிந்ததையோ தனது கருத்துக்களை விட்டுக் கொடுத்ததையோ நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
நான் சின்னப் பையனாக இருந்தபோது கோவில்களுக்கும் விழா மண்டபங்களுக்கும் வெளியில் அடுத்தவரின் இழிவு படுத்தலை சகித்தபடி ஒதுங்கி நிற்க்கிற மக்களைப் பற்றி கவலையுடன் நிறைய கேள்விகள் கேட்பேன். சின்ன வயதிலேயே சமூகச் சூழலாலும் பள்ளிக்கூடத்தில் சமயம் மற்றும் தமிழ் கற்பிக்கிற ஆசிரியர்களின் செல்வாக்காலும் விதி மற்றும் கர்ம வினை பற்றிய அச்சம் எனக்குள் இருந்தது.
அம்மாவோ “போன பிறப்பில் அடுத்தவரை சாதி அடிப்படையில் இழிவும் கொடுமையும் படுத்தியவர்கள்தான் இந்தப் பிறப்பில் இப்படி பிறந்திருக்கிறார்கள். நீ ஒருபோதும் அத்தகைய பிழை விட்டுவிடாதே என்று கொஞ்சம் மிரட்டலாக பதில் சொல்வாள். பிறப்பில் ஒடுக்கப் உலகம் மேம்பட்டுச் செல்கிறது என்ற நம்பிக்கை உள்ளவராக ஒருக்கப் பட்ட மக்களும் சக மனிதர்களே என்கிற உணர்வை எனக்குள் விதைத்தார். சிறுவயதிலேயே த்தை ந்து செயல் பட வைக்கிற சாத்தியங்கள் குண்டுச் சட்டிகளுள் குதிரை ஓட்டிய மாதர் சங்க நடவடிக்கைகளை பல் சமூகதன்மையுடன் பல்முகப் படுத்துகிற நிச்சயமாக அம்மாவிடம் இருந்துதான் நான் தளராத மன உறுதியை வரித்துக் கொண்டேன். .
வ.ஐ.ச. ஜெயபாலன்
எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி பாரதிதாசன் மட்டுமே கடைச் காலத்தில் அம்மாவுடன் இருக்கிற பாக்கியத்தைப் பெற்றான். அவன் 2001ல் அம்மா அப்பாவை (வ.ஐ.சண்முகம்பிள்ளை) பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவென்று ஜெர்மனியில் இருந்து சென்றிருந்தான். அன்றிருந்து இறுதிவரை அவர்களுடனேயே இருந்தான். அது ஒன்றுதான் கடந்த ஐந்துவருடங்களாக எமக்கிருந்த ஒரே ஆறுதல். சொந்த மகளைப்போல எங்கள் அம்மாவை நெடுங்காலமாக பராமரித்த மச்சாள் மகள் சசியின் அரவணைப்பில் எனது அம்மாவின் கண் மலர்கள் இறுதியாகக் குவிந்தன. இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு அஞ்சி பாதுகாப்புக் காரணங்களால் அம்மாவின் மரணச் சடங்கில்கூட கலந்து கொள்ள முடியவில்லை. நாம் எல்லோரும் அவளது இறுதி நாட்களில் வன்னியில் கூடி ‘தீயினை முந்தி திரு உடலில் முத்தமிட’ வாய்க்குமென நம்பியிருந்தோம். சிரமத்துகிடையே லண்டனில் இருந்து வன்னிக்கு சென்ற தங்கை லலிதாவுக்கும் இறுதித் தருணங்களில் அம்மாவின் திரு உடலைத் தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. உலகம் முழுவதும் அகதிகளாக சிதறி இருந்த நாம் எமது துணைகளோடும் பிள்ளைகளோடும் சென்னையிலும் பிராங்பேட்டிலும் ஒஸ்லோவிலும் ரொறன்ரோவிலும் கூடி அம்மாவின் பெருவாழ்வு பற்றி பேசி அழுது மனம் ஆறினோம். ஓரிரு தடவைகள் மட்டுமே அவளை சந்தித்திருந்த பேரப் பிள்ளைகள் பல்வேறு மொழிகளில் அஞ்சலிக் கவிதை எழுதினார்கள். அம்மா அன்னிய நாடுகளில் சிதறி வெவ்வேறு அன்னிய மொழிகளைப் பேசும் அவர்க¨ளை பேசும் தமிழும் உன்னுடைய நினைவும் தாயகக் கனவும்தானே அம்மா இணைத்து வைத்திருக்கிறது.
எங்கள் அம்மாவும் அப்பாவும் 1920ம் ஆண்டு பிறந்ததாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த காலத்தில் பிரிட்டிஸ் நிர்வாகம் பெண்களின் திருமண வயதை இரண்டு வருடங்களால் அதிகரித்ததாம். இதனைப் புறந்தள்ள பெரும்பாலான யாழ்ப்பாணத்துப் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் வயதை இரண்டு வருடங்களால் அதிகரித்து பதிவு செய்தார்களாம். அம்மாதான் சொன்னாள். இந்த வழக்கப் படி 1920ல் பிறந்ததாகப் பதிவுசெயப்பட்ட எனது அம்மாவின் உண்மையான பிறந்த ஆண்டு 1922 எனவும் ஒரு கருத்துள்ளது. எனினும் உறுதி செய்ய முடியவில்லை.
பெயர் அற்று மறைந்துபோன பல அறியப்படாத பெண் விடுதலைப் போராளிகளது பங்களிப்புகளிலேயே நமது பெண்கள் இன்று தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள். வாழ்விலும் கலைகளிலும் போராட்டங்களிலும் தலை பணியாத சதாரண மனிதர்களின் சரித்திரமும் சேர்ந்தது அன்றோ நம் வீர வரலாறு. அறியப் படாத பெண் விடுதலைப் போராளியான என்னருமை அம்மாவின் போராட்ட வாழ்வை பதிவு செய்ய விரும்புகிறேன். பெண் விடுதலை சாதி சமத்துவம் என்கிற இரு கனிகளின் விதைகளை அம்மா எங்கள் நெஞ்சிலும் பயிரிட்டார். அம்மா எப்பொழுதும் எங்களின் ஆதர்சமாகவும் வழி காட்டியாகவும் இருக்கிறார்.
அம்மாவின் கருத்தியலை கிறிஸ்துவ மிசனரிகளால் நடத்தப் பட்ட உடுவில் மகளிர் கல்லூரியில் கற்ப்பித்த அமரிக்க பெண்கள்து வாழ்வும் மகாத்மா காந்தியின் கொள்கைகளும் ஆழமாக பாதித்திருந்தது.
அந்நாளைய பெண் விடுதலை வாதிகளின் கோட்டையாக இருந்த உடுவில் மகளிர் கல்லூரியும் சின்னம் சிறுமியாக இருந்தபோது இடம்பெற்ற ஒரு சந்திப்புமே அம்மாவின் வாழ்க்கைகான கருத்தியலை நிர்ணயித்தது.
1927ல் உடுவில் மகளிர் கல்லூரியில் ஒரு பெருவிழா இடம்பெற்றது. பூந்தோட்டமாய் செளித்திருந்த வளாகத்துக்குள் முழு யாழ்ப்பாணக் குடா நாடுமே கூடியிருந்தது. வளமைக்கு மாறாக மண்டப முன்றில் வரை அனுமதிக்கப்பட்ட கருப்புக் காரில் இருந்து வாழ்த்துக் கோசங்கள் ஒலிக்க விழா நாயகன் மேடைக்கு அழைத்துச் செல்லப் படுகிறார். அவரோடு கூட மேடையில் பத்து பிரமுக பிரமுகிகள் இருந்தனர். இவை எல்லாம் எண்பத்தி ஐந்துவயதில் நாம் அம்மாவை உடுவில் மகளிர் கல்லூரிக்கு அழைத்த்ச் சென்ற போது அவள் சொன்ன கதைகள். அந்த விழாவின் ஆரம்பதில் அம்மாவும் ஒன்பது சிறுமிகளும் மலர் மாலை ஏந்தி நடனமாடியபடி ஐந்து ஐந்து பேரார்கொண்ட இரு அணிகளாகப் பிரிந்து இரு புறத்தில் இருந்தும் மேடை ஏறினார்களாம். வலதுபக்க அணிக்குத் தலமை தாங்கி ஆடிச் சென்ற அம்மாவிடம் நடு நாயகமாக இருக்கும் சட்டை போடாத மாமாவுக்கு மாலை போடும்படி கூறப் பட்டிருந்தது. அம்மா அந்த நிகழ்வை தனது முழு வாழ்நாளிலும் இடம்பெற்ற மிகப் பெரும் பாக்கியமாக கருதினாள். பின்னர் அம்மாவின் வாழ்நாள் முழுவதையும் அவளது வாழ்வின் கருத்தியலையும் அந்த மாலை சூடிய நிகழ்வு பாதித்தது. மகாத்மா காந்திதான் அந்த சட்டை போடாத மனிதர்.
2
அம்மா 1955ம் ஆண்டுவரை வரை உடுவில் கிராமத்திலும் அதன்பின்னர் ஒன்பது வருடங்கள் நெடுந்தீவிலும் வாழ்ந்தார். 1964ல் இருந்து இறுதிவரை வன்னி மாநிலத்தில் உள்ள வடகாட்டில் வாழ்ந்த அம்மாவும் அப்பாவும் இடையில் இரண்டு வருடங்கள் (2001 - 2003) தம்பி பாரதியுடன் தமிழகத்தில் தங்கியிருந்தனர். அவள் பெற்ற பிள்ளைகள் எல்லோருமே அகதிகளாக உலக உருண்டையில் அலைகிறோம். கடைசி ஆறு வருடங்களாக அம்மா அப்பாவைப் பராமரித்ததில் இருந்து அம்மாவின் மரணச் சடங்குவரைக்கும் எங்கள் எல்லோரது கடமைகளையும் தம்பி பாரதிதாசன்தான் நிறைவுசெய்தான்.
அம்மாவும் அப்பாவும் கவிதையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அம்மாவுக்கு தமிழ் ஆங்கிலக் கவிதைகளிலும் அப்பாவுக்கு தமிழ் கவிதைகளிலும் நல்ல புலமை இருந்தது. அப்பாவுக்கு சிங்களக் கவிதைகளிலும் நல்ல கேழ்வி ஞானம் இருந்தது. கவிதை ஒன்று மட்டுமே அவர்களின் சந்திப்பு புள்ளியாக இருந்தது.
நானும் தங்கை இராதாராணியும் உடுவிலில் பிறந்தோம். வணிதாசனை பெறுவதற்காக அம்மாவுடன் நாங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து 1949ல் நெடுந்தீவுக்கு சென்றுவந்தோம். அதுதான் எங்களது முதல் நெடுந்தீவுப் பயணம். நிறைமாதமாக இருந்தபோதும் அம்மா அயராத உழைப்பாளியாக இருந்தாள். உதவிக்கு ஆட்கள் பலர் இருந்தும் தானே எல்லாவற்ரையும் வலிந்து செய்வாள். தம்பி பிறந்த அன்று காலையில் உதவிக்கு வந்தவர்களை நிராகரித்துவிட்டு பிடிவாதமாக தனது கைகளால் கிணற்றில் இருந்து பாரத் துலா ஏற்றத்தில் நீர் இறைத்து எங்களைக் குளிப்பாட்டினாள். அந்த நாட்களில் மகப் பேறுகால மரணத்தின் விழுக்காடு அதிகமாக இருந்தது. நெடுந்தீவில் மருத்துவ வசதிகளும் இல்லை. அந்த நாள் தனது இறுதி நாளாக அமைந்துவிடக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை அவள் உணர்ந்திருந்தாள். இதனால் பிரசவத்துக்கு முந்திய தருணங்களை எங்களோடு எங்கள் பணியில் களிக்க விரும்பியிருக்கிறாள். குளிப்பாட்டும்போது எங்கள் மெய் தீண்டி மகிழவும் அறிவுரை கூறவும் விரும்பினாள். எங்களுக்கு குளிப்பாட்டி முடிந்த கையோடு அம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது இப்பவும் நினைவில் இருக்கிறது. இதுதான் எங்கள் அம்மா.
அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் DSc பட்டத்தை இலக்காக வைத்து படித்தவள். வீட்டில் அடுத்தடுத்து ஏற்ப்பட்ட மரணங்களால் கல்வி தடைப் பட்டபோது அங்கேயே ஆசிரியராக பணிபுரிகிற வாய்ப்பு அவளுக்கு கிட்டியது. அந் நாட்களின் விடுதலை அடைந்த பெண்கள் பலரைப் போலவே அம்மாவும் ஆண்களது மனிதாபிமானத்தில் அவநம்பிக்கையும் திருமணத்தில் வெறுப்பும் கொண்டவராகவும் திருமணத்துக்கு தப்பி ஓடுகிறவராகவும் இருந்தார். திருமணத்தைத் தொடர்ந்த தடைகளை மீறி அம்மா உடுவிலில் மிகவும் செல்வாக்காக இருந்தாள். என்ன கஸ்டப் பட்டாலும் எங்களை யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் கற்பிக்க வேண்டும் என்கிற வெறி அவளுக்கு இருந்தது.
அப்பா சிறுவயதிலேயே கல்வியை விட்டுவிட்டு வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிய தென் இலங்கைக்குச் சென்றார். அயராத உழைப்பாலும் திறமையாலும் மிகக் குறுகிய காலத்திலேயே அவர் மத்துகம நகரின் பிரபல வர்த்தகராக மேம்பட்டுவிட்டார். உடுவில் கிராமத்தில் சுருட்டுக் கைத்தொழிற்சாலை ஆரம்பித்தார். அவருக்கு அம்மாவின் சகோதரர்களின் உதவியும் நட்பும் கிடைத்தது. இப்படித்தான் அப்பாவுக்கு அம்மாவின் குடும்பதோடு தொடர்பேற்பட்டது. நிறைந்த கேழ்வி ஞானம் இருந்தபோதும் அம்மாவைப்போல முறைப்படி கற்கவில்லையே என்கிற கவலை அப்பாவை ஒரு மனச் சிக்கலாகவே பீடித்திருந்தது. ஆரம்பத்தில் இருந்தே என்னையும் தம்பிகளையும் அம்மாவின் விருப்பத்துக்கு மாறாக வர்த்தகதில் ஈடுபடுத்தவேணும் என்கிறதுதான் அப்பாவின் விருப்பமாக இருந்தது. இதன்மூலம் அம்மாவைத் தோற்கடித்து இறுதி வெற்றி பெற்றுவிடலாம் என அவர் நம்பினார். எனது சகோதரிகள் படிக்கிறதையும் அவர் விரும்பவில்லை. அம்மாவோ நாளை எனது பிள்ளைகள் பிச்சை எடுத்தாலும் பறுவாயில்லை அவர்கள் படித்து புகழுடன் வாழவேண்டும் என போராடுவாள். அதுமட்டுமே அம்மாவின் தவமாகவும் விருப்பமாகவும் இருந்தது.
சிறு பிராயத்தில் இருந்தே செல்வாக்காகவும் பலமாகவும் இருந்த உடுவில் கிராமத்தில் இருந்து அம்மாவின் வேர்களை அறுத்து 1955ல் நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்றபோது அம்மாவைத் தனிமைப் படுத்துகிறதில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக அப்பா பெருமிதம் அடைந்தார். ஆனால் நெடுந்தீவிலும் எங்கள் அம்மா ஓய்ந்திருக்கவில்லை. அப்பா வருடத்தில் பெரும்பாலான நாட்கள் வெளி ஊர்களில் இருப்பார். மோதல் வாழ்வில் அம்மாவுக்கு ஆறுதலாக இருந்த விடயம் அதுதான். அந்த காலங்களில் எங்கள் வீடு நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்களின் ஆசிரமம் போலாயிற்று. வானொலி கேட்க்க, பத்திரிகை வாசிக்க, தையல் மெசின் பழக, ஆங்கிலம் படிக்கவென்று இளம் பெண்கள் எப்பவும் அம்மாவைச் சுற்றி இருப்பார்கள். விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் பற்றியும் அறிந்துகொள்ளவென்று நெடுந்தூரத்தில் இருந்தும் பெண்கள் வருவார்கள். நெடுந்தீவில் 1950களின் நடுப்பகுதியில் இருந்து 1960பதுகளின் நடுப்பகுதி வரைக்குமான காலக் கட்டத்தில் பெண் விடுதலைக்கும் தமிழர் விடுதலைக்குமாக இளம் பெண்களை அணிதிரட்டுவதற்க்கு அம்மாவும் அவளது தோழிகளும் அயராமல் உழைத்தார்கள்.
வ.ஐ.சண்முகம் பிள்ளை சகோதரர்களுக்கு மத்துகமவிலும் (V.I.Shanmugampillai & Brothers) மன்னாரிலும் (மன்னார் ஸ்ரோஸ்) நெடுந்தீவிலும் (புதுக்கடை) கடைகள் இருந்தது. அக்கரையானிலும் மண்ணியா குளத்திலும் விவசாய பண்ணை இருந்தது. இதனால் அப்பா பெரும்பாலும் இலங்கையின் தென் நகரமான மத்துகம சென்றுவிடுவார். அல்லது அக்கரையான் பண்ணையிலோ மன்னார் கடையிலோ இருப்பார். இது வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் அம்மாவுக்கு சுதந்தரமாக செயல்படுவதற்க்குத் தேவையான வெளியை உருவாகியது. விடுமுறையில் அப்பா வீடு வருவதை நாங்கள் அஞ்சினோம். இத்தகைய மோதல் துன்புறுத்தல் பின்னணியிலும் அம்மா பணிந்துபோகாமல் தொடற்சியாக வெற்றி பெற்றாள். அயராத மாதர் இயக்க சமூக அரசியல் பணிகள்மூலம் இளம் பெண்கள் மதியிலும் ஏழைகள் மத்தியிலும் அம்மா செல்வாக்குப் பெற்றபோது அப்பா ஆடிப்போனார். எத்தனை அடித்து நொருக்கினாலும் நீ வென்றுவிடவில்லை என்றபடி மீண்டும் உயிர்த்தெழுகிற வல்லமையை அவள் மகாத்மா காந்தியிடம் இருந்து வரித்திருந்தாள். அம்மாவைத் தனிமைப் படுத்தி தோற்கடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு அவளை நெடுந்தீவுக்கு அழைத்து வந்த அப்பாதான் இறுதியில் தோற்றுப் போனார். அம்மா நெடுந்தீவிலும் ஆலமரம்போல வேரூண்றி விழுதுவிட்டாள். இதன்னால் வெறுத்துப்போய் அப்பா எங்களை வன்னியின் காட்டு பகுதியில் இருந்த வடகாட்டுக்கு பிடிவாதமாக அழைத்துச் சென்றார். எங்கள் கல்விபற்றி எப்பவும் அவருக்கு அக்கறை இருக்கவில்லை. அம்மாவை தனிமைப் படுத்தி வெற்றி பெறுவது மட்டுமே அவரது ஒரே குறிக்கோளாக இருந்தது. இப்படி 1964ல் நிரந்தரமான குடியிருப்புகளோ பாடசாலைகளோ இல்லாத நடுக் காட்டில் எங்களை குடிவைத்த பிறகுதான் அப்பா அமைதி அடைந்தார். எங்கள் சகோதரிகளது கல்வி வாய்ப்பு முற்றாகப் பட்டுப் போனது. எங்கள் கல்விக்காக அம்மா நித்தமும் போராட வேண்டி இருந்தது. வீட்டிலும் நாட்டிலும் நிலவிய ஒடுக்குதல் சூழல் மாணவப் பருவத்திலேயே என்னை ஒரு கிளற்சிக் காரனாக்கியது. இத்தனை ஒடுக்குதலையும் நெருக்கடிகளையும் அம்மாவால் எப்படி சாத்வீகமாக எதிர்கொள்ள முடிந்தது?
அம்மாவும் அப்பாவும் எங்கள் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் நெடுங்கால ஆதரவாளர்கள். அம்மா 1961ல் யாழ் கச்சேரிக்கு முன் ஈழத்துக் காந்தி என புகழ் பெற்ற திரு எஸ்,ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற வரலாற்றுப் புகழ் பெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் நெடுந்தீவு மாதர்சங்க தோழியர்களோடு சென்று பங்குபற்றினாள். அப்பா தீவிர தமிழ் தேசிய வாதியானபோதும் அரசியலில் பெண்களது பணி நிகழ்ச்சிகளில் தேனீரும் உணவும் தயாரித்து வளங்குவது மட்டும்தான் என்று நம்பினார். அப்பாவின் தமிழ் தேசியவாதமும் வெளிவாரியானது. வெளிவாரியாக மட்டுமன்றி தமிழரிடையே உள்வாரியாகவும் பால் சாதி சமத்துவத்துக்கும் தமிழர் போராட்டங்கள் வழி வகுக்க வேண்டும் என்கிற ‘சம ஆசனம் சம போசனம்’ கொள்கையை அம்மா ஆதரித்தார். அம்மா செல்வாக்குப் பெறுவதை அப்பா விரும்பவில்லை. அதன் பின்னர்தான் அம்மாவுக்கும் எங்களுக்கும் வனவாச தண்டனை கிடைத்தது. 1964ல் விருப்பத்துக்கு மாறாக வன்னியின் காட்டுப் பகுதியான வடகாட்டில் இருந்த விவசாயப் பண்னைக்கு நாங்கள் அழைத்துவரப்பட்டோம்.
1970பதுகளின் ஆரம்பத்தில் இருந்தே சிங்கள இனவாதிகளால் தேயிலை ரப்பர் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். அவர்கள் வாழும் பெருந்தோட்டங்களில் உணவு நெருக்கடி ஏற்படுத்தப் பட்டது. அவர்களில் சிலர் அகதிகளாக தங்கள் பெண்டு பிள்ளைகளோடு வன்னி மாநிலத்துக்குப் புலம் பெயரத் தொடங்கினார்கள்.
மலையகத் தமிழர்கள் எங்கள் காட்டுத் தெரு வழியே அகதிகளாக செல்லத் தொடங்கினர். ஒவ்வொரு நாழும் எங்கள் தனிக் காட்டு வீட்டு வாசலில் அகதிகளின் குரல் கேட்கும். மலையக தமிழ் அகதிகள் வரவால் அந்தக் காட்டுக்கும் அம்மாவுக்கும் புது வாழ்வு உருவாகியது. மிழகாய் வெண்காயம்போன்ற பணப் பயிர் செய்கையில் லாபம் அதிகரித்துச் சென்ற அந்த நாட்களில் கூலி ஆட்களின் தட்டுப்பாடுதான் வன்னியின் பெரும் பிரச்சினையாக இருந்தது. மலைய தமிழ் அகதிகளின் வரவு வன்னியின் விவசாய வளற்ச்சியிலும் அரிசி ஆலைகள் போன்ற சிறு கைத்தொழில் வளர்ச்சியிலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. 1970பதுகளின் நடுப்பகுதியில் வீதியால் சென்ற மலையகத் தமிழ் அகதிகளின் தன்னீர்ப் பந்தலாக தங்குமடமாக எங்கள் வீடு மாறியது. இயன்றவரை அம்மா அவர்களுக்கு ஆதரவாக இருந்தாள். அவர்களுக்கு உதவ சொந்த வீட்டிலும் சொந்த பண்னையிலும் திருடினாள்.
மலையக தமிழ் அகதிகளின் வியர்வையிலும் கண்ணீரிலும் வன்னியின் பணப் பயிர் விவசாயம் பொற் சுரங்கமாக மாறிய நாட்கள் அவை. மலையக தமிழ் அகதிகள் வன்னி தோடங்கள் சிலவற்றில் மறுவாழ்வு பெற்றனர். சிலவற்றில் குறைந்த சம்பளம் அதிக வேலை என சுரண்டப் பட்டனர் சிலவற்றில் அவர்கள் கொத்தடிமைகளாக சிதைக்கப் பட்டதைக் கண்டு நானும் என் தோழர்களும் கொதித்தோம். அகதிகளில் சிலர் வடகாட்டிலும் குடியேறினார்கள். இறுதியாக அந்த காட்டின் மத்தியிலும் மக்கள் வாழும் சிற்றூர் ஒன்று மெல்ல மெல்ல உருவாகி வளர்ந்தது.
பொல்லாத விதிக்கு எங்கள் அம்மாவை அடிக்கடி வேரறுக்கவும் அடித்து நொருக்கவும் முடிந்தது ஆனால் ஒருபோதும் அவளை வெற்றிபெற முடியவிலை.
3
1944ல் அம்மாவின் திருமணம் ஒரு விபத்துப் போல நிகழ்ந்தது. திருமண நெருக்கடிகள் உடுவில் மகளிர் கல்லூரி விடுதிக் கதவையும் தட்ட ஆரம்பித்தபோது அம்மா தென் இலங்கைக்கு மாற்றமாகி தப்பிச் சென்றாள். கொழும்பு புறநகார தெகிவளை மகளிர் கல்லூரியில் அவளுக்கு வேலை கிடைத்தது. எனினும் அம்மவின் அண்ணன்மார் அவளது பாட்டியார் மரணமாகிவிட்டதாக பொய் தந்தி கொடுத்து அழைத்து திருமணம் செய்துவைத்து விட்டனர். அம்மாவின் பெண் சுதந்தர வேட்கையே திருமண நிராகரிப்புக்கு காரணமாக இருந்தது. ஆனால் அப்பாவோ தனது கல்வி நிலை காரணமாகவே அம்மா தன்னை நிராகரித்ததாக தவறாகப் புரிந்து கொண்டார். இன்றுகூட ஆண்கள் பலர் தங்கள் வட்டத்தைத் தவிர பெண்களுக்கு வேறு உலகம் இல்லை என்று கருதுகிறார்களல்லவா? இன்றும்கூட ஆண்கள் பலர் பெண்களுக்குத் தாங்கள் மையப்படாத கருத்துக்களும் காரியங்களும் விருப்பு வெறுப்புகளும் கிடையாது என்று நம்புகிறார்கள் அல்லவா?. இந்த ஆண் புத்தி அபத்த புத்தி.
திருமனத்துக்குப் பின்னர் அம்மா அஞ்சியதுபோலவே அவளது கனவுகள் நொறுங்க சிறகுகள் முறிக்கப் பட்டது. அம்மா தனது சிறை இருப்பிலும் இறுதிவரை போராடி தனது இலட்சியங்களைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்தாள் என்பதுதான் சிறப்பு. அவளுடைய ஆற்றலுக்கும் தலைமைப் பண்புக்கும் இலட்சிய நோக்கிற்க்கும் ஓரளவுக்கேனும் பெண்ணுரிமைச் சூழல் உள்ள வீடும் வாழ்வும் அமைந்திருந்தால் மானுடம் பயனுறும் பெருவாழ்வு வாழ்ந்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.
உடுவில் மகளிர் கல்லூரியில் பணிபுரிந்த அமரிக்க பெண்களின் கருத்துக்களும் மகாத்மா காந்தியின் கொள்கைகளும் அம்மாவில் அதிகம் செல்வாக்குச் செலுத்தின. உறுதியான சீர்திருத்த வாதியான அவள் சத்தியம் வெல்லும், சாதகமான மாற்றங்கள் எப்படியும் ஏற்பபடும் என உறுதியாக நம்பினாள்.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வருவாய் மார்க்கங்கள் பெருகி மதியதர வர்க்க வளற்ச்சி துரிதப் பட்டு சுவர்க்கம் எனப்பட்ட யாழ்ப்பாணம் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் நரகமாவே இருந்தது.
இத்தனைக்கும் தென்னாசியாவில் அதிக சமூக பொருளாதார பாதுகாப்புள்ள பெண் சமூகங்களுள் இலங்கைத் தமிழ் பெண் சமூகம் முன்னணியில் இருந்தது. இலங்கையில் மரபுரீதியாக தமிழர்களின் சொத்துடைமை திருமண முறைமை என்பவை பெரிதும் தாய்வழி சமூக அம்சங்களைக் கொண்டிருந்தது. நிலம் வீடு போன்ற சொத்துக்கள் பெரும்பாலும் பெண்ணுக்கே சீதனமாகச் சேர்ந்தது. 1850பதுகளில் ஒரு ஐரோப்பியர் யாழ்பாணத்து நிலங்களில் பெரும்பகுதி பெண்களது உடமையாக இருந்ததை பதிவு செய்திருக்கிறார். யாழ்ப்பாணத்து மரபுச் சட்டமான தேச வளமையின் படி சீதனத்தை கணவன் விற்கவோ பிறருக்கு கொடுக்கவோ முடியாது. அது மரபு ரீதியாக அவர்களது பெண்பிள்ளைகளுக்கும் பின்னர் பெண் பேரப் பிள்ளைகளுக்குமே உரியது. நடைமுறையிலும் சொத்து பகிர்வில் முன்னுரிமையும் பெண்களுக்கே இருந்தது. இந்தியாவைப் போல திருமணத்தின் பின்னர் பெண் கணவனின் விட்டுக்குச் சென்று வாழ்கிற மரபும் இலங்கைத் தமிழர்களிடயே நிலவவில்லை. இலங்கைத் தமிழரது மரபுப்படி கணவன் தனக்கு சீதனமாக கிடைத்த மனைவியின் வீட்டுக்கே செல்கிறான். பெண்களுக்கு இத்தனை சமூக பொருளாதாரப் பாதுகாப்புகள் இருந்த யாழ்ப்பாணத்தில் ஏன் எனது அம்மா பெரியம்மா சின்னம்மா எல்லோரும் மிக மோசமாக ஒடுக்கப்பட்டனர் என்கிற விசாரண எப்பவும் எனக்குள் இருந்தது.
சமூக மாற்றங்கள் பெண்களது தழைகளை அறுத்துவிடும் நிலை ஏற்பட்டபோதெல்லாம் சமய கலாச்சார விவாதங்கள் மேலோங்கின. இத்தகைய விவாதங்களின் கொடுமுடி ஆறுமுக நாவலர் தலைமைதாங்கிய விவாதங்களாகும். இத்தகைய விவாதங்கள் அன்னியர்களையும் அன்னிய சமயங்களையும் குற்றம் சாட்டினாலும் அடிப்படையில் அவர்களது அச்சங்கள் மாற்றங்களுள் சாதிய அமைப்பை மாறாமல் காப்பாற்றுவது பற்றியதே. மொழி கல்விவளர்ச்சி சார்பான நாவலரின் பங்களிப்புகளும் அவரது அன்னிய சமய கலாச்சார எதிர்ப்பும் அவரது பன்முக ஆழுமைகளும் அவரது பிற்போக்கான கருத்தியலை நியாயப் படுத்திவிடாது. நாவலரின் மொழிசார்ந்த்த பங்களிப்புகளைப் பதிவுசெய்வது அவசியம். ஆனால் 1970பதுகளின் பின்னர் முற்போக்கான தமிழ் அறிஞர்கள் சிலர் நாவலரது பிற்போக்கான கருத்தியலையும் இயக்கத்தையும் முற்போக்கான கொலோனியல் எதிர்ப்பு கருத்தியலாகவும் இயக்கமாகவும் அடையாளப் படுத்த ஆரம்பித்தது அதிற்ச்சியும் ஆச்சரியம் தருகிறது.
நாவலரின் இயக்கம் கிறிஸ்துவ சேர்ச்சுகளை எதிர்த்தாலும் உண்மையில் தமிழ் மக்கள் சார்பு பக்தி மார்கமான சிறுதெய்வ கோவில்களையும் வழிபாட்டையுமே திவிரமாக எதிர்த்தது. அடிப்படையில் நாவலரின் போராட்டம் கிராமிய பூசாரிகள் தலைமையிலான கிராமிய கலைகளை வளர்த்த பெண்கள் பங்களிப்புள்ள தமிழ் வழிபாட்டு சிறுதெய்வக் கோவில்களை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து பெரும்பாலும் துடைத்தழித்தது. மக்களிடம் இருந்து வழிப்பாட்டையும் கலாசாரத் தலைமையையும் இலக்கியத்தையும் பிடுங்கி மேல் சாதியனரதும் ஆகமக் கோவிகளின் கையில் களினதும் கைகளில் கொடுப்பதே நாவலர் இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.
தமிழக வரலாற்றிலும் பகுத்தறிவு இயக்கம் சிறுதெய்வ வழிபாட்டினைப் பலகீனப் படுத்தியதன் மூலம் தனது நோக்கத்துக்கு மாறாக ஆகமக் கோவில்களும் சமஸ்கிரதமயமாகுதலும் பலப்பட வழிவகுத்துவிட்டது. நமது கொள்கைகள் எதுவானாலும் நமக்கு முன் உள்ள வரலாற்று தெரிவு மக்கள் சார்ப்பான சிறுதெய்வ தமிழ் வழிபாட்டுக்கும் ஆகம கோவில் சார்ந்த சமஸ்கிரத மயமாதலுக்கும் இடையிலானதுதான். இதில் நடுநிலை வகித்தாலும் நமது தெரிவுமாக சமஸ்கிரத மயமாகலே வெற்றிபெறும்.
அதிஸ்டவசமாக தமிழர்களின் கலைப் பொக்கிசங்கள் செழித்திருந்த மட்டக் களப்பையும் திருகோண மலையையும் வன்னியில் சில பகுதிகளையையும் நாவலரின் செல்வாக்கு பாதிக்கவில்லை. இதனால் இன்று ஈழத் தமிழரின் கலை என்று தலைநிமிர வடமோடிக் கூத்து எஞ்சி உள்ளது. இன ஒடுக்குதலால் கிராமிய விழாக்கள் அமைப்பு குலைந்துபோய் கிராமியக் கலைஞர்களும் அ XXXXXXXXXXXXண்ணாவிமார்களும் அகதிமுகாங்களில் முதுமை அடைந்து காலமாகிற அபாயம் ஏற்பட்டுள்ளபோதும் உதவிகள் ஏதும் இல்லாத நிலையிலும் 1970களில் இருந்தே இக்கலைகளைக் காக்க டாக்டர் மெள்னகுரு போன்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவது நம்பிக்கை தருகிறது. இவ்வகையில் மட்டக் களப்புப் பல்கலைக் களகத்துக்கும் தமிழர்கள் அனைவரும் நன்றி சொல்லவேண்டும்.
தொடற்ச்சியாக தென்னிலங்கையிலும் மலேசிய சிங்கபூரிலும் கேரளத்திலும் இருந்து பாய்ந்த பணத்தினால் யாழ்ப்பானத்தில் மட்டுமீறி நடுத்தர வர்க்கம் வளற்ச்சிபெற்ற சென்ற நூற்றாண்டின் ஆரம்பதிலேயே பெண்கள் விடுதலை செயல்பட்டிருக்க வேண்டும். ஏன் அது இடம்பெறவில்லை? ஏன் எனது அம்மாவின் காலங்கள் துயரமானது? தவறு எங்கே இருந்தது?
விடுதலைக்கு கட்டியம்கூறும் சமூக பொருளாதார மாறங்கள் எல்லாம் பெண்கள் விடுதலைக்கு ஏன் வழி வகுக்கவில்லை? உண்மையில் தென்னாசிய சாதிய சமூகங்களில் பரந்துபட்ட தலத்தில் சமூக பொருளாதார வளற்ச்சியும் புதிய வர்க்கங்களின் எழுச்சியும் இடம்பெறும் வாய்ப்புகள் இல்லை. சகல அபிவிருத்திகளும் சாதி ரீதியாக மட்டுப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் சாதிய சமூகங்களில் சமூக பொருளாதர வளற்சியும் மாற்றங்களும் பரவலான மக்கள் மட்டத்தில் சுதந்தரமாக செயல்பட்டுகிற வாய்ப்பு மறுக்கப் படுகிறது.இப்படி ஒற்றைக் கால் ஒற்றைக் கண் பறிக்கப் பட்டு நொண்டியாக்கப் படுகிற மாறுதல்களுக்கான சமூக பொருளாதார கலாச்சார சக்திகள் பழைய தளங்களை உடைத்துக் கொண்டு எழுகிற வாய்ப்பையும் வீரியத்தையும் இழது விடுகின்றன. இப்படித்தான் வளற்சியை சாதி அடிப்படையில் திசைதிருப்பி பொருளாதார மாற்றங்களில் சமூக கலாச்சார மாறாமையை பரமரிக்கும் சமரசங்கள் மேடை ஏற்றப் படுகின்றன. இதனால் பழைய வர்க்க அமைப்பை உடைத்துக்கொண்டு எழ வேண்டிய புதிய வர்க்கங்கள் சாதிய அடிப்படையில்ருயர் சாதிசார் உயர் வர்க்க அமைப்புடன் சமரசமாக அதன்மீதே நிகழ நிர்பந்திக்கப் படுகிறது. இதுதான் இந்திய சமூகங்களின் மாற்றங்களிலும் மாறா நிலையின் யின் அடிப்படை. எனது அம்மாவும் அவளது தலைமுறைப் பெண்களும் அவலது காலத்தில் தீவிரமாக இருந்த இத்தகைய சமரசங்களால்தான்.
உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட முதல் விடிவு 1930 – 1970களில் தலித்துகளின் தலைவர்களும் கம்யூனிஸ்டுகளும் ஒருசில காந்திய வாதிகளும் முன்எடுத்துச் சென்ற சாதி ஒடுக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களின் வெற்றிகள்தான் காண்கிறேன். சாதிரீதியாக பிழவு பட்டிருந்த தமிழர்கள் பலமான ஒரு தேசிய இனமாக ஒன்றுபட மேற்படி வெற்றிகள் வழிவகுத்தன. பெண்விடுதலையின் குரல்களும் இக்காலக் கட்டதில் இருந்தே யாழ்ப்பாணத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. பின்னர் தென்னிலங்கை கம்யூனிஸ்டுகள் சிங்கள இனவாதிகளுடன் சமரசம் செய்ததால் கம்யூனிச இயக்கம் தோற்றுப் போனது. எனினும் தமிழ் மக்களின் முதல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற திருவாளர்கள் யோவேல் போல், எம்.சி.சுப்பிரமணியம், என்.சண்முகதாசன், என்.ரி.நாகரத்தினம், கே.டானியல், டோமினிக் ஜீவா போன்றவர்களை எமது வீர வரலாற்றின் முன்னொடிகளாக அடையாளப் படுத்த நாங்கள் ஒருபோதும் தயங்கக் கூடாது. இது வீரமிக்க தேசிய இன விடுதலைப் போரட்டத்தின் வரலாற்றுக் கடமையும்கூட.
சாதிய ஒடுக்குதலுக்கான எல்லா தழைகளும் கலாச்சாரமும் இறுதியில் பெண்கள்மீதே பிணிக்கப் படுகிறது. பெண் கற்புப் பற்றிய விவாதங்கள் எல்லாம் அடிப்படையில் சாதிரீதியாக பெண்களை தனிமைப் படுத்தும் விவாதங்கள்தான். இன சாதியவரம்புகளை உடைக்கக்கூடிய மானிடகலசமான கருப்பை இல்லாத ஆணுக்கு கலாச்சாரங்கள் கற்பை வலியுறுத்தவில்லை. நமது பத்தாம் பசலிக் கலாச்சாரத்தில் ஆணுக்கு கட்டில்லை. பெண்னோ கட்டுப்பட்டு இன சாதி தூய்மையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றவெண்டியவள். சமூக பொருளாதார வளற்ச்சி துரிதப் பட்டிருந்த எனது அம்மாவின் காலங்கள் பற்றிய ஆய்வு எனக்கு உணர்த்திய விடயங்கள் இவைதான்.
தாய்வழி சமூக அடிப்படையில் பெண்களது உரிமைகளை உறுதிப் படுத்திய அதே யாழ்பாணத்து தேசவழமைச் சட்டமும் மரபுகளும் தலித்துகள் மீது மிக கொடுமையான ஒடுக்குதலை கட்டவிழ்த்து விட்டிருந்தது. எல்லா இன அமைப்பும் உள்வாரியான சமூக ஒடுக்குதலுக்கு வாய்ப்பளிக்கும் எல்லா கலாசார மரபுகளையும் சட்டங்களையும் பெண்களை ஒடுக்க பயன்படுத்தும். சாதி ஒடுக்குதல் மார்க்கங்கள் எல்லாம் இறுதியில் பெண் ஒடுக்குதலிலேயே போய் முடிவடைகிறது. பெண்விடுதலைக்கு முன்நிற்கிற நமது பெண்கள் அணிகள் பெண்கள் விடுதலையையும் மாற்ங்களையும் விரும்புகிற எங்களது இளைஞரது அணிகள் ஆண் பெண் உறவில் சாதி வேறுபாட்டை தகர்க்காமல் பெண் விடுதலை இல்லை என்கிறதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
4
மாணவப் பருவம் மட்டிலுமாவது கிறிஸ்துவ மிஷனரி¢மாரால் நடத்தப் பட்ட மகளிர் கல்லூரிகளும் - விடுதிகளும் பெண் விடுதலைக் கருத்துக்களின் பசும்தரையாக இருந்தது. திருமணம் வரையேனும்முடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளும் ஆசிரியர்களும் பெண் விடுதலைக் காற்றைச் சுவாசித்தனர். பின்னர் ஐரோப்பியரான லேடி ராமநாதனின் நிர்வாகத்தில் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் ஓரளவுக்கு அத்தகைய சுழல் அமைந்தது என்று அம்மா சொல்லி இருக்கிறாள். வட்டுக்கோட்டையில் இயங்கிய யாழ்ப்பாணக் கல்லூரியும் மதுரை கிறிஸ்துவக் கல்லூரியும் உடுவில் மகளிர் கல்லூரியின் சகோதர நிறுவனங்களாகும்.
யாழ்ப்பாணத்தில் பொருளாதார மேம்பாட்டோடு கலாச்சார பிற்போக்குவாதம் வெற்றிகரமாக கைகோர்த்துக் கொண்டபோது கிறிஸ்துவ நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தின் முதன்மை சமூகத்துடன் சமரசம் செய்துகொண்டன. இத்தகைய சமரசங்கள் காலம் மாறுகிறது என்கிற நம்பிக்கையுடனும் விடுதலைக் கனவுகளுடனும் வாழ்ந்த அம்மாவின் தலைமுறைப் பெண்களையும் நசித்தது. திருமணத்துக்கான நிர்ப்பந்தம் வந்தபோதுளம்மா முதலில் வீட்டைத் துறந்து மகளிர் கல்லூரி விடுதிக்கும் பின்னர் பணி மாற்றம் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் துறந்து கொழும்பு மாநகருக்கும் சென்றாள். ???????????????????????
உடுவில் மகளிர் கல்லூரியின் பக்கத்தில் இருந்த அம்மாவின் வீட்டில் பெண்களும் எல்லோருமே விடுதலைக் கனவுள்ளவர்களாக இருந்தில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. மாணவப் பருவத்திலேயே பிரபல நாட்டிய நாடக கலைஞராக விளங்கிய அம்மாவின் அக்கா லில்லி சின்னம்மா அன்றைய இளைய யாழ்ப்பாணத்தின் கனவுக் கன்னியாக இருந்ததாக பல முதியவர்கள் நேர்காணல்களின்போது சொல்லியிருக்கிறார்கள். லில்லி சின்னம்மா பெண் விடுதலைக்கும் காதலுக்கும் எதிரான சூழலில் இளம்வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்டார். விடுதலை வேட்கையுள்ள அம்மாவின் இரண்டாவது அக்கா நகுலேஸ்வரி (நாகம்மா) திருமணத் தழைக்கு அஞ்சி கன்னியாஸ்திரியாகினார். எனினும் அவரது கதையும் இளம் வயதிலேயே முடிந்துபோகிறது.
அமெரிக்காவில் கற்று சிங்கப்பூரில் டாக்டராக பணிபுரிந்த அம்மாவின் அண்ணன் கனகரத்தினமும் ஆசிரியைகளான (ஒருவர் கன்னியாஸ்திரி) அவளது இரண்டு அக்காமாரும் அடுத்தடுத்து இளம் வயதிலேயே மரணமடைந்து போனார்கள். அந்த சோகத்தில் அம்மாவின் தாயாரும் இறந்து போனாள். தொடர்ந்த மரணங்களால் பணக்கார விவசாயியான எனது பாட்டனார் இடிந்துபோனார். அம்மாவின் குடும்பத்தில் இரண்டு அண்ணமாரும் ஒரு தங்கையும் தம்பியும் மட்டுமே எஞ்சி இருந்தார்கள்.
இலங்கைவாழ் தமிழர்களைப் பொறுத்து வடகிழக்கு மாகாணங்களில் வாழும் இலங்கைத் தமிழர் மத்தியில் அகவாழ்வில் தாய்வழி சமூக அமைப்பின் செல்வாக்கு வலுவாக இருந்தது. தமிழகத்தில் போல திருமணத்தின் பின்னர் பெண் தனது கனவனின் வீட்டுக்கு சென்றுவாழும் மரபு இல்லை. பதிலாக பெண்ணுக்கு சீதனமாக வீடும் நிலமும் கொடுக்கப் படுகிறது. நடைமுறையில் சொத்தில் பெண்பிள்ளைகளின் சீதனம்தான் முன்னுரிமை பெறுகிறது. சீதணத்தில் ஆண் கைவைக்க முடியாது. ஒப்பீட்டு ரீதியாக இத்தகைய அமைப்பில் பெண்ணுக்கு அக வாழ்வு ரீதியான பாதுகாப்பு அதிகம் என்பது உண்மைதான். எனினும் புற வாழ்வில் யாழ்பாணத்து ஆண் அதிக்க சாதி ஆதிக்க கலாசாரம் பெண்ணையும் ஒரு சாதிபோல ஆறாவது வர்ணமாக தாழ்த்தியே வைத்திருந்தது.
மேம்பட்ட கல்வியும் உள்வாரி வெளிவாரி புலப் பெயர்வுகளின் தாக்கமும் மத்திய தர வர்க்க எழுச்சியும் சாதி மற்றும் பெண்கள் விடுதலை கருத்துக்களின் நாற்றாங்கால்கள் ஆயின???????????????????????????????????
இப்படியே விட்டுவிட்டால் அம்மாவின் தங்கை கனகம்மாவும் அதே பாதையில் போய்விடுவாளென என் பாட்டனார் கவரமடைந்திருந்தார். ஒருநாள் என் சின்னம்மா, மண் விளையாடிக் கொண்டிருந்த போது, சின்னம்மாவை அவசரம் அவசரமாக பிடித்துக் குளிப்பாட்டி, தனது நிலத்தில் வேலைசெய்த உறவுக்காரப் பையனுக்கு அவசரத் திருமணம் செய்து வைத்துவிட்டார். திருமணம் முடிந்த கையோடு மகிழ்ச்சியுடன் மீண்டும் மண் விளையாட ஒடிய சின்னம்மாவை துரத்திப் பிடித்த உறவினர்கள் “நீ இனி சின்னப் பிள்ளையல்ல கல்யாணமான குடும்பப் பெண்,” என்று அறிவுரை(?) கூறினார்களாம்.
அம்மாவின் தாயார் உடுவில் கிராமத்தைச் சேர்ந்தவரென்பதை ஏற்கனவே குறித்துள்ளேன். அம்மாவின் தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்த பிரபல சித்த சக ஆயுர்வேத மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். செங்கமாரி (Hepatitis) நோய்க்கு கீழ்காய் நெல்லியை அடிப்படையாக கொண்டு வைதியம் செய்வதில் அவர்கள் குடும்பம் முன்னிலை வகித்தது. 1930களின் ஆரம்பத்தில் அலோபதி டாக்டராக பணிபுரிந்த கனகரட்ணம் மாமா விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருக்கு கீழ்காய் நெல்லி அடிப்படையிலான குடும்ப வைத்தய சூத்திரங்களை அறியும் நோக்குடன் குடும்ப வைதிய ஏடுகளை தேடி நெடுந்தீவு சென்றிருந்தபோது யும் நோக்கில் சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்திருந்தபோது “””””””””””””””””””””””””””
திருமணத்தின் பின்னர் சிறகுகள் யாவும் நொறுக்கப்பட்டு, சமையலறை மூலையில் வீசப்பட்ட அம்மாவின் வாழ்க்கை நெறி எது? அதன் கருத்தியல் எது என்ன? அது எப்படி உருவானது?.
x
எனது அம்மா ஏழு பிள்ளைகள் பெற்று எட்டு பிள்ளைகளை வளர்த்து ஆளக்கியிருக்கிறாள். ஈழத்து நியதிபோல ஏழு பிள்ளைகளுமே வெளிநாட்டுகளில் சிந்திச் சிதறிப் போய்விட்டார்கள். வளர்த்த எட்டாவது பிள்ளையும் எட்ட இருந்தான். இருந்தபோதும் பெரும்பாலான ஈழத்து பெற்றோர்களைவிடவும் எனது அம்மாவும் அப்பாவும் அதிர்ஷ்டக் காரர்களாய் இருந்தார்கள். எனது தம்பி பாரதிதாசன் தான் அதற்குக் காரணம். சற்றும் யோசியாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு 2001 ஆகஸ்டில் இலங்கை சென்றவன் தொடர்ந்து கடந்த 6 வருடங்களாக அப்பா அம்மாவின் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கிறான். அதற்காகத்தான் திருமணம்கூட செய்யாமல் இருந்தான் என்று தோன்றுகிறது. பிறாங்பேட் பல்கலைக்களக பழைய மானவனும் ஜெர்மனிய பிரசையுமான அவன் முன்னர் “கடைசி காலத்தில் அம்மா அப்பாவோடு போய் இருப்பேன்” என்று சொல்கிற போதெல்லாம் நாங்கள் யாரும் அது சாத்தியமானது என்று கருதியதுமில்லை பொருட்படுத்தியதும் இல்லை. இலங்கை தமிழரின் வளமைபோல புலம் பெயர்ந்துள்ள பிள்ளைகளில் ஒருவரின் வீட்டுக்கு அழைத்து வைத்திருப்பதுதான் எங்கள் திட்டமுமாக இருந்தது.நாங்கள் இந்தியா, நோர்வே, ஜெர்மனி, லண்டன், பிரன்ஸென சிதறி இருந்தோம். அழைப்பது தொடர்பான ஆரம்ப பிரச்சினைகள் தீர்ந்தபோது தங்கள் கடைசி காலத்தை வடகாட்டில் உள்ள பண்ணையில் கழிக்கிற விருப்பத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இந்த நிலையில் பாரதி ஜெர்மனியில் இருந்து திரும்பிவந்து அம்மா அப்பாவுடன் இணைந்து கொண்டான். பாரதி 2001ன் செப்ரெம்பரில் அவர்களை இந்தியா அழைத்து வந்தபோது நானும் சென்னையில் இருந்தேன். சென்னையில் எனது சகோதரி ராதாராணி நடராசா 1989ல் இருந்து சென்னையில் வசிக்கிறாள்.அப்பாவுக்கு அப்பலோ வைத்திய சாலையில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த ஒரு சிறுநீரகம் அகற்றப் பட்டது. அப்பா இலங்கைக்கு போக வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். சென்னையின் வறண்ட சுவர்த் தோப்புகளுக்கும் செழித்த வன்னிக் காட்டு பண்ணைவீட்டுக்கும் இடையில் தேர்வு அவர்களுக்கு மிகவும் இலகுவானதாக இருந்தது. அம்மா மட்டும் இலங்கையில் எங்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை வரலாம் என்கிற அச்சத்தில் இந்தியாவில் இருக்க அரைமனசுடன் சம்மதித்தாள். சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். அவர்கள் சென்னையில் ஏறக் குறைய இரண்டு வருடங்கள் இ¢ருந்தார்கள்.
இக்காலத்தில் அவர்கள் சென்னைக்கு முன்றுதடவைகள் வருகை தந்திருக்கிறார்கள். கடைசித் தடவை தம்பி பாரதியும் அவர்களும் முன்று வருடங்கள் (199 – 199 ) சென்னையில் வாழ்ந்திருக்கிறாள். நாங்கள் பாதுகாப்புக் கருதி அவர்களைச் சென்னையில் வைத்திருக்கவே விரும்பினோம். அப்பா திரும்ப வன்னிக்குப் போகிற பிடிவாதத்தில் இருந்தார். அம்மா எங்கள் பாதுகாப்பு கருதி சென்னையில் இருக்க அரைமனசுடன் இணங்கினாள். இந்த தருணத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டு சொந்தக்காரரின் தந்தையார் காலமாகினாஅர். என்னோடுகூட பெசன்ற் நகர் மின் சுடுகாட்டில் நடந்த ஈமைக் கிரிகைகளுக்கு தானும் வர அம்மா விரும்பினாள். அம்மாவுக்கு அவர்கள் யாரையும் தெரியாது என்னினும் அம்மா பிடிவாதமாகக் கேட்டதால் அவளையும் அழைத்துச் சென்றாள். மின் சுடலையில் இடம்பெற்ற எல்லா சடங்குகளையும் அமைதியாக கவனித்துவந்தவள் திடீரென நடுங்கத் தொடங்கினாள். உடல் மின் சூழையுள் தள்ளப் பட்டு நீறாக்கப் படுகிறதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “இங்கிருந்தால் என்னையும் இதற்குள்தான் வைப்பீர்கள். எனக்கு விறகில் எரிய வேண்டும். என்னை ஊருக்கு கொண்டுபோங்கள்” என தீர்க்கமாக சொன்னாள். நான் அவளை தேற்றும் முகமாக “இல்லை அம்மா உனக்கு சந்தண விறகு அடுக்கி நீ விரும்பும் முறைப் படி ஈமக் கிரிகைகள் செய்வோம்” என வாக்குறுதி அளித்தேன். சென்னையில் அது சாதியமென்ன்று அம்மா நம்ப தயாராக இல்லை. அவள் திரும்பவும் வன்னியில் உள்ள தனது அசோக வனத்துக்குப் போகிற தீர்மானத்தில் இருந்தாள். அம்மாவோ நினைத்ததை என்ன விலைகொடுத்தும்
பிடிவாதமாக அடைந்து விடுகிற பெண்.
நெடுங்காலமாக எமது பெற்றோர்கள் வசித்து வருகிற விவசாய பண்ணை வீடு போராளிகளின் கட்டுப் பாட்டில் உள்ள வன்னி மாநிலத்தின் மேற்கு பகுதியில் இருக்கிறது. ஈழத்தமிழனின் விதிபோல பிள்ளைகள் யாவரும் இந்தியா நோர்வே ஜெர்மனி பிரான்ஸ் பிரிட்டன் என்று அகதிகளாக சிதறிப்போய் விட்ட பின்னர் எனது பெற்றோர் தனிமைப் பட்டு விட்டனர். எனது மைத்துணியின் மகளான சசிதான் அம்மா அப்பாவுக்கு உதவியாக இருந்தாள். இந்த நிலையில் 2001ல் ஜெர்மனியில் இருந்து சென்ற எனது கடைசித் தம்பி பாரதி அப்பா அம்மாவோடு சேர்ந்துகொண்டான்.
எனது அம்மாவின் குடும்பக் கதை கிளற்ச்சியும் சோகமும் நிறைந்தது. அம்மாவின் தாய் வழிப் பாட்டன் உடுவில் கிராமத்தைச் சேர்ந்தவர். இலங்கை சிங்கபூர் இடையே ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரும் செல்வந்தராக இருந்தவர் அம்மாவின் தாய்வழிப் பாட்டியை இரண்டாம் தாரமாக காதல் திருமனம் செய்துகொண்டார். நெடுந்தீவைச் சேர்ந்த எனது அம்மாவின் பாட்டிய 1890களில் உடுவில் மகளிர் கல்லூரியில் சிற்றூளியராக இருந்திருக்கிறார். இப்படி ஆரம்பத்தில் இருந்தே உடுவில் மகளிர் கல்லூரி எங்கள் அம்மாவின் இளமைக் காலக் கதையின் களனாக அமைந்திருந்தது.
எனது அம்மாவின் சின்ன வயது வாழ்க்கையும் கிளற்ச்சி மிக்கதாகவே இருந்தது. அந்த நாட்களில் பெண்களுக்குப் பொதுவாக பூப்படைந்த நாட்களில் இருந்தே கலாச்சாரம் அடிமைத் தளையாகிவிடும். பெண்கள் கல்வியைத் தொடர்வது சிரமமாகும். பதின்நான்கு பதினைந்து வயதுகளுக்கு முன்னமே பெண்களுக்கு திருமணமும் செய்து வைத்து விடுவார்கள். அந்த நாட்களில் சிறுவயது விவாகத்தில் இருந்து தப்பிப்பதற்க்காகவும் கல்வியை தொடர்கிறதற்க்காகவும் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரிகளை தஞ்சம் அடைந்த சுதந்தர உணர்வு கொண்ட பெண்களுள் என் அம்மாவும் ஒருத்தி. கிறிஸ்தவ பெண்கள் கல்லூரிகளுக்கு வெள்ளையர் அரசில்
செல்வாக்கு இருந்ததால் சட்டப்படியான திருமணவயதுவரை காத்திருக்கும்படி மாணவிகளின் பெற்றோரை நிர்ப்பந்திக்க முடிந்தது. அல்லது தங்கள் விடுதிகளில் உதவி கோரும் மாணவிக்கு அடைக்கலம் தர முடிந்தது.
வீடு உடுவில் மகளிர் கல்லூரிக்கு பக்கதில் இருந்ததால் எனது இரண்டு பெரியம்மாக்களும் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு மேற்படிப்பு படித்தார்கள். அம்மாவும் அந்த வழியைத் தொடர்ந்தவர்தான்.
லில்லி சின்னம்மா அந்த நாட்களில் யாழ்பானத்தில் பிரபலமான மாணவியாக இருந்த எனது மூத்த பெரியம்மாவின் பெயர். பேரழகியான அவர் கல்லூரி நாட்களில் ஆடலிலும் நாடகத்திலும் புகழ் பெற்றிருந்தார். லில்லி சின்னம்மா நடித்து யாழ்பாணம் முழுவதும் 1920பதுகளில் மேடையேற்றப் பட்ட உடுவில் மகளிர் கல்லூரி நாடகம் பற்றி 1990களில் நான் பேட்டி கண்ட 90 வயது பெரியவர் ஒருவர் தெரிவித்த விடயங்கள் சுவாரஸியமானவை.
அந்த நாட்களில் மாணவி லில்லிச் சின்னம்மா யாழ்பாணத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்திருக்கிறார்.
சின்ன வயதுகளிலேயே போராட்ட அரசியலால் ஈர்க்கப் பட்டு ஊர்ப் பெரிசுகளதும் தந்தையர்களதும் கோபத்துக்கு ஆளாகி பொலிஸ் தொல்லைகளோடு வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தால்தான் அம்மாவின் அருமை தெரியும். எனது அம்மா பருந்துகளுடன் போராடி தன் குஞ்சுகளைக் காப்பாற்றும் பறவை போன்று எங்களைக் காப்பாற்றியவள். வீட்டில் அப்பா கழுகுபோல இருந்தார்.
அம்மா உடுவில் மகளிர் கல்லூரியில் கற்று திருமணம் வரை அங்கேயே ஆங்கில ஆசிரியராக பனிபுரிந்தவர். சிறுவது முதலே ஆடல், பாடல் நாடகம் என ஈடுபட்டு அந்த கிறிஸ்துவ பெண்கள் கல்லூரியின் புகழ் பெற்ற மணவியாக இருந்தார். அப்பா வர்த்தக நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே பெரும் தனவந்தராக மேம்பட்டவர். கேழ்வி ஞானம் மிக்கவர். அவருக்கு தமிழிலும் சிங்களத்திலும் நல்ல புலமை இருந்தது. அம்மா கல்விமூலமும் அப்பா கேள்வி மூலமும் கவிதையிலும் காவிய இலக்கியங்களிலும் நல்ல தேற்ச்சி பெற்றிருந்தார்கள். அது ஒன்றுதான் அவர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை.
விபத்துப்போல நடந்துவிட்ட திருமணத்தின் பின்னர் அப்பா தழ்வுச் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அம்மாவின் ஆசிரிய தொழில் முதல் பலியானது. அம்மா இரண்டாவது பலி. மூன்றாவது பலி எங்களது கல்வி. சின்னவயதில் இருந்தே காரண காரியமில்லாமல் உதைபடும் அம்மாவை பார்த்தது வளர்ந்ததுதான் என்னை கோபக் காரனாக ஆக்கியிருக்க வேண்டும்.
----------------------------------------
பெருந்தெய்வ வழிபாடும் வெள்ளாளரின் தொகை நில உடமை சார் தனி ஆதிக்கமும் மேம்பட்டிருந்த யாழ்பாணத்தின் நிலமற்ற கோ
இந்திய வம்சவளியினரான மலையக தமிழர்களைப் பொறுத்து எண்பது விழுக்காடு தமிழகத்து வரண்ட மாவட்டங்களின் சாதிரீதியாக ஒடுக்கப் பட்ட கிராமிய உழைப்பாளர் சமூகங்களில் இருந்து வந்தவர்கள். சிறுதெய்வ வழிபாடு சார்ந்த அவர்களது கலாச்சாரத்தில் ஒப்பீட்டு ரீதியாக பெண்களுக்கான வெளி (space) அதிகம். அவர்கள் வேலை செய்த தேயிலை ரப்பர் பெருந்தோட்டங்களில் நிலம் கம்பனியதும் கலச்சாரம் தொழிலாளர்களதும் கட்டுப்பாட்டில்மிருந்தது. அவர்களுக்கு கம்பனிக்குச் சொந்தமான ஓர் அறை வீடுகள் வளங்கப் பட்டதி பெரும்பாலும் தனிக்குடித்தன வாய்ப்பிருந்தது.
மலையகப் நூறு விழுக்காடு சம்பளம் உழைக்கும் தொழிலாளர்களாகவும் தொழிற் சங்க அங்கதித்னராகவும் முன்னணிப் போராளிகளாகவும் இருக்கிறதில் புற வாழ்வில் வல்லமை பெற்றிருந்தனர்.
3
கடந்த ஆடி மாதத்தில் இருந்தே இறுதி நாட்களிலாவது அம்மாவைச் சென்று பார்த்திட முடியும் என்கிற நம்பிக்கை ஆவலுடன் நான் சென்னையில் தங்கியிருந்தேன். பல்வேறு தரப்பு நண்பர்கள் குறிப்பாக எனது முஸ்லிம் சிங்கள நண்பர்கள் விமர்சிக்கும் தமிழ் கலைஞர்களையும் தமிழ் அறிஞர்களையும் மகிந்த ராஜபக்ச அரசு குறிவைத்திருக்கிறது. “இப்போது இலங்கை வருவது உனக்குப் பாதுகாப்பில்லை” என என்னை தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். மிகுந்த சிரமங்களுக்கிடையில் எனது தம்பி பாரதிதாசன் நோய்வாய்ப் பட்டிருந்த அம்மாவை கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து செஞ்சிலுவைச் சங்க அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்திய சாலைக்கு எடுத்துவந்திருந்தான்.
அம்மா எப்போதும் தன்னை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்கிறவளல்ல. அவளை இரத்தப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதென்றாலும்கூட நிறைய போராட வேண்டியிருந்தது. “கடவுள் தந்த உடலை குத்திக் கிழிக்காமல் என்னை இப்படியே போக விடுங்கள்”, என சண்டைபோடுவாள். “ஏழை சனங்களுக்கு எங்கே பரிசோதனைகளும் வைத்தியங்களும் நடக்கிறது? என்னையும் அவர்கள் போல போக விடுங்கள்”, என்று என்னுடன் ஒருமுறை பெரிய சண்டை போட்டாள். பலகீனமாக இருந்தபோதுகூட பிடிவாதமாக தனது ஆடைகளைத் தானே துவைப்பாள். இறுதிவரை பிடிவாதமாக தனது வேலைகளை தானே செய்தாள். நிலத்தில் மட்டுமே படுப்பாள். கேட்டால் சின்ன வயசில் மகாத்மா காந்திக்கு மாலை போட்டேன். சாகும் வரை அவரைப் போலவே வாழ்வேன் என்று பிடிவாதமாகச் சொல்வாள். அவளுடைய பிடிவாதத்தால் இந்தியாவிலும் கொழும்பிலும் இருந்தபோது ஏற்பாடு செய்த சிறந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு அவள் ஒத்துழைக்கவில்லை. ஒத்துழைத்திருந்தால், நிச்சயமாக இன்னும் சிறிதுகாலம் வாழ்திருப்பாள்.
முதலில் அம்மா கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டாள். அங்கு அவரது சுவாசப் பை பாதிக்கப் பட்டிருந்தமை கண்டு பிடிக்கப் பட்டது. மேற்க்கொண்டு கிளிநொச்சி வைத்திய சாலையில் எதுவும் செய்ய முடியாத நிலமை. அரசின் தடைகளால் அங்கு போதிய மருந்துகளும் மருத்துவக் கருவிகளும் இல்லை. கடுமையான நோயாளிகள் எல்லோருக்கும் தமிழ் பகுதியில் இருந்த பெரிய வைத்திய சாலையான யாழ்பாணம் வைத்திய சாலைதான் விருப்பத் தேர்வாக இருந்தது. ஆனால் அரசு யாழ்பாணம் செல்லும் எ 9 பதையை மிலேச்சத் தனமாக மூடி வைத்திருந்தது. அடுத்த பெரிய வைத்திய சாலையான அனுராதபுரம் வைத்தியசாலையோ சிங்கள இனவெறியர்களின் கோட்டையாக இருந்தது. கிளிநொச்சி வைத்தியசாலை வடாரம் குண்டு வீச்சுக்கு இலக்கான அன்று எனது தம்பி பாரதிதாசன் வேறு வழி இன்றி வன்னிமாநிலத்தின் எல்லையில் அரசு கட்டுப்பாட்டில் இருந்த வவுனியா நகர வைத்திய சாலைக்கு அம்மாவை கொண்டு வந்தான். அந்த குண்டு வீச்சில் எனது தூரத்து உறவினர்கள் சிலரும் கொல்லப் பட்டனர். அதிர்ஷ்ட வசமாக அந்தக் குண்டுவீச்சில் இருந்து தப்பியவர்களுள் எனது தம்பியும் ஒருவன்.
அம்மா காலமாவதற்கு இரண்டுநாள் முன்னர்தான் அவளோடு தொலைபேசியில் பேசினேன். ஒருபோதும் இங்கே வந்துவிடாதே என்றுதான் அவள் திரும்ப திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தாள். அம்மாவோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய இரண்டாவது நாள் 8.11.2006 புதன்கிழமை காலையில் அம்மா உயிர் நீத்த துயரச் சேதி கிடைத்தது. மாரி காலத்து காலைப் பொழுதொன்றில் போர்க் களமாகச் சிதைந்திருந்த ஈழத்தின் தென் எல்லை நகரமான வவுனியா வைத்தியசாலையில் எனது மைத்துனியின் மகள் சசியின் அன்பான அரவணைப்பில் எனது அம்மாவின் இதயத் துடிப்பு ஓய்ந்தது. கடைக் குட்டியான பாரதியை தவிர வேறு பிள்ளைகளுக்கும் அம்மாவின் கடைசித் தருணங்களில் அவளுடன் இருந்து வழி அனுப்புகிற பாக்கியம் கிட்டவில்லை. எனது நான்கு தங்கையர்களில் ஒருத்தி மட்டும் லண்டனில் இருந்து சென்று ஒருவாறு அம்மாவின் ஈமைக் கிரிகைகளில் கலந்துகொள்கிற அதிர்ஷ்டத்தைப் பெற்றாள்.
அம்மா நீ கண்மூடியபோது இலங்கையில் காலைப் பொழுது. நோர்வேயிலோ கடைச் சாமம்.அந்தச் சமயம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த என் இளைய மகன் யாரோ தன் காதுகளை வருடியதை உணர்ந்தானாம். தொடர்ந்து கால்களை தடவும் உணர்வில் அவன் திடுக்குற்று விழித்தபோது சிவப்பு சேலையுடன் ஒரு பெண் வெளியேறுவதை கண்டிருக்கிறான். அதன் பின் அவனால் தூங்க முடியவில்லையாம். என் அம்மாவின் மரணச் சேதியைச் சொல்ல நோர்வேயில் வாழும் என் குடும்பத்தினரை தொலைபேசியில் அழைந்தபோது என் மனைவி இளைய மகனின் தரிசனம் பற்றிய சொல்லி ஆச்சரியப் பட்டாள். என்மகனும் அழுதபடி தன் காட்சி பற்றி விவரித்தான். ஐயோ அம்மம்மாவை போய் பார்த்திருக்கலாமே என அவன் அழுதான். இதுதான் பிராங்பேட்டிலும் கனடாவிலும் கூடியிருந்த எல்லா பேரப் பிள்ளைகளினதும் ஓலமாக இருந்தது. பின்னர் நான் பாரதியை அழைத்து என் மகனின் காட்சி பற்றிய சேதியைச் சொல்லிய போது அவன் “அண்ணா அம்மா சிவப்பு சேலைதான் கட்டியிருக்கிறாள்” என உடைந்து அழுதான். வாழ்வின் இத்தகைய புதிர்களை யாரோ விடுவிக்க வல்லவர்கள்??
என் அருமை அம்மா, கொடுங்கோல் அரசின் கொலைக் கரத்துக்கு அஞ்சி நேரில் வந்து உன்னை வழியனுப்ப முடியவில்லை என்பதுதான் உன் மரணத்தில் எனக்கு நேர்ந்த பெருஞ்சோகம். அம்மா நீயும்தானே வார்த்தைக்கு வார்த்தை என்னை வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாய். ஆறு வருடங்கள் உன்னோடு வாழ்ந்த பாரதிக்கும் லண்டனில் இருந்து உனது மரணச் சடங்கிற்க்கு வந்த சகோதரி லலிதாவுக்கு மட்டும் உனது திரு உடலில் கண்ணீர் வடிக்கும் பாக்கியம் கிட்டியது. உலகம் முழுவதும் சிதறிக் கிடந்த ஏனைய உனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சென்னையிலும் பிராங்பேட்டிலும் ஒஸ்லோவிலும் ரொரன்ரோவிலும் துயர் பகிர ஒன்றுகூடினோம். ஓயாமல் தொலைபேசியில் மாறி மாறி தொடர்புகொண்டு கண்ணீர் சிந்தினோம்.
அம்மா உனது மரணச் சடங்கில் கலந்துகொண்டு அழுது ஆறுதல் அடைகிற பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. கொடுங்கோன்மை நம்மை சிதறியது மட்டுமன்றி தொடர்ந்தும் குதறிக் கொண்டும் இருக்கிறது. உன்னை வந்துபார்க்கிற வாய்ப்பையும்கூட அது பறித்துக்கொண்டது. எல்லாம் முடிந்துவிட்டது. நிச்சயம் உன் அசோக வனத்துப் பறவைத் தோழிகளுக்கு ஆறுதல் சொல்ல நானும் என் சகோதரர்களும் உன்னுடைய அனைத்துப் பேரப் பிள்ளைகளுடனும் வன்னிக்கு வருவோம். அந்த நாளில் உன் சமாதியையாவது முத்தமிட்டு கண்ணீர் வடித்து உன் கதைகள் பேசி மனம் ஆறுவோம்.
----------------------------------
ஆற்றல்மிக்க எங்கள் அம்மா ஒரு சாதாரண வீட்டு பெண்ணாக இருக்க விதிக்கப் பட்டாள். ஒரு ஆணாக இருந்திருந்தால் தியாகமும் தலைமைப் பண்புகளும் மிக்க அவளது வாழ்வும் வரலாறும் வேறுமாதிரி அமைந்திருக்கும். அவளது ஆளுமைக்கு திருமண வாழ்வு தந்த பரிசு ஓயாத அடியும் கொடுமைகளும்தான். எனினும் அம்மா அத்தனை இலகுவில் பணிந்து போகிற பெண்ணல்ல. இளமையில் திருமணத்துக்கு இணங்காமல் வீட்டுடன் முரண்பட்டுக் கொண்டு கல்வி, கல்லூரிக் கலை நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகள் என துடிதுடிப்பாக இருந்திருக்கிறாள். வீட்டில் நெருக்கடிகள் அதிகரிக்கிறபோது அவளுக்குப் புகலிடமாக உடுவில் மகளிர் கல்லூரி விடுதிக் கதவுகள் திறந்து கிடந்தது.
1927ல் மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். 1930பதுகளில் இருந்து அரை நூற்றாண்டுகளாக இலங்கை தமிழரது அரசியலில் செல்வாக்குச் செலுத்திய காந்திய வாதத்தினதும் அறவழி சத்தியாக்கிரக போராட்டங்களினதும் மகத்தான வரலாறு காந்தியின் மேற்படி வருகையுடந்தான் ஆரம்பிக்கிறது.
நான் அறிவறிந்த காலத்தில் இருந்தே தினமும் சூரியனை முந்திக்கொண்டு எழுந்து முற்றம் பெருக்குவதுதான் அம்மாவின் பொழுதுபோக்காக இருந்தது. முதலில் உடுவில் கிராமத்தில் அடுத்து நெடுந்தீவில் பின்னர் வன்னியில் என்று அவள் அதிகாலையில் விளக்குமாறும் கையுமாக முற்றம் பெருக்கியபடி மரங்களோடும் பறவைகளோடும் துயில் கலையும் சூரியனோடும் மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிற காட்சிகள்தான் நினைவில் நிறைகிறது. அடுப்பில் தேனீருக்காக கொதித்துக் கொண்டிருக்கும் வென்னீரின் சுருதி முற்றதில் நிறையும். முற்றம் பெருக்கும் விளக்குமாறும் தாளம் பிசகாமல் அசையும். சிலசமயம் அம்மா தன்னை மறந்து தனது கல்லூரிக் காலத்து தமிழ் பாடல்களையோ அல்லது ஆங்கிலப் பாடல்களையோ பாடுவாள். எப்போதும் எங்கள் நலன் கருதி வாழ்ந்த எங்கள் அம்மா தொடர்ந்தும் இல்வாழ்வின் கொடுமைகளை தாங்குவதற்க்கான பலத்தை அதிகாலைகளிடமிருந்துதான் பெற்றாள் என்று தோன்றுகிறது.
போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிக்காட்டின் நடுவே நெடுஞ்சாலையில் அமைந்திருந்த எங்கள் பண்ணை வீட்டு முற்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட முதிய அசோக மரங்கள் நிரையாக நிறைந்து நிற்கின்றன. அவற்றுடன் கிணற்றடியில் நெல்லிமரம், வேலியில் தேக்க மரங்கள் பக்கவாட்டில் பனை தென்னைகள் என எங்கள் வீட்டு முற்ற வெளி ஒரு சோலையாகவே செழித்திருக்கிறது. சீதையைப் போல அம்மா வாழ்ந்த அந்த அசோக வனத்தில் எப்பவும் அணில்களுக்கும் அருகிய பச்சைப் புறாக்களும் கானத்துப் பறவைகளும் ஆட்டமும் பாட்டுமாக நிறைந்திருக்கும். சில சமயங்களில் அதி காலையிலும் மாலையிலும் வீட்டின் பின் பக்கமாக தோகையை நெளி¢த்தபடி மயில்கள் வரும். இருளில் பின் புறமாக பண்ணைக்கு வரும் இரவு விருந்தினர் பட்டியல் முயல்கள் மான்கள் காட்டுப் பன்றிகள் முள்ளம் பன்றிகள் யானைகள் என நீளும். ஒரு தடவை நள்ளிரவில் எங்கள் ஆட்டுப் பட்டிக்கு சிறுத்தைப் புலிவந்துவிட்டது. அம்மா அதனை சுட்டுக் கொல்ல அனுமதிக்காமல் தீப் பந்தத்தால் மிரட்டி விரட்டியிருக்கிறாள்.
எங்கள் முற்றத்து அசோக வனமும் அங்கு வசிக்கும் தேவதைகளும்தான் என் அம்மாவின் தோழிகள். விடிந்தும் விடியாததுமான காலைப் பொழுதில் எழுந்து காணியின் இரும்பு கேற் படலையை திறந்து விட்டு முற்றத்தைப் பெருக்க ஆரம்பிப்பாள். உண்மையில் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் அவள் தடி விளக்குமாறும் கையுமாக அந்த அசோக வனத்தில் இயற்கை அழகில் லயித்து இழந்த தன் இளமையை மீட்டு நெஞ்சத்தால் வாழ்ந்து குதூகலிப்பாள். பொல பொல வென பொழுது விடிகிறபோது அயலில் உள்ள பெண்கள் தண்ணீர் மொள்ள எங்கள் காணிக்கு வருவார்கள். அவர்கள் அம்மாவுக்கு ஊர் புதினங்கள் சொல்லுவார்கள். இனி நெடுங்காலத்துக்கு அந்த அசோக வனத்து பறவைகள் காலைப் பொழுதுகள் தோறும் தங்கள் இனிய தோழியை தேடித் தவித்திருக்கும். நீர் மொள்ள வரும் பெண்களும் அந்த அசோக வனத்தில் கால் வைக்கிறபோது அம்மாவை நினைத்து ஒருகணம் உறைந்து போவார்கள்.
2
முதலில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அம்மா காச நோயால் பாதிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகித்தார்கள். பின்னர் வவுனியா வைத்தியசாலையில் அம்மாவுக்கு சுவசப்பை புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அந்தச் சமயம் அம்மாவை பார்கிறதற்க்கு இலங்கை செல்லும் விருப்பத்தோடு
சென்னையில் காத்திருந்தேன். என்னை இலங்கை வரவேண்டாம் என எல்லாத் தரப்பில் இருந்தும் எச்சரித்தபடி இருந்தார்கள். கொழும்பில் உள்ள மேல் மட்ட தொடர்புகளைக் கொண்டுள்ள எனது முஸ்லிம் நண்பர்களும் இப்போதைக்கு கொழும்புக்கு வந்துவிடாதே என்றார்கள். இத்தகைய எச்சரிக்கைகளை வெறும் ஊகம் மட்டும்தான் என்று புறம் தள்ளிவிடவும் முடியவில்லை.
அம்மா காலமாவதற்க்கு இரண்டுநாள் முன்னாடி சென்னையில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு அவளுடன் பேசினேன். விரைவில் உன்னைப் வந்து பார்க்கிறேன் அம்மா என்று நான் கூறியபோது அம்மாவும் பதட்டப் பட்டாள். அவள் தனது இறுதி நாட்களில்கூட தன்னைப் பற்றி கவலைப் படாமல் என்னைப் பற்றியே கவலைப் பட்டாள். தனது மரண வேதனைகளை மறந்துவிட்டு அந்த நிலமையிலும் “இங்கு உனக்கு பிரச்சினை, நீ ஒருபோதும் இலங்கைக்கு வந்துவிடாதே” என்று என்னிடம் மன்றாட தொடங்கிவிட்டாள். அவள் எப்பவும் இப்படித்தான். பருந்துகள் மத்தியில் ஓயாமல் போராடி தன் குஞ்சுகளை காப்பாற்றும் ஒரு பறவைபோலவே அவள் எங்களைக் காப்பாற்றினாள்.
எனது பணக்கார அப்பா நானும் எனது சகோதரர்களும் கல்வி கற்பதை விட்டு விட்டு சிறுவயதிலேயே வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் என முரட்டுத் தனமாக விரும்பினார். படித்த என் அம்மாவுக்கும் பணக்காரரான எனது அப்பாவுக்கும் இடையில் எப்பவும் ஒரு பனிப்போர் நடந்தது கொண்டிருந்தது. எனது தம்பி பாரதியை பள்ளிக்கு ஒழுங்காக போக விடாமல் வருடத்தில் பாதி நாளாவது தனது அரிசி குத்தும் ஆலையில் வேலைசெய்யவைத்து விடுவார். எங்கள் கல்விக்காகவே அம்மா நிறைய போராட வேண்டி இருந்தது. சிறுவயதில் ஆரம்பித்து இருந்தே போராடி வாழ்ந்த எனது அம்மாவை ஒரு ஆரம்பகால பெண்விடுதலை ஆர்வலர் என்று தயக்கமின்றிக் கூறுவேன். அவள் வீட்டில் அப்பவால் மிக கொடூரமாகத் தாக்கப்பட்ட வேளைகளில்கூட அவள் தலை பணிந்ததையோ தனது கருத்துக்களை விட்டுக் கொடுத்ததையோ நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
நான் சின்னப் பையனாக இருந்தபோது கோவில்களுக்கும் விழா மண்டபங்களுக்கும் வெளியில் அடுத்தவரின் இழிவு படுத்தலை சகித்தபடி ஒதுங்கி நிற்க்கிற மக்களைப் பற்றி கவலையுடன் நிறைய கேள்விகள் கேட்பேன். சின்ன வயதிலேயே சமூகச் சூழலாலும் பள்ளிக்கூடத்தில் சமயம் மற்றும் தமிழ் கற்பிக்கிற ஆசிரியர்களின் செல்வாக்காலும் விதி மற்றும் கர்ம வினை பற்றிய அச்சம் எனக்குள் இருந்தது.
அம்மாவோ “போன பிறப்பில் அடுத்தவரை சாதி அடிப்படையில் இழிவும் கொடுமையும் படுத்தியவர்கள்தான் இந்தப் பிறப்பில் இப்படி பிறந்திருக்கிறார்கள். நீ ஒருபோதும் அத்தகைய பிழை விட்டுவிடாதே என்று கொஞ்சம் மிரட்டலாக பதில் சொல்வாள். பிறப்பில் ஒடுக்கப் உலகம் மேம்பட்டுச் செல்கிறது என்ற நம்பிக்கை உள்ளவராக ஒருக்கப் பட்ட மக்களும் சக மனிதர்களே என்கிற உணர்வை எனக்குள் விதைத்தார். சிறுவயதிலேயே த்தை ந்து செயல் பட வைக்கிற சாத்தியங்கள் குண்டுச் சட்டிகளுள் குதிரை ஓட்டிய மாதர் சங்க நடவடிக்கைகளை பல் சமூகதன்மையுடன் பல்முகப் படுத்துகிற நிச்சயமாக அம்மாவிடம் இருந்துதான் நான் தளராத மன உறுதியை வரித்துக் கொண்டேன். .
செக்கு மாடு
செக்கு மாடு
வ.ஐ.ச.ஜெயபாலன்
தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம்.
அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட இது பற்றிக் கடிதம் எழுதியிருந்தான். பதறிப் போன அவர்கள் மறுகடிதத்துக் குள்ளேயே மந்திரித்த நூலும் சென்னை வடபளனி வீபூதி பிரசாதமும் வைத்து அனுப்பினார்கள். இது அவசர முதலுதவி.
இதைவிட அவனது நலத்துக்காகத் தமிழகத்துக் கோவில்களுக்கு யாத்திரை போய் பிரார்த்தனை செய்யப் போவதாகவும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். தங்கள் சேமிப்பில் கொஞ்சம் பணம் இருப்பதாகவும் தங்கள் யாத்திரைக்காகப் பணம் அனுப்புவது அவசியம் இல்லை என்றும் வேறு எழுதியிருந்தார்கள். ராசன்தான் குமரனுக்கு செய்வினை செய்து பேயை ஏவி விட்டிருக்கிறான் என்ற விடயத்தையும் கண்டுபிடித்து எழுதியிருந்தாள் கனகம்மா. மந்திரவாதிகளின் ஊரான மட்டக் களப்புக்கு அண்மையில் ராசன் போய் வந்திருப்பதாக அவளுக்கு துப்புக் கிடைத்திருக்கிறதாம்.
தன்னை நேசிக்க உலகத்தில் இரண்டுபேராவது இருக்கிறார்களே என்கிற விடயம் பாறாங் கல்லாக உறைந்துபோயிருந்த அவனது மனதை நெகிழ வைத்திருக்க வேண்டும். கடிதம் வந்த அன்று குமரன் அந்தக் கடிதத்தை முதமிட்டுக்கொண்டு நெடுநேரமாக அழுது கொண்டிருந்தான். பல்வேறு சமூக விடயங்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதிய போதும் இந்து சமய, தமிழ் கலை கலாச்சார விடயங்களில் மட்டும் தமிழகம் சம்பந்தப் பட்டவை எல்லாம் மகத்தானவை என்று கருதுகிற சராசரி இலங்கைத் தமிழன்தான் அவனும். அம்மாவினதும் கமலியினதும் கடிதம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மந்திரித்த நூலைக் கையில் கட்டிக் கொண்டு ‘இனி ஏலுமென்றால் ஆட்டிப் பார்‘ எனெ தனக்கு தொல்லை தருகிற பேய்க்குச் சவாலும் விட்டான்.
கொஞ்ச நாட்களுக்குப் பேய் தென்படவில்லை. பேய்க்கு நேர்ந்த கதியைப் பற்றி அம்மாவுக்கும் கமலிக்கும் மகிழ்ச்சியோடு கடிதம் எழுதிய அன்று இரவே மீண்டும் பேயின் சேட்டைகள் ஆரம்பித்து விட்டன. பாத்திரங்களை உருட்டி ஒலி எழுப்புகிற வளமையான சேட்டைகளோடு பேய் இப்போது இரகசியத் தொனியில் பேசவும் செய்தது. நச்சுக் கொல்லி மருந்துகளுக்குப் பழக்கப் பட்டு விடுகிற கொசுக்களைப் போல அந்தப் பேயும் வீபூதிக்கும் மந்திரித்த நூலுக்கும் பழக்கப் பட்டுவிட்டது என்பதைப் புரிந்து கொண்டபோது அச்சத்தில் குமரனின் உடல் நடுக்கம் எடுத்தது.
2
இரண்டு வருடங்களுக்கு மேலாக குமரன் ஒஸ்லோவின் மத்தியில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில் பாத்திரம் கழுவுகிற மெசினுக்கு எடுபிடி ஆளாக இருந்து வருகிறான். வந்து குவிகிற எச்சில் தட்டுக்களையும் அழுக்குச் சமையல் பாத்திரங்களையும் அந்த இரும்புப் பூதத்தின் வாயில் திணிக்கிறதும் அது நக்கித் துடைத்துத் தருகிறவற்றை மீண்டும் வெளியில் எடுத்து அடுக்கி வைக்கிறதும் மட்டும்தான் அந்த ஊணவு விடுதியில் அவன் செய்து வருகிற வேலை. பயிற்றுவித்தால் ஒரு குரங்குகூட இதைச் செய்துவிடும் என்பது புரிகிற போதெல்லாம் குமரனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும்.
மழை நாட்களில் எச்சில் தட்டுகள் அவ்வளவாகப் பெருகாது. கழுவுகிற மெசினும் அவனும் சற்று ஓய்ந்திருப்பார்கள். அப்போதெல்லாம் தான் ஒரு பல்கலைக் களக பட்டதாரி என்கிற விசயத்தை அந்த மெசினுக்குப் புரிய வைக்க முயற்ச்சி செய்வான். வீட்டுச் சொந்தக்காரி ‘பேரித்‘ , அந்த உணவு விடுதி நிர்வாகி ‘ஆரில்ட்‘ என அவனோடு சம்பந்தப் படுகிற நோர்வேஜியர்களைப் போலவே அந்த மெசினும்கூட அவனது சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதுதான் அந்த மெசின்மீது அவனுக்கிருந்த மனத்தாங்கல்களுக்குக் காரணம். இருக்காதா பின்னே.
தமிழ் மாணவர்கள் இலங்கைப் பல்கலைக் களகங்களில் அனுமதி பெறுகிற சாத்தியம் அருகியிருந்த காலக் கட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கே அனுமதி பெற்றவனல்லவா அவன். இதற்காக அவன் தனது இளமைக் காலம் முழுவதையுமே இழந்திருக்கிறான். பேராதனைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்த காலத்தில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டு அகதியாக யாழ்ப்பாணத்துக்கு ஓடிச் சென்றான். பின் வருடக் கணக்கில் உண்ணாவிரதம் ஊர்வலம் என்று போராடி யாழ்ப்பாணப் பல்கலைக் களகத்துக்கு இடமாற்றம் பெற்று அங்கேயே படித்து முடித்து பட்டமும் பெற்றான். இவையெல்லாம் சாதனையே இல்லையா ? யாரும் இதனை பொருட்படுத்த வேண்டியதே இல்லையா ?
வாட்டசாட்டமான தேகத்துடன் வேலை தேடி வந்திருக்கிறவன் இலங்கைத் தமிழன் என்று தெரிந்ததுமே அந்த உணவு விடுதியின் நிர்வாகி ஆரில்ட் பாத்திரம் கழுவுகிற வேலைக்கு குமரனே மிகப் பொருத்தமான நபர் எனப் புரிந்து கொண்டு அவனுக்கு வேலை வழங்கினான். அந்த மெசினுக்குக் கூட நெடும் காலமாக இலங்கைத் தமிழர்களது சகவாசம் இருந்ததில் தமிழைப் புரிந்து கொண்டது. குமரனும் அந்த மெசினுக்கு உண்மையுடன் குறிப்பறிந்து பணிபுரிந்தான். முறைப்படி அதனைப் பராமரிப்பது, வேலை முடிந்தபின் குளிப்பாட்டி ஈரம் துவட்டி விடுவது என அவன் அந்த மெசினுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. தன்னை அழிப்பதற்க்குச் சதி செய்கிற பேயுடன் அந்த மெசின் தொடர்பு வைத்திருக்கிற விடயம் தெரிந்தபோது அவன் ஆடிப் போய்விட்டான். இந்தக் குழப்பத்தில் அந்தமெசினை அவன் உதைத்தது என்னவோ உண்மைதான். இதைப் போய் அந்த உணவு விடுதி யின் நிர்வாகி பெரிது படுத்தி இருக்க வேண்டாம். நிர்வாகி பக்கத்தில் எங்கோ நிற்க்கிற நேரம் பார்த்து அந்தப் பாத்திரம் கழுவும் மெசின் ‘சிசுக் கொலைகாரன், சிசுக் கொலைகாரன்‘ என அவனைக் கிண்டல் செய்தது.
அதுவரை பேய்மட்டும் அவன் மீது இப்படி ஒரு பழியைச் சுமத்தி வந்தது. குமரன் ஆத்திரத்துடன் ‘நீயுமா புரூட்டஸ்‘ என்று கத்தியபடி மெசினுக்கு உதை விட்டான்..
3
இன்றைய நாள் முடிவடைவதற்குள்ளேயே அந்தப் பேயை தேடிப் பிடித்து நொறுக்கிப் போட வேண்டுமென்று குமரனுக்கு வெறியேற்றப் பட்டதற்கு போதிய காரணங்கள் இருந்தன. குமரன் எப்போது வீட்டுக்குப் போனாலும் அவனது அறை மூலையில் இருந்த மின்சார அடுப்பங்கரையில் நாற்றமெடுக்கும் எச்சில் கோப்பைகளை பேய் குவித்து வைத்திருக்கும். அந்தப் பேய் இதனோடு திருப்திப் படாமல் இரவிரவாக அந்த எச்சில் பாத்திரங்களை நிலத்தில் எறிந்து உருட்டி ஒலி எழுப்பி அவனது தூக்கத்தையும் கூட கெடுத்தது. காலையில் போய்ப் பார்த்தால் பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக்காது.
ஒருமுறை எதிர்பாராத விதமாக அவனது வீட்டுக்கும் ஒரு விருந்தாளி வந்திருந்தான். பல்களைக்களக நண்பனான அந்த விருந்தாளி வீட்டுக்கு வந்த உடனேயே பேயின் ஆதரவாளனாக மாறி விட்டதில் குமரனது கோபத்துக்கு ஆளாக வேண்டி யிருந்தது. அடுப்பங்கரையில் எச்சில் கோப்பைகளைக் குவித்து வைப்பது பேயல்ல குமரன்தான் என்பது அவனது வாதம். “ஒஸ்லோ நகரம் முழுவதற்குமே எச்சில் கோப்பை கழுவித் தாறவன் நான், என்னைப் பார்த்து சாப்பிட்ட கோப்பை களுவ வக்கில்லாதவன் என்று சொல்ல நீ யாரடா ?” ஏன்று பேசி குமரன் அவனைத் துரத்தி விட்டான்.
அந்த இரவு எச்சில் பாத்திரங்களைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது பேய். அவனுக்கு கோபம் தாளவில்லை. “சொல் நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என அவன் கத்தினான். மின்சார அடுப்பங்கரைப் பக்கமாக பேய் சிரிக்கும் சப்தம் கேட்டது. “உனது அக்கா குந்தவையின் சிசுவைக் கொலை செய்தது பாவம் இல்லாமல் என்னவாம்” என்று பேய் முனுமுனுத்தபோது அவன் உண்மையிலேயே தடுமாறிப் போனான். அவனது முகம் வெளிறிப்போனது. உடல் நடுங்கியது. “குந்தவை அக்காவின் பிள்ளையை நானா கொன்றேன்” என்று தன்னைத் தானே விசாரித்து துக்கித்தான்.
அவனுக்கு மூன்று சகோதர சகோதரிகள் . அக்காவின் பெயர் குந்தவை. தங்கையின் பெயர் செல்வி. தம்பி சுரேஸ். போர்க்களத்தில் மரணமடைந்து விட்ட அவனது இயக்கப் பெயர் மேஜர் பகத்சிங். குமரனின் அக்கா பிறந்த தசாப்தத்தில் பிறந்த பலருக்கு குந்தவை என்ற பெயர் வாய்த்திருந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை வாசித்துவிட்டு யாழ்ப்பானத்து தமிழர்கள் சிலர் சோழ அரசர்களாகவும் இளவரசிகளாகவும் தங்களை வரித்துக் கொண்டு பகல் கனவுகளில் புலிக் கொடியுடன் பவனி வந்த நாட்கள் அது. புலிக் கொடி தாங்கியபடி குதிரைகளிலும் கப்பல்களிலும் திரிந்த அவர்கள் தமது கனவுலகச் சுப்பர்மான்களான சோழ அரசர்களது பெயர்களை தமது பிள்ளைகளுக்கும் சூட்டினர். அவனது அக்காவும் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் வெளிவந்த காலத்தில் பிறந்தவள்தான். அவளுக்கு சோள இளவரசி குந்தவைப் பிரட்டியின் பெயர் இப்படித்தான் வாய்த்தது.
4
பெயரின் பின்னனி எதுவாக இருந்த போதும் குந்தவை சராசரி யாழ்ப்பானத்துப் பெண்தான். சின்னவயதில் இருந்தே படிப்பில் அவளுக்கு ஈடுபாடிருக்கவில்லை. வீட்டுப் பணிகளை ஒரு ஈடுபாட்டோடு செய்கிறது, ஊர் ஊராக ஆள் அனுப்பி நல்ல பூக்கன்று நாற்றுகளைச் சேகரித்து வீட்டு வளவையும் முற்றத்தையும் பூஞ்சோலையாக்குவது; இலங்கை வானொலி `பூவும் பொட்டும் – மங்கையர் மஞ்சரி` நிகழ்ச்சிக்கு கடிதங்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பி வானொலியில் அவை வாசிக்கப் படுகிறபோது உச்சி குளிர்ந்து போவது, இப்படி அவளது உலகம் யாழ்ப்பானத்து சராசரி இளம் பெண்களின் உலகம்தான். இலங்கை வானொலியில் வாசிக்கப் பட்ட குந்தவையின் மிக சாதாரண கவிதை ஒன்றைப் பெண் பெயரில் “ஓகோ ஒகோ” எனப் புகழ்ந்து பாராட்டிக் கடிதமெழுதி குந்தவையின் சினேகிதனாகியவன்தான் ராசன். இதனை மோப்பம் பிடித்தது, ராசனின் ஊர், பெயர், சாதிசனங்களைப் பற்றிய தகவல்களை விசாரித்து அறிந்தது பின்னர் குந்தவையை விசாரித்து எச்சரித்தது இவையெல்லாம் யாருக்குமே தெரியாமல் நான்கு சுவர்களுக்குள் கனகம்மாவே நடத்தி முடித்திருந்த நாடகம். முதலில் காதல் ஒன்றும் இல்லை, வானொலிக் கவிதைகள் தொடர்பாகப் பாராட்டி ராசன் கடிதம் எழுதியது மட்டும்தான் நடந்தது என்று வாதிட்ட குந்தவைக்கு கனகம்மா தான் கைப்பற்றி வைத்திருந்த கடிதங்களைக் காட்டினாள். பின்னர் அவளிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு கதையை தங்கள் இருவருக்குள்ளும் அமுக்கி விட்டாள் கனகம்மா .
இது நடந்து நான்கைந்து வருடங்களுக்குப்பின் மீண்டும் ராசனும் குந்தவையும் தொடர்புகளை பராமரிக்கும் விடயம் கனகம்மாவுக்குத் தெரிய வந்தது. அப்பாவுக்குக்கூட இதனைச் சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனையோடு கனகம்மா அப்போது பல்கலைக்களக மாணவனாக இருந்த குமரனிடம் குந்தவையின் காதல் விபரம் சொன்னாள். குமரனே அப்பாவாக அவதாரம் எடுத்து, குந்தவையை அக்கா என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து அட்டகாசம் செய்துவிட்டான். “எங்கள் அந்தஸ்தென்ன கேவலம் ஒரு சிறு சாப்பாட்டுக் கடை நடத்திற நாயை கல்யாணம் கட்டப் போறியா” என்று குமரன் கத்தினான். “தம்பி நீ பேசிற கொம்யுனிசம் இதுதானா” என்று கிளர்ந்த குந்தவை, பின் பணிந்துபோய் இனி ராசனிடம் தொடர்பு கொள்வதில்லை என்று மீண்டும் சத்தியம் செய்து கொடுத்தாள். இந்தத் தடவை கனகம்மா அவளை நம்பவில்லை. பின்னர் குந்தவைக்கு திருமணப் பேச்சுகள் ஆரம்பித்தபோதும் செவ்வாய் சாதகத்தில் எழாவது வீட்டில் குந்தியிருந்து திருமன முயற்ச்சிகளைத் தோற்கடித்துக் கொண்டிருந்தது.
இதுதான் அவர்களது வாழ்வைத் தலை கீழாக மாற்றிப் போட்ட சம்பவங்கள் பல வேகமாக இடம் பெற்ற காலக் கட்டம். “நாட்டுக்காக வீட்டை விட்டுப் போகிறேன். என்னைத் தேடவேண்டாம்” என துண்டெழுதி சோற்றுப் பானைக்குள் வைத்துவிட்டு சுரேஸ் காணாமல் போனது இந்தச் சம்பவக் கோவையின் தொடக்கம். அதன் பின் தங்கை செல்வி பூப்படைந்தது, நாகலிங்கம் பணியில் இருந்து ஓய்வூதியம் பெற்று வீட்டில் சாய்மனை நாற்காலி வாசியானது, போராளியாக இயக்கத்துக்குப் போன சுரேஸ்கா அகால மரணமடைந்து மாவீரனாகியது, குமரன் நோர்வேக்கு அகதியாக வந்து சேர்ந்து வீட்டாரின் சுமைதாங்கியானது எல்லாம் அடுத்தடுத்து இடம்பெற்ற சம்பவங்கள்.
5
குமரன் அகதியாக நோர்வே வந்து சிதைய யாழ்ப்பாணத்தில் அவனது குடும்பம் சமூக பொருளாதார ரீதியாகப் பலப்படத் தொடங்கியது. புதுப் பவிசு வந்ததில் நாகலிங்கம் தன்னையும் பணக்காரர் வரிசையில் தூக்கி இருத்திக் கொண்டார். கடந்த சில வருடங்களாகக் குந்தவைக்கு பள்ளி ஆசிரியர் மட்டத்தில்கூட ஒரு மாப்பிளை தேட முடியாமல் கஸ்டப் பட்ட நாகலிங்கம் திடாரென்று டாக்டர், எஞ்சினியர், பல்கலைக்களக விரிவுரையாளர் எனன்ற மட்டத்தில் மாப்பிளை தேட ஆரம்பித்தார். குந்தவைக்கு கொழும்பு பல்களைக்களக விரிவுரையாளரான பேரின்பத்தை திருமணம் பேசப் பட்டது. மாப்பிளை வீட்டார் மூன்று லட்சம் சீதணம் கேட்பதாக முதலில் கடிதம் வந்தது. குமரனும் சரி பணம் அனுப்புகிறேன் என்று வழி மொழிந்து பதில் எழுதினான்.
இதற்குள் பேரின்பத்தின் தாயார் மகனுக்கு பல பணக்கார வீடுகளில் இருந்து திருமணம் பேசி வருகிறார்கள் என்று கூறி தங்கள் பெருமை பேசத்தொடங்கினாள். குந்தவையின் சாதகமும் பேரின்பத்தின் சாதகமும் நன்கு பொருந்தி இருப்பதால்தான் தாங்கள் இந்த திருமணத்துக்கு சம்மதித்தாகவும் இந்த திருமணத்தால் தங்களுக்கு நட்டம்தான் என்றும் அவள் திரும்ப திரும்ப கூறியபோது நாகலிங்கம் கொதித்துப் போய்விட்டார். “நாங்கள் மட்டுமென்ன சின்னப் பணக்காரர்களா ? எனது மகன் குமரன் நோர்வேயில் கோடாஸ்வரனாக இருக்கிறான். படதாரி, பெரிய அறிஞன். நோர்வே அரசாங்கமே அவனை இலங்கைக்குத் திரும்பி செல்ல விடாமல் வேலை, வீடு எல்லாம் கொடுத்து தங்கள் நாட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலகாலத்தில் அவனுக்குக் குடியுரிமைகூடக் கொடுத்து விடுவார்கள். நாங்களும் பணக்காரர்தான். எங்களாலும் ஐந்து லட்சம் சீதனமாகக் கொடுக்க முடியும்” என்று ஆத்திரப் பட்டு பொரிந்து நாகலிங்கம் வாக்குறுதியும் வேறு கொடுத்து விட்டார். வீட்டில் கனகம்மா, செல்வி, குந்தவை எல்லோரும் இதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டார்கள்.
இதை அறிந்ததும் குமரனுக்கு ஐந்தாறு நாட்களாக கை கால் ஓடவில்லை. ஒருநாள் முழுவதும் அறையைப் பூட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதான். தனது தந்தையாராகிய நாகலிங்கத்தை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்து நீண்ட கடிதமொன்றும் எழுதினான். சம்பிராய பூர்வமாக “உங்கள் அன்பு மகன் குமரன்” என்று வீட்டுக்கு எழுதும் கடிதங்களை கையொப்பமிட்டு முடிப்பது அவனது வளக்கம். ஆனால் அந்தக் கடிதத்தில் அவன் வெறுமனவே “குமரன்” என்று மட்டுமே கையொப்பமிட்டிருந்தான். நாகலிங்கம் அதைப் பற்றி ஒன்றுமே அலட்டிக் கொள்ளவில்லை. உனது பெருமையை நிலை நாட்டத்தான் அப்படிச் சொன்னேன். அந்த லெக்சரர் மாப்பிள்ளை ஐந்து என்ன, பத்து லட்சமே பெறுவான். நீயும் கொஞ்ச நாளைக்கு ஜெர்மனியில் இருக்கின்ற பக்கத்து வீட்டுப் பையன் நாதனைப்போல இரண்டு வேலை மூன்றுவேலையென ஓடி ஆடிச் செய்யலாம்தானே. கவலையை விட்டுவிட்டு ஆகிறதைப் பார். சீதணப் பணத்தைக் கூடிய விரைவில் அனுப்பிவை.” என்று நான்கு வரியில் கடிதம் எழுதி யிருந்தார்.
ஒருவாறு பாரமிழுக்கிற மிருகம்போலாகி உறக்கத்தையும் ஓய்வையும் மறந்து இரண்டு மூன்று உணவு விடுதிகளில் ஓடி ஓடிக் களுவி ஐந்து லட்சம் அனுப்பியபோது, கனகம்மா குந்தவையும் கையுமாக கொழும்புக்கு வந்து தொலைபேசியில் விக்கி விக்கி அழுதாள். குந்தவை கர்ப்பமாய் இருக்கிறாள், அந்தப் படுபாவி ராசன்தான் அவளை ஏமாற்றிக் கெடுத்துப்போட்டான் என்று அழுத அம்மாவைச் சமாதானம் செய்த குமரன், ரகசியமாக கருச்சிதைவு செய்துவிட்டு ஏற்கனவே பேசி ஒழுங்காய் இருக்கிற மாதிரி பேரின்பத்துக்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று தொலை பேசி மூலமே தீர்ப்பு வளங்கினான்.
“நீ மட்டும் கமலியைக் காதலிக்கலாம் நான் ராசனை விரும்பினால் மட்டும் பிழையா” என்று வாதாட முற்ப்பட்ட குந்தவையை “பொத்தடி வாய் வேசை” என்று நெத்தி அடியில் வாயை அடைத்தவன் கருச்சிதைவுக்குமுன் இனி அவளோடு எதுவும் பேசமுடியாது என்றும் மறுத்து விட்டான்.
“செப்புச் சல்லியும் சீதனமாகத் தனக்கு வேண்டாம் என்று ராசன் கடிதம் எழுதியிருக்கிறான் மகனே. குந்தவையை ராசனுக்கும் செல்வியை பேரின்பத்துக்கும் கலியாணம் செய்து வைப்போமா” என்று தயங்கி தயங்கி கோரிக்கை விடுத்த தாய் மீதும் வெறுப்பைக் கக்கினான். நாகலிங்கமும் குமரனும் , ராசனை நிராகரித்ததற்க்கு ஒரு சிறு உணவு விடுதியின் சொந்தக் காரனான ராசனது தாழ்ந்த சமூக அந்தஸ்துதான் காரணம். மற்றப்படி ராசனும் அவர்களும் ஒரே சாதிதான்.
குந்தவையின் திருமணம் நடந்து அதற்குள் இரண்டு வருட மாகிவிட்டது. அவள் இப்போது தனது கணவன் பேரின்பத்துடன் லண்டனுக்கு வரவிருக்கிறாள். “அத்தானுக்கு மேற்படிப்புக்காக புலமைப் பரிசில் கிடைத்திருக்கிறது. வருகிற யூன் மாதமளவில் லண்டன் செல்கிறோம். நான் தாயாக இருக்கிறேன். கட்டாயம் நீ என்னை வந்து பார்க்க வேண்டும்.” எனக் குந்தவை மகிழ்ச்சியோடு கடிதம் எழுதியிருந்தாள். லண்டனில்தான் குழந்தை பிறக்குமாம்.
6
இரவும் பேய் 'சிசுக் கொலை காரன். ' என்று குற்றம் சாட்டியதில் குமரனுக்கு நித்திரை கொள்ள முடியவில்லை. குந்தவையின் கருச் சிதைவுக்கு ஒருவகையில் தான்தான் காரணமென அவனது மனது அடித்துக்கொண்டது. கருச் சிதைவைச் 'சிசுக்கொலை ' என்று பேய் சொல்கிறது. பேயின் கூற்றில் அவனுக்குச் சம்மதமில்லை.
காலையில் எழுந்தவன் நேரே அடுப்பங்கரைக்குப் போய்ப் பார்த்தான். பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக்கவில்லை. எனினும் மின் அடுப்பிலும் கழுவும் தொட்டியிலும் எச்சில் கோபைகளையும் உணவு அடிப்பிடித்த பாத்திரங்களையும் பேய் குவித்து வைத்திருந்தது. பேயின் தொல்லையால் அவன் இளைத்துப் போனான். தூக்கமின்மையால் நிரந்தரமாகவே கண்கள் சிவந்து போனது.
தலைவலியும் குடிகொண்டது. தலைவலி தாங்க முடியாத ஒரு பொழுதில் சென்ற மாதமே அவன் வைத்தியர் ஒருவரைப் போய் பார்த்திருந்தான். துக்கமும் தூக்கமின்மையும் காராரணமாக குமரனது மனநிலை பாதிப்படைந் திருப்பதாக அந்த வைத்தியர் கூறினார்.
வைத்தியருக்கு விசயம் தெரிந்திருக்க நியாய மில்லை. தன்னுடைய வீட்டில் பேய்த் தொல்லை இருப்பதையும் தூக்க மின்மைக்கு அதுதான் காரணமென்பதையும் குமரன் அந்த டாக்டருக்கு எடுத்துச் சொல்ல முயன்றான். அவனது நோர்வீஜிய மொழி அறிவு அதற்கு ஒத்துழைக்க வில்லை. மூன்றாம் பேர்வளிக்கு இந்த விடயம் தெரிய வேண்டாம் என்பதால் மொழி பெய்ர்ப்பாளர் ஏற்பாட்டுக்கும் குமரன் ஒருப்படவில்லை.
அவனது கதைகள் எல்லாவற்றையும் கேட்ட அந்த வைத்தியர் 'இரண்டு வருடங்களாக இந்தியாவுக்குச் சென்று அம்மாவைப் பார்க்கவும் கமலியை திருமணம் செய்யவும் ஏன் உன்னால் முடியாமல் இருக்கிறது ? ' என்று ஆச்சரியத்தோடு வினவினார்.
'எனக்கு முதலில் இந்தியா விசா கிடைத்தது. அப்போ எனது தங்கை செல்விக்கு சீதணம் உழைத்து அனுப்ப வேண்டி இருந்ததால் இந்தியாவுக்குப் போக முடியவில்லை. இப்போ இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா விசா தருவதில்லை ' என்று தனக்குத் தெரிந்த நோர்வீஜிய மொழியில் சிரமத்துடன் எடுத்துச் சொன்ன அவன் மனமுடைந்து அழுதான். 'இலங்கைத் தமிழர் என்பதால் இந்திய விசா கிடைக்கவில்லையா ' என்று அந்த வைத்தியர் ஆச்சரியப் பட்டார். கமலியையும் அம்மாவையும் இங்கே அழைத்துப் பார்க்கலாம் என்றால் நோர்வீஜிய விசாவும் கிடைக்கவில்லை என்றான் குமரன். டாக்கடர் இரண்டு சீட்டுகள் எழுதித் தந்தார். ஒன்று மருந்துக் கடைக்கு. மற்றது இந்தியத் தூதுவருக்கு. குமரனின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அவனுக்கு இந்திய விசா வளங்கி உதவிட வேண்டும் எனக் கோரும் இந்தியத் தூதுவருக்கான சிறு கடிதம் அது.
டாக்டர் நல்லவர் போலத்தான் தோன்றினார். அவருடைய மாத்திரைகளுக்குப் பேயை விரட்டுகிற சக்தி இருக்கிறதாகவே பட்டது. முந்தி மந்திரித்த வபூதிக்கும் நூலுக்கும் பழக்கப் பட்டது போல, இந்த மருந்துக்கும் பேய் பழக்கப் பட்டுவிடுமோ என குமரன் அஞ்சினான். வைத்தியரின் கடிதத்தைப் பார்த்து விட்டு இந்தியா விசா தந்து விடுவார்கள் என்றும் நம்பத் தலைப்பட்டதில் அவன் மீண்டும் உயிர்க்கத் தொடங்கியிருந்தான். வைத்தியரைச் சந்தித்த இரவு முழுக்க அவன் மூசி மூசித் தூங்கினான். நெடு நாளைக்குப் பிறகு கனவு கண்டான். காலையில் எழுந்த போது ஒரு கனவு மட்டும் நினைவில் சிதைந்திருந்தது.
அந்தக் கனவு முழுவதும் சூரியன் கனன்று கொண்டிருந்தது. உலகத்தைப் பிடித்திருந்த வெண்பனி எல்லாம் உருகி ஆறாக ஓடிக் கழிந்தது. உலகம் பச்சையாக உயிர்த்துத் துடித்தது. குமரனும் ஒரு மரமாக வேர் ஊன்றினான். கைகள் கிழைகளாக விரிய, விரல்கள் மிலாறுகளாக சிலும்பின. கிழைகள் எங்கும் பசும் தளிர்களும் பூக்களும் பிஞ்சுகளும் நிறைந்து இலைகளும் தளிர்களுமாயின. அந்த மரத்தைப் பற்றிப் படர்ந்த பூங்கொடி வேறு யாருமில்லை, கமலினிதான். அந்த மரத்தின் நிழலில் வந்து தங்கிய கிழப் பசுவுக்குக் கனகம்மாவின் சாயல். இந்தப் பசுவும் நானும் சினேகிதம். இந்தப் பசு ஒருபோதும் என்னைத் தின்று போடாது என்று குதூகலமாகச் சொன்னது பூங்கொடி. பூங்கொடியைத் தழுவிய மரம் பசுவுக்கு கனிகள் தந்தது.
கடாயமாக இரண்டு வேலை செய்து பணம் சேற்க வேண்டி இருந்ததில், நெடுநேரம் தூங்க வைக்கிற மாத்திரைகளைக் கைவிட நேர்ந்தது. வைத்தியர்கூட பிசாசின் ஆள்தானோ என்று குமரனுக்குச் சந்தேகமும் வந்தது.
காலையில் வேலைக்கு வருகிறபோதும் பேயின் சேட்டை இருந்தது. இரண்டொரு தடவை ஓடிக் கடந்து செல்கிற மோட்டார் வண்டிக்குள் பாய்ந்து, அந்தப் பேயை வண்டிச் சக்கரங்களுள் நசித்துப் போடவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. வருகிற வழியில் நெடு நேரம் ஆற்றுப் பாலத்தில் நின்றான். ஆற்றில் பாய்ந்தால் பேயை ஆற்றில் மூழ்கடித்து விட்டு தான் மட்டுமே தப்பித்து கரை சேர முடியுமா என்பது பற்றி அவனால் ஒரு இறுதி முடிவு எடுக்க முடியவில்லை.
உணவு விடுதி மூடுவதற்கு இன்னமும் நேரமிருந்தது. வெளியே அந்த நள்ளிரவு பட்டப் பகலாகத் தோற்றம் தந்ததை அவன் சன்னல் வழியாகப் பார்த்தான். வீதிக்கும் கட்டிடங்களுக்கும் பின்னே தேவதாரு மரங்கள் துருத்திக் கொண்டிருந்த மலைக் காட்டின் மேலே அவனது கனவில் சுடர் விட்ட, அதே சூரியன் இருந்தது. உணவு விடுதிச் சமையல் அறைக்குள், வேலையும் மேலதிக நேர வேலையுமாக இரண்டு வருடங்களாகத் தேய்ந்து கிடக்கிற குமரனுக்குக் கனவில் வந்த சூரியனை மீண்டும் பார்ப்பது ஆறுதலாக இருந்தது. ஆப்பிள் மரம்போல துளிர்ப்பதும், கொடி படரவும் பசு துயிலவும் இடம் தந்து வாழ்கிறதும் சாத்தியமே என, கண் சிமிட்டும் அந்தச் சூரியன் அவனுக்கு எடுத்துச் சொன்னது. எனினும் சன்னலில் நின்று ஆறுதல் அடைகிறது சாத்தியமில்லை. குவிகிற எச்சில் தட்டுகளும் கழுவி ஓய்கிற மெசினும் அவனை வா வா என்று அதட்டிக் கொண்டிருந்தது.
நார்வே நாட்டுக்கு வருகிற வரைக்கும் குமரன் எச்சில் தட்டுகள் அற்ற ஒரு உலகத்தில் வாழ்ந்தவன். படிக்கிற போதும் சரி, பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றிய போதும் சரி அவனது உலகத்தில் எச்சில் தட்டுகளும் அழுக்குச் சமையல் பாத்திரங்களும் இருக்கவில்லை. எப்போதாவது அதிகாலைப் பொழுதில் மூத்திரம் பெய்ய எழுந்து வெளியில் வந்தால் புழைக்கடையில் வாழை மரக் கூட்டத்தின் அடியில் லாம்பு வெளிச்சம் தெரியும். கொட்டும் பனியில் எச்சில் தட்டுக்களையும் சமையல் பாத்திரங்களையும் குவித்து வைத்துப் பற்றுத் தேய்த்தபடி கனகம்மாவும் குந்தவையும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இப்படித்தான் ஒரு நாள் கனகம்மா பாத்திரம் தேய்த்தபடி சிருஸ்டியின் ரகசியங்கள் பற்றி குந்தவைக்கு வகுப்பு நடத்திக் கொண்டிருந்தாள். மூத்திரம் பெய்ய எழும்பி வெளியே வந்தவனைப் பார்த்ததும் இருவருக்கும் நாணமாகிப் போய்விட்டது. 'நித்திரை வரவில்லையா ராசா ' என்று கேட்டுச் சமாளித்தாள் கனகம்மா.
மெசினில் இருந்து களுவிய பாத்திரங்களை வெளியியே எடுத்து வைத்த குமரன், புதிதாக அழுக்குப் பாத்திரங்களை அதன் வாயில் திணித்து ஓட விட்டுவிட்டு, மீண்டும் சன்னல் அருகே வந்தான். இப்போதும் கனவுச் சூரியன் மலைமேல் சிரித்துக் கொண்டிருந்தது. சூரியனுக்குக் கீழே மலையில் புதிதாக ஒரு இந்துக் கோவில் இருந்தது. 'ஐயோ எனக்குத் தீர்ப்புநாள் வந்து விட்டது ' என்று குமரன் பரபரப்படைந்தான்.
வீட்டில் இருந்து உணவு விடுதிக்கு வரும் வளியில் ஒரு கிறிஸ்தவத் தேவாலயம் உள்ளது. ஒரு சமயம் அந்தத் தேவாலயத்துக்குப் போன அவன் கடவுளுடன் கூடப் பேசியிருக்கிறான். 'என்னை விசாரித்து தண்டனை வளங்கிடு ' என்று முழங்காலில் இருந்து வேண்டுதல் செய்திருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் 'என்னைச் சிலுவையில் இருந்து இறக்கிவிடு ' என்று கடவுள் அவனைக் கேட்டுக் கொள்வார். ஒருமுறை கடவுளுக்கு உதவப் போனவனை கோவிலின் காவல்காரன் பிடித்துக் கொண்டான். கடவுளைச் சிலுவையில் இருந்து இறக்கினால் சேச்சின் வருமானம் போய்விடுமென்று காவல்காரன் கவலைப் பட்டிருக்க வேண்டும். காவல் காரனின் பிடியில் இருந்தபோதே 'கடவுளே எனது பேயைத் துரத்திவிடு ' என்று அவன் கத்தினான். 'நீ என்னைக் காப்பாற்று, உன்னை நான் காப்பாற்றுகிறேன், ' என்பதுதான் குமரனின் நிலைபாடு. 'குந்தவையின் சிதைந்த கருவும், நாகலிங்கத்தின் பேராசையும்தான் உன்னைப் பிடித்த பேய்கள் ' என்று கடவுள் சொல்லி முடிக்க முன்னமே கோவில் காவல்காரன் குமரனை முற்றத்துக்கு இழுத்து வந்து விட்டான்.
மலையில் தெரிந்தது இந்துக் கோவில். இந்துக் கடவுளர்களுக்கு தன்னைப் பிடித்த பேய்களை துரத்துகிற கெட்டித்தனம் இருக்குமென குமரனுக்குத் தோன்றியது. மீண்டும் திரும்பிப் போய் பாத்திரம் கழுவும் மெசினுக்கு வழமையான பணிவிடைகள் செய்து விட்டு சன்னலண்டை வந்தபோது சூரியனும் இந்துக் கோவிலும் மறைந்து விட்டிருந்தன. உணவு விடுதியில் ஆட்களும் சந்தடியும் குறைந்து காணப்பட்டது.
7
பல்கலைக்கழகத் தேர்வு எழுதி முடித்த வசந்த கால நாட்கள் குமரனுக்கு ஞாபகம் வந்தது. அது அவனைச் சுற்றித் தேவ தூதர்களும் தேவதைகளும் இறகு கட்டிப் பறந்து திரிந்த காலம். பரீட்சை முடிவுகள் எப்படி அமையுமோ என்கிற விசாரம் இருந்தது. கமலியைப் பிரிந்து வெளிநாடு செல்வது இனியும் தவிர்க்க இயலாது என்கிறதை அவன் உணர்ந்தான். பிரிவின் தவிர்க்க இயலாமையை கமலியும் உணர்ந்தாள். அவளது நெஞ்சு துணுக்குற்று நார் நாராக உடைந்தது. எதற்கும் துணிந்தவளாக கமலி ஒத்துழைக்கத் தொடங்கியதில் இருவருமே கவலை மேகங்களுக்கு மெலே சுடர்ந்த இன்பத்துள் சிறகு கட்டிப் பறந்தார்கள். காலம் தனது திசையில் மட்டுமே நகர்ந்து செல்கிறது.
குமரனது பல்கலைக் கழக சகா ஒருவன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டான். இது நடந்து ஒரு வாரம் ஆவதற்குள்ளேயே அவனது தெருவைச் சேர்ந்த, ஒரு வருடத்துக்குமுன் சோற்றுப் பானைக்குள் கடிதம் வைத்துவிட்டுக் காணாமல் போயிருந்த ஒரு இளைஞன் மின் கம்பத்தில் செத்துக் கிடந்தான். அவன் சார்ந்திருந்த போராளி இயக்கத்துள் உட் கட்ச்சிப் பிரச்சினை என்று கதைக்கப் பட்டது. இச் சம்பவங்களால் இளைஞர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சம் அடைந்தார்கள்.குமரனது பாதுகாப்புக்கு வெளிநாட்டுப் பயணம் மட்டுமே உத்தரவாதமென கனகம்மா ஒரேஅடியாக அழுது கொட்டினாள். நாகலிங்கமோ அவனது பாதுகாப்பு, குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பு என்கிற இரண்டு மாங்காய்களையும் ஒரே கல்லில் வீழ்த்துவதில் குறியாகி அலைந்தார். இது அவன் கனடாவிலோ அல்லது மேற்க்கு ஐரோப்பிய நாடு ஒன்றிலோ அகதியானால் மட்டுமே சாத்தியம்.
குமரனது மனப் பதட்டங்களுக்கு பல காரணங்கள் இருந்தன. பரீட்ச்சைப் பெறுபேறுகள் எப்படி அமையுமோ, வெளிநாட்டுக்கு ஆட்களை அகதிகளாக அனுப்புகிற பயண முகவர்கள் காசை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுவார்களோ என்பது போன்ற வளமையான ஏக்கங்களைவிட வெளிநாட்டுப் பயணத்துக்குமுன் ஒருதடவையாவது கமலியுடன் நிறை கலவிச் சுகம் தேடிய மனசின் துக்கம் பெரிதாக இருந்தது. யாரவது நண்பர்கள் வீட்டில், ஒரிரவேனும் தங்கிவிடுகிற கோரிக்கை, கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல் கமலியிடம் எடுபடவில்லை என்பதைக் குமரன் கண்ணீரோடு உணர்ந்தபோது அதிஸ்டம் வீடு தேடி வந்தது.
கனடா போகவிருந்த அவனது பல்கலைக் கழக சகா சிவலிங்கம் திடாரென ஒருநாள் அவனைத் தேடி வந்தான். 'மச்சான் என்னை வழி அனுப்ப வீட்டில் எல்லோரும் கொழும்புக்கு வருகினம். நீதான் எங்க வீட்டையும் நாயையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ' இது சிவலிங்கத்தின் விண்ணப்பமாக இருந்தது. குமரன் அந்த அமவாசை இருட்டில் சிவலிங்கத்தின் வீட்டுக்கு கமலியை அழைத்துச் சென்றான். அவள் பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியில் தங்கியிருந்ததால் எல்லாம் இலகுவாயிற்று. கமலிக்கு தெரு நீழ வியர்த்துக் கொட்டியது. நெஞ்சத் திகிலும்
உடலின் இன்ப வேதனையும் அவளைச் சுட்டெரித்தது. தலைக்குமேல் கனவுப் பிரக்ஞையுள் மஞ்சள் மஞ்சளாக சணல் பூக்கள் அசைந்தன.
தெரு நாய்கள் குரைத்த போதெல்லாம் குமரன் கமலியின் கவசமாக நடந்தான். ஒரு சினிமாத் தனமான வெற்றிப் பெருமிதத்தில் அவன் திழைத்துப்போய் இருந்தான். கமலிக்குப் பெருமிதம் ஏதுமில்லை. இன்பக் கனவுகளிலும்கூட தன்னை இழந்து போகிற உணர்வும் கருப் பயமும் அவளை நிலத்தில் நடக்க வைத்தன. தவிர்க்க இயலாது வரவிருந்த பிரிவினாலும் அவள் உருகிப்போய் கண்ணீர் வடித்தாள்.
கமலி அழாதே, பயப்படாதே , தயவு செய்து என்னை நம்பு , நான் கட்டாயம் உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணையும் தொடமாட்டேன் என அவன் வழி நீழ வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு வந்தான்.
சிவலிங்கத்தின் வீட்டுக்குள் நுழைந்தபோது, கமலியின் கண்கள் பார்க்குமிடமெல்லாம் மஞ்சள் சணல் பூக்களாக நிறைந்து அசைந்தன. கமலியின் நினைப்பில், குமரன் சுகனைபோலவும் தோன்றியது சுகம் செய்தது.
சுகன் ஒரு அழகிய பாடும் பறவையைப் போல கமலிக்குமேல் குந்திவிட்டுப் பறந்து போய்விட்ட ஒரு பயல். அவன் சின்ன வயதில் இருந்தே கமலிக்குத் தெரிந்த பயல்தான். பின்னர் காணாமல் போயிருந்தவன் கொழும்பில் படிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு மீண்டும் ஊருக்கு வந்திருந்தான். நல்ல பிள்ளை மாதிரி ஒருமுறை கமலியின் வீட்டுக்கு வந்து தேனீரும் அருந்திவிட்டுப் போனான். அன்று கமலியின் அம்மா கமலியையும் சுகனையும் பேசவிடவில்லை. தானே முன்னுக்கு நின்று சுகனை உபசரித்து திருப்பி அனுப்பி வைத்தாள். மறுநாள் மாலை கமலியின் அம்மா பால் மாடு சாய்க்க வெளியே போனபோது கமலி வீட்டின் பின்புறமாக நின்று காற்றில் சணற் பூக்கள் அசைந்தாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு திடுப்பென வந்த சுகன் கேட்டுக் கேள்வியில்லாமல் கமலியின் கைகளைப் பற்றினான். மிரண்டுபோன கமலி கைகளை உதறிவிட்டு திமிறிப் பாய முனைந்தாள். சுகன் கமலியின் கால்களைப் பிடித்துக் கொண்டு இரந்தான். அதன்பின் கண் இமைக்கிற நேரத்துக்குள் அவன் கமலியை பூத்து மஞ்சள்க் கடலாகக் கிடந்த சணல் தோட்டத்துக்குள் கிடத்தி விட்டான். கமலியின் கூடப் பிறந்த தற்க்காப்பு உணர்வும்
கரு அச்சமும்கூட கனவுகளுக் குள்ளும் இன்ப அந்தரங்களுக் குள்ளும் மூழ்கிப் போயின. இனம் புரியாத சுகங்களை நிரந்தரமாகவே அவளது மேனியில் சுகன் பச்சை குத்தி விட்ட போதெல்லாம் அவளுக்கு வானமாகவும் தரையாகவும் தெரிந்தவை சுற்றிவர அசைந்தாடிய சணல் பூக்கள்தான். பின்னர் சுகனின் குடும்பம் முழுவதுமே கொழும்புக்குப் போய்விட்டது. அதன்பின் கமலிக்கு தொடும் சுகம் கிட்டியது பல்கலைக்கழகத்தில் குமரனின் அரவணைப்பில்தான்.
மறுநாள் காலை விடிந்தபோதே குமரனது வசந்த காலங்கள் முடிந்து விட்டிருந்தன. விழித்தபோது காற்றில் செனாய் வாத்தியத்தின் இசையில் சகானா இராகம் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது.
'யாரோ இயக்கப் பெடியள் செத்துப் போயிற்றாங்கள் ' என்று சொல்லியபடி குமரன் எழுந்து ஒன்றுக்குப் போய்வந்தான். பாவங்கள் என்றபடி அவனை மீண்டும் ஆரத் தழுவிக்கொண்டு அவனது நெஞ்சுள் புதைந்தாள் கமலி.
சற்றைக் கெல்லாம் இரும்புப் படலை திறக்கப் படுகிற சத்தத்தைத் தொடர்ந்து நாய் குரைக்கத் தொடங்கியது. அது யாழ்ப்பாணத்து நாய்கள் போர் உடை அணிந்தவர்களைப் பார்த்து குரைக்கிற குரைப்பு. பதைத்துப்போய் எழுந்த குமரன் சாரத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தான்.
துப்பாக்கியோடு சில போராளி இளைஞர்கள் முற்றத்தில் நின்றார்கள். ஒருவன் துண்டுப் பிரசுரம் ஒன்றை குமரனிடம் தந்தான். வேறு சிலர் வீட்டுக்குப் பின்புறமிருந்து குலை போட்ட வாழை மரமொன்றை வெட்டித் தோழில் சுமந்து கொண்டு வந்தார்கள். வீதி சோடிக்கிறோம் என்றபடி அவர்கள் வாழை மரத்துடன் வெளியேறியபோது குமரனுக்குச் சற்று கோபம் வந்தது. பின்னர் அவன் கையிலிருந்த துண்டுப் பிரசுரத்தை விரித்தான். முதுகில் கண கணப்பாக முலைகள் தேய்பட கமலி பின்னுக்கு வந்து நின்றாள். ஐயோ என்று குமரன் அலறினான். கமலி அதிர்ந்து போனாள். பின்னர் அவளும் குரல் எடுத்து அழத் தொடங்கினாள். அஞ்சலி துண்டுப் பிரசுரத்தில் குமரனின் தம்பி சுரேஸ் இராணுவ உடையில் எழுந்து நின்றான். படத்தின் கீழ் மேஜர் பகத்சிங் (சுரேஸ்) திண்ணவேலி, மலர்வு : 5- 6- 1968 வீர மரணம் 6- 5-.1986 என்றிருந்தது.
இப்படித்தான் அவர்களது வசந்த காலங்கள் முடிவுக்கு வந்தன. குமரன் நோர்வே நாட்டுக்கு வந்து சேர்ந்து , வேரறுந்த அகதியாகி, அன்னியப் பட்டு, உறவுகளின் பேராசைப் புதை மணலுள் கால் வைத்து, உடலும் உள்ளமும் நைந்து, இப்படிப் பேய் பிடித்தவனாகச் சிதைந்துபோனான்.
8
உணவு விடுதி மூடப் பட்டதும் தெருவில் இறங்கிய குமரன் பஸ்தரிப்பை நோக்கி விரைந்தான். இரண்டு பக்கமும் கட்டிடங்களில் வண்ண வண்ணக் கீற்றுகளாக ஒளிக் குறிகள். தெருவெல்லாம் வசந்த காலத்தின் இரவை அனுபவிக்கிற இளைய தலை முறையின் கும்மாளம். இவற்றை யெல்லாம் அனுபவிக்கிற மனித ரசனையை ஏற்கனவே அவன் இளந்து விட்டிருந்தான். சகோதரிகளது சீதனம், பெற்றோரின் பேராசை, வயசு வந்தும் காதலும் காமமும் இன்மை என்பவற்றுள் நசிந்து சிதைகிற யாழ்ப்பாணத்து அகதி இளைஞர்கள் தருகிற முதற் பலி மனித ரசனைதானே.
பஸ் தரிப்பில் யாருமில்லை. வெளியே மெல்லிய இருளும் குளிரும் தலையெடுத் திருந்தன. நான்கு குமரிகளும் மூன்று இளைஞர்களும் பியர் போத்தல்களுடன் அவனைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி தன்னைப் போலவே கபில நிறமாக இருந்ததில் அவனுக்கு சிடு சிடுப்பு ஏற்பட்டது. வெறுப்புடன் வேசி என்றவன் அந்தப் பெண் தமிழிச்சியாக இருக்க மாட்டாள் என தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
வானம் மேலும் இருண்டது. ஏன் இன்னமும் பஸ் வண்டி வரவில்லை என்பது அவனுக்குப் புரியவில்லை. மீண்டும் அவன் தனது பாவப் பட்ட வாழ்வின் நினைவுக் குழிக்குள் இடறி விழுந்தான்.
குந்தவைக்குச் சீதணமாக ஐந்து லட்சம் ரூபா அனுப்பியதுமே, அவனுக்கு கமலியை திருமணம் செய்து கொடுக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார் நாகலிங்கம். பின்னர் அவர் உனக்கு நல்ல சீதணத்தில் திருமணம் பேசி வருகிறார்கள். சீதணத்தை வாங்கிச் செல்விக்குக் கொடுத்து விட்டு அவர்களில் ஒருத்தியை திருமணம் செய்துகொள் என வலியுறுத்தத் தொடங்கினார்.
நாகலிங்கத்தை முதல் முதலாக எடுத்தெறிந்து அவன் கடிதம் எழுதியதே கமலியின் விடயத்தில்தான். 'உங்களுக்குக் காதலைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இதற்கு மேலும் எங்கள் காதலுக்குக் குறுக்கே நின்றால் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வேன். ' என்று கோபமும் துணிச்சலும் மிகுந்திருந்த ஒரு தருணத்தில் கடித மெழுதி அஞ்சல் செய்தான். அதன்பின் நாகலிங்கம் வாய் மூடி மெளனமாக ஒதுங்கிக் கொண்டார். குந்தவையின் திருமணம் முடிந்த கையோடு கனகம்மா கமலியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.
எல்லாம் கனவுபோல இனித்தது. ஒரு கனவில் பசிய சோலைகளின் ஊடாக அவன் சிறகசைத்துப் பறந்தான். திடாரென விபத்தில் அகப்பட்டது வாழ்வு. செல்வியின் கடிதம் அவன் இதயத்தை ஊனப் படுத்தியது. சக மனிதர்கள் மீதான நம்பிக்கை அதிர்ந்தது. 'அண்ணா எனது பெயருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் போட்டு விட்டு நீ கமலியை திருமணம் செய்து கொள்ளலாம் ' எனச் செல்வி எழுதி யிருந்தாள். நாகலிங்கமும் தனது நெடுநாளைய மெளனத்தைக் கலைத்து செல்வியின் கடிதத்தின் கீழே 'அவள் மூர்க்கத்தோடு இருக்கிறாள். எனக்குப் பயமாக இருக்கிறது.
எதும் செய்து விடுவாள் ' எனக் கிறுக்கியிருந்தார். எதுவும் செய்வதென்பது தற்கொலை செய்தல், போராளியாக இயக்கத்துக்கு ஓடுதல், குடும்பத்துக்கு அவமானம் விளைவிக்கக் கூடிய மாதிரியான சாதி தாழ்ந்த காதல் திருமணம் செய்து கொள்ளுதல் என பல்வேறு அர்த்தங்களாக முடிச்சு அவிழ்ந்ததில் குமரன் பதறிப் போனான்.
செல்விக்கு ஏற்கனவே தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனோடு கடிதத் தொடர்பு இருந்தமை வீட்டில் கண்டு பிடிக்கப் பட்டதும் கட்டுக் காவல் அதிகரிக்கப் பட்டதும் குமரனுக்கு ஞாபகத்தில் வந்தது. அதன் பின் இயக்கத்துக்கு ஓடி விடவும் அவள் எத்தணித் திருக்கிறாள். தன்மீது அனுதாபம் இல்லாத ஒருவனாகவும் காதலைப் பற்றிய மனிதப் புரிந்துணர் வில்லாத ஒருவனாகவுமே அவள் குமரனைப் பார்த்தாள். 'வாழ்தல் என்பது வாழ்வைப் பணயம் வைத்து அந்தஸ்துக்காக ஆடும் சூதல்ல, அண்ணாவோடு நீ வாழ்வை அனுபவிக்க முடியும் என்று வீன் கனவு காணாதே ' என்று கமலிக்குக் கூட செல்வி புத்திமதி கூறி எழுதியிருக்கிறாள்.
செல்வியின் கடிதம் குமரனை மட்டுமல்ல கமலியையும் கனகம்மாவையும் கூட கிழித்துப் போட்டது. இது செல்வியின் வேலையல்ல , அந்த சுயநலம் பிடித்த கிழவனின் சதியென நாகலிங்கத்தைத் திட்டி கனகம்மா கடிதம் எழுதியிருந்தாள். 'கமலியை உனது கையில் பிடித்துத் தராமல் நான் நான் வீடு திரும்ப மாட்டேன். உனக்காக சென்னையில் கமலியுடன் காத்திருப்பேன். ' என எழுதி சிவப்பு மையில் அடிக் கோடு வேறு போட்டிருந்தாள். அடிக்கோடு கமலியின் வேலை என்பதைக் குமரனும் புரிந்து கொண்டான்.
கமலியைத் திருமணம் முடித்து, பின் இருவருமாக வேலை செய்து, ஒரு வருடத்துக்குள்ளேயே செல்வியின் சீதணம் ஐந்து லட்சம் ரூபாவும் அனுப்பி வைப்பதாக குமரன் எழுதிய கடிதத்துக்கு வீட்டில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.
தனது மனிதக் கனவுகளைப் புதைத்து விட்டு இரவும் பகலும் வேலை வேலை யென்று சிதைந்து போகிற அவலம் அவனது இருப்பில் இப்படித்தான் தொற்றிக் கொண்டது. 'எனக்கென்று இந்த உலகில் இருப்பதெல்லாம் அம்மாவும் கமலியும்தான் ' என அவன் தனது நாட் குறிப்பில் எழுதினான். 'மற்ற எல்லோரும் போன பிறவியில் எனக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள். இந்தப் பிறவியில் வெனிஸ் நகரத்து சைலொக் போல உறவுகளாகப் பிறந்து வந்திருக்கிறார்கள்.
சம்பந்தப் படுகிறவர்களால் சக மானிடர்களாக அடையாளப் படுத்தப் படுகிறதுதான் பாக்கியம். இதனாலேயே மனித இருப்பு வாழ்வாகச் செழித்து அர்த்தப் படுகிறது. நோர்வே வந்து சேர்ந்ததில் இருந்தே குமரன் இந்த வரப்பிரசாதத்தை இழந்து போனான். இதுதான் துர் அதிஸ்டம். குமரன் மட்டுமல்ல புற்றீசல்களாகப் பறந்துபோய், பணம் பண்ணக் கூடிய நாடுகளில் அகதிகளாக விழுந்து கிடக்கிற ஈழத் தமிழர் பலரது துர் அதிஸ்டமும் இதுதான். தன்னை, தனது மனித முகத்தை சிதை சிதை யென்று சிதைத்து ஐந்து லட்சம் ரூபா திரட்டி ஊருக்கு அனுப்பியபோது குமரனின் தலையில் புதிய இடியொன்று விழுந்தது.
அதிற்சி தருகிற சென்னைச் செய்திகளும் அதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகம் இலங்கைத் தமிழர்களுக்கு விசா வழங்குவதை திடாரென நிறுத்தி வைத்ததும் அவனது கனவுகளை நிர்மூலமாக்கியது.
'ஐயோ நான் என்ன பாவம் செய்தேன் ' என பஸ்தரிப்பில் நின்றபடி குமரன் வாய்திறந்து அழத்தொடங்கினான்.
9
பஸ்வண்டி ஓடத் தொடங்கியது. அந்த நள்ளிரவிலும் தெருக்களில் பெண்களின் கூட்டம் நிறைந்திருந்ததை அவன் பார்த்தான். ஒஸ்லோ நகரத்தின் அழகே அந்தப் பாதுகாப்புத்தான்.
நாளைக்கே மீண்டும் இந்தியத் தூதரகத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அவன் தீர்மானித்துக் கொண்டான்.
விசா கிடைத்தால் சிதம்பரம் கோவில் உண்டியலில் இந்தியப் பணம் பத்தாயிரம் போடுவதாகவும் கதிர்காமத்துக்கு ஆயிரம் ரூபா தபாலில் அனுப்புவதாகவும் பஸ்ஸில் இருந்துகொண்டே தாராளமாக நேர்த்தி வைத்தான். இத் தொகை இரண்டு மாதங்களுக்கு முன்னம் சிதம்பரத்துக்கு ஐயாயிரமும் கதிர்காமத்துக்கு ஐந்நூறும் என்றிருந்தது. பணம் தேடுகிற சக்க்தியைத் தவிர ஏனையவற்றை எல்லாம் ஏற்கனவே இழந்து போயிருந்தவனுக்கு முடிந்ததெல்லாம் அவ்வளவுதான்.
கமலியை நோர்வேக்கு கூப்பிட்டு விட்டால் தனது துயரங்கள் எல்லாம் தீர்ந்துவிடுமென அவன் மனப்பூர்வமாக நம்பினான்.வேலை முடிந்து வீடு திரும்புகிற போது கமலி வீட்டில் இருப்பாள். எச்சில் பாத்திரங்கள் எல்லாம் கழுவி அடுக்கி இருக்கும். உணவு விடுதிக்கு வருகிற நார்வீஜியரைப் போல சாப்பாட்டு மேசையில் போய் உட்கார வேண்டியதுதான். கமலி செல்லம் கொஞ்சிக் கொஞ்சி அவனுக்கு உணவு பரிமாறுவாள்.
'பெண்கள் குந்தியிருந்து அரட்டை அடிக்கிறது எனக்குப் பிடிக்காது ' என்று அவன் அரற்றியபோது பஸ்வண்டியின் முன் இருக்கையில் இருந்த இளைஞர்கள் அவனை திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். கமலி வந்த உடனேயே ஒரு நல்ல தொலைக் காட்சிப் பெட்டியும் வி.சி.ஆரும் வாங்க வேண்டும் என்று அவன் மீண்டும் உறுதி எடுத்துக் கொண்டான்.
எந்தத் திரைப்படமும் சென்னையில் வெளிவந்த கையோடேயே சாயம் போன திருட்டு வீடியோக்களாக ஐரோப்பாவில் நடமாடும். கமலி வந்தபின் அடிக்கடி புதிய திரைப்படங்கள் பார்க்கலாம். தினசரி செல்லம் கொஞ்சி, கலவி முடிந்த பின்னும் சினுங்கச் சினுங்க இரவு முழுவதும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கலாம் என்ற கனவுலகில் மூழ்கி இருந்தபோது கமலி முலைகள் நசிய முதுகில் சாய்ந்திருப்பது போன்ற பிரமை குமரனுக்கு ஏற்பட்டது. பிரக்ஞை மீண்டபோது குமரன் தனது திருமணம் தள்ளிப் போனதற்காக அப்பாவையும் தங்கையையும் வசை பாடினான்.
பஸ்ஸில் இருந்த இளைஞர்கள் அடிக்கடி குமரனை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
10
அது குமரன் வழக்கமாகப் பயணம் செய்கிற பஸ் வண்டியாகிப் போனதில் சாரதியே சரியான பஸ் தரிப்பில் பஸ்ஸை நிறுத்திவிட்டுக் குரல் கொடுத்தான். அவன் தனது கனவுகளில் இருந்து மீண்டு, பஸ்ஸினால் கீழே இறங்கச் சற்று நேரம் எடுத்தது. நள்ளிரவிலும் சூரியன் மறையாது நிற்கிற காலமது. எனினும் வானில் பரவி இருந்தது அதிகாலை வெளிச்சம்தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். இப்படி ஆறுதலாக நின்று வானத்தையும் பூமியையும் பார்த்து ஐந்து வருடங்களாகிவிட்டன. அது அவன் நோர்வே வந்து சேர்ந்த வருடம். மொழி படிப்பதற்காக முறைசாராத மக்கள் கலூரி ஒன்றில் மாணவனாகி இருந்தான். அதுதான் அவன் மனிதனாகி இருந்த இறுதி வருடம்.
அந்த வருடம்கூட 'குமரன், அங்கு உனக்குப் படிப்பதற்க்கு அறுபதாயிரம் குரோனர் கடன் தருவார்கள். பணத்தை எடுத்து வீண் செலவு கிலவு செய்து விடாதே. பணத்தையும் உன் வரவு செலவுக் கணக்கையும் உடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும். ' என நாகலிங்கம் கடிதம் எழுதியிருந்தார்.
கடனாகக் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை வீட்டுக்கு அனுப்பிய போதும் அந்த வருடதின் வசந்த்தையும் கோடையையும் அனுபவிக்க பண முடையும் கமலியின் பிரிவும் அவனுக்குத் தடையாக இருக்கவில்லை.
11
ஒற்றையடிப் பாதையில் இறங்கி வீட்டை நோக்கி நடந்த போது கும்ரன் பிசாசு தன்னைப் பின் தொடர்ந்து வருவதை உணர்ந்தான். திரும்பிப் பாராமலே தன்னைத் தொடர்வது ஒரு பெண் பிசாசு என்பதை அவன் ஊகித்துக் கொண்டான். காற்றில் மிதந்து வந்த நறுமணம் சிறு வயதில் கேள்விப்பட்ட மோகினிப் பிசாசுகளின் கதைகளை குமரனுக்கு நினைவு படுத்தியது.
எதிரில் பூத்திருந்த அப்பிள் தோட்டம் இன்னமும் இருண்டு கிடந்தது.
(முற்றும்)
வ.ஐ.ச.ஜெயபாலன்
தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம்.
அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட இது பற்றிக் கடிதம் எழுதியிருந்தான். பதறிப் போன அவர்கள் மறுகடிதத்துக் குள்ளேயே மந்திரித்த நூலும் சென்னை வடபளனி வீபூதி பிரசாதமும் வைத்து அனுப்பினார்கள். இது அவசர முதலுதவி.
இதைவிட அவனது நலத்துக்காகத் தமிழகத்துக் கோவில்களுக்கு யாத்திரை போய் பிரார்த்தனை செய்யப் போவதாகவும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். தங்கள் சேமிப்பில் கொஞ்சம் பணம் இருப்பதாகவும் தங்கள் யாத்திரைக்காகப் பணம் அனுப்புவது அவசியம் இல்லை என்றும் வேறு எழுதியிருந்தார்கள். ராசன்தான் குமரனுக்கு செய்வினை செய்து பேயை ஏவி விட்டிருக்கிறான் என்ற விடயத்தையும் கண்டுபிடித்து எழுதியிருந்தாள் கனகம்மா. மந்திரவாதிகளின் ஊரான மட்டக் களப்புக்கு அண்மையில் ராசன் போய் வந்திருப்பதாக அவளுக்கு துப்புக் கிடைத்திருக்கிறதாம்.
தன்னை நேசிக்க உலகத்தில் இரண்டுபேராவது இருக்கிறார்களே என்கிற விடயம் பாறாங் கல்லாக உறைந்துபோயிருந்த அவனது மனதை நெகிழ வைத்திருக்க வேண்டும். கடிதம் வந்த அன்று குமரன் அந்தக் கடிதத்தை முதமிட்டுக்கொண்டு நெடுநேரமாக அழுது கொண்டிருந்தான். பல்வேறு சமூக விடயங்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதிய போதும் இந்து சமய, தமிழ் கலை கலாச்சார விடயங்களில் மட்டும் தமிழகம் சம்பந்தப் பட்டவை எல்லாம் மகத்தானவை என்று கருதுகிற சராசரி இலங்கைத் தமிழன்தான் அவனும். அம்மாவினதும் கமலியினதும் கடிதம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மந்திரித்த நூலைக் கையில் கட்டிக் கொண்டு ‘இனி ஏலுமென்றால் ஆட்டிப் பார்‘ எனெ தனக்கு தொல்லை தருகிற பேய்க்குச் சவாலும் விட்டான்.
கொஞ்ச நாட்களுக்குப் பேய் தென்படவில்லை. பேய்க்கு நேர்ந்த கதியைப் பற்றி அம்மாவுக்கும் கமலிக்கும் மகிழ்ச்சியோடு கடிதம் எழுதிய அன்று இரவே மீண்டும் பேயின் சேட்டைகள் ஆரம்பித்து விட்டன. பாத்திரங்களை உருட்டி ஒலி எழுப்புகிற வளமையான சேட்டைகளோடு பேய் இப்போது இரகசியத் தொனியில் பேசவும் செய்தது. நச்சுக் கொல்லி மருந்துகளுக்குப் பழக்கப் பட்டு விடுகிற கொசுக்களைப் போல அந்தப் பேயும் வீபூதிக்கும் மந்திரித்த நூலுக்கும் பழக்கப் பட்டுவிட்டது என்பதைப் புரிந்து கொண்டபோது அச்சத்தில் குமரனின் உடல் நடுக்கம் எடுத்தது.
2
இரண்டு வருடங்களுக்கு மேலாக குமரன் ஒஸ்லோவின் மத்தியில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில் பாத்திரம் கழுவுகிற மெசினுக்கு எடுபிடி ஆளாக இருந்து வருகிறான். வந்து குவிகிற எச்சில் தட்டுக்களையும் அழுக்குச் சமையல் பாத்திரங்களையும் அந்த இரும்புப் பூதத்தின் வாயில் திணிக்கிறதும் அது நக்கித் துடைத்துத் தருகிறவற்றை மீண்டும் வெளியில் எடுத்து அடுக்கி வைக்கிறதும் மட்டும்தான் அந்த ஊணவு விடுதியில் அவன் செய்து வருகிற வேலை. பயிற்றுவித்தால் ஒரு குரங்குகூட இதைச் செய்துவிடும் என்பது புரிகிற போதெல்லாம் குமரனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும்.
மழை நாட்களில் எச்சில் தட்டுகள் அவ்வளவாகப் பெருகாது. கழுவுகிற மெசினும் அவனும் சற்று ஓய்ந்திருப்பார்கள். அப்போதெல்லாம் தான் ஒரு பல்கலைக் களக பட்டதாரி என்கிற விசயத்தை அந்த மெசினுக்குப் புரிய வைக்க முயற்ச்சி செய்வான். வீட்டுச் சொந்தக்காரி ‘பேரித்‘ , அந்த உணவு விடுதி நிர்வாகி ‘ஆரில்ட்‘ என அவனோடு சம்பந்தப் படுகிற நோர்வேஜியர்களைப் போலவே அந்த மெசினும்கூட அவனது சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதுதான் அந்த மெசின்மீது அவனுக்கிருந்த மனத்தாங்கல்களுக்குக் காரணம். இருக்காதா பின்னே.
தமிழ் மாணவர்கள் இலங்கைப் பல்கலைக் களகங்களில் அனுமதி பெறுகிற சாத்தியம் அருகியிருந்த காலக் கட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கே அனுமதி பெற்றவனல்லவா அவன். இதற்காக அவன் தனது இளமைக் காலம் முழுவதையுமே இழந்திருக்கிறான். பேராதனைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்த காலத்தில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டு அகதியாக யாழ்ப்பாணத்துக்கு ஓடிச் சென்றான். பின் வருடக் கணக்கில் உண்ணாவிரதம் ஊர்வலம் என்று போராடி யாழ்ப்பாணப் பல்கலைக் களகத்துக்கு இடமாற்றம் பெற்று அங்கேயே படித்து முடித்து பட்டமும் பெற்றான். இவையெல்லாம் சாதனையே இல்லையா ? யாரும் இதனை பொருட்படுத்த வேண்டியதே இல்லையா ?
வாட்டசாட்டமான தேகத்துடன் வேலை தேடி வந்திருக்கிறவன் இலங்கைத் தமிழன் என்று தெரிந்ததுமே அந்த உணவு விடுதியின் நிர்வாகி ஆரில்ட் பாத்திரம் கழுவுகிற வேலைக்கு குமரனே மிகப் பொருத்தமான நபர் எனப் புரிந்து கொண்டு அவனுக்கு வேலை வழங்கினான். அந்த மெசினுக்குக் கூட நெடும் காலமாக இலங்கைத் தமிழர்களது சகவாசம் இருந்ததில் தமிழைப் புரிந்து கொண்டது. குமரனும் அந்த மெசினுக்கு உண்மையுடன் குறிப்பறிந்து பணிபுரிந்தான். முறைப்படி அதனைப் பராமரிப்பது, வேலை முடிந்தபின் குளிப்பாட்டி ஈரம் துவட்டி விடுவது என அவன் அந்த மெசினுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. தன்னை அழிப்பதற்க்குச் சதி செய்கிற பேயுடன் அந்த மெசின் தொடர்பு வைத்திருக்கிற விடயம் தெரிந்தபோது அவன் ஆடிப் போய்விட்டான். இந்தக் குழப்பத்தில் அந்தமெசினை அவன் உதைத்தது என்னவோ உண்மைதான். இதைப் போய் அந்த உணவு விடுதி யின் நிர்வாகி பெரிது படுத்தி இருக்க வேண்டாம். நிர்வாகி பக்கத்தில் எங்கோ நிற்க்கிற நேரம் பார்த்து அந்தப் பாத்திரம் கழுவும் மெசின் ‘சிசுக் கொலைகாரன், சிசுக் கொலைகாரன்‘ என அவனைக் கிண்டல் செய்தது.
அதுவரை பேய்மட்டும் அவன் மீது இப்படி ஒரு பழியைச் சுமத்தி வந்தது. குமரன் ஆத்திரத்துடன் ‘நீயுமா புரூட்டஸ்‘ என்று கத்தியபடி மெசினுக்கு உதை விட்டான்..
3
இன்றைய நாள் முடிவடைவதற்குள்ளேயே அந்தப் பேயை தேடிப் பிடித்து நொறுக்கிப் போட வேண்டுமென்று குமரனுக்கு வெறியேற்றப் பட்டதற்கு போதிய காரணங்கள் இருந்தன. குமரன் எப்போது வீட்டுக்குப் போனாலும் அவனது அறை மூலையில் இருந்த மின்சார அடுப்பங்கரையில் நாற்றமெடுக்கும் எச்சில் கோப்பைகளை பேய் குவித்து வைத்திருக்கும். அந்தப் பேய் இதனோடு திருப்திப் படாமல் இரவிரவாக அந்த எச்சில் பாத்திரங்களை நிலத்தில் எறிந்து உருட்டி ஒலி எழுப்பி அவனது தூக்கத்தையும் கூட கெடுத்தது. காலையில் போய்ப் பார்த்தால் பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக்காது.
ஒருமுறை எதிர்பாராத விதமாக அவனது வீட்டுக்கும் ஒரு விருந்தாளி வந்திருந்தான். பல்களைக்களக நண்பனான அந்த விருந்தாளி வீட்டுக்கு வந்த உடனேயே பேயின் ஆதரவாளனாக மாறி விட்டதில் குமரனது கோபத்துக்கு ஆளாக வேண்டி யிருந்தது. அடுப்பங்கரையில் எச்சில் கோப்பைகளைக் குவித்து வைப்பது பேயல்ல குமரன்தான் என்பது அவனது வாதம். “ஒஸ்லோ நகரம் முழுவதற்குமே எச்சில் கோப்பை கழுவித் தாறவன் நான், என்னைப் பார்த்து சாப்பிட்ட கோப்பை களுவ வக்கில்லாதவன் என்று சொல்ல நீ யாரடா ?” ஏன்று பேசி குமரன் அவனைத் துரத்தி விட்டான்.
அந்த இரவு எச்சில் பாத்திரங்களைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது பேய். அவனுக்கு கோபம் தாளவில்லை. “சொல் நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என அவன் கத்தினான். மின்சார அடுப்பங்கரைப் பக்கமாக பேய் சிரிக்கும் சப்தம் கேட்டது. “உனது அக்கா குந்தவையின் சிசுவைக் கொலை செய்தது பாவம் இல்லாமல் என்னவாம்” என்று பேய் முனுமுனுத்தபோது அவன் உண்மையிலேயே தடுமாறிப் போனான். அவனது முகம் வெளிறிப்போனது. உடல் நடுங்கியது. “குந்தவை அக்காவின் பிள்ளையை நானா கொன்றேன்” என்று தன்னைத் தானே விசாரித்து துக்கித்தான்.
அவனுக்கு மூன்று சகோதர சகோதரிகள் . அக்காவின் பெயர் குந்தவை. தங்கையின் பெயர் செல்வி. தம்பி சுரேஸ். போர்க்களத்தில் மரணமடைந்து விட்ட அவனது இயக்கப் பெயர் மேஜர் பகத்சிங். குமரனின் அக்கா பிறந்த தசாப்தத்தில் பிறந்த பலருக்கு குந்தவை என்ற பெயர் வாய்த்திருந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை வாசித்துவிட்டு யாழ்ப்பானத்து தமிழர்கள் சிலர் சோழ அரசர்களாகவும் இளவரசிகளாகவும் தங்களை வரித்துக் கொண்டு பகல் கனவுகளில் புலிக் கொடியுடன் பவனி வந்த நாட்கள் அது. புலிக் கொடி தாங்கியபடி குதிரைகளிலும் கப்பல்களிலும் திரிந்த அவர்கள் தமது கனவுலகச் சுப்பர்மான்களான சோழ அரசர்களது பெயர்களை தமது பிள்ளைகளுக்கும் சூட்டினர். அவனது அக்காவும் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் வெளிவந்த காலத்தில் பிறந்தவள்தான். அவளுக்கு சோள இளவரசி குந்தவைப் பிரட்டியின் பெயர் இப்படித்தான் வாய்த்தது.
4
பெயரின் பின்னனி எதுவாக இருந்த போதும் குந்தவை சராசரி யாழ்ப்பானத்துப் பெண்தான். சின்னவயதில் இருந்தே படிப்பில் அவளுக்கு ஈடுபாடிருக்கவில்லை. வீட்டுப் பணிகளை ஒரு ஈடுபாட்டோடு செய்கிறது, ஊர் ஊராக ஆள் அனுப்பி நல்ல பூக்கன்று நாற்றுகளைச் சேகரித்து வீட்டு வளவையும் முற்றத்தையும் பூஞ்சோலையாக்குவது; இலங்கை வானொலி `பூவும் பொட்டும் – மங்கையர் மஞ்சரி` நிகழ்ச்சிக்கு கடிதங்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பி வானொலியில் அவை வாசிக்கப் படுகிறபோது உச்சி குளிர்ந்து போவது, இப்படி அவளது உலகம் யாழ்ப்பானத்து சராசரி இளம் பெண்களின் உலகம்தான். இலங்கை வானொலியில் வாசிக்கப் பட்ட குந்தவையின் மிக சாதாரண கவிதை ஒன்றைப் பெண் பெயரில் “ஓகோ ஒகோ” எனப் புகழ்ந்து பாராட்டிக் கடிதமெழுதி குந்தவையின் சினேகிதனாகியவன்தான் ராசன். இதனை மோப்பம் பிடித்தது, ராசனின் ஊர், பெயர், சாதிசனங்களைப் பற்றிய தகவல்களை விசாரித்து அறிந்தது பின்னர் குந்தவையை விசாரித்து எச்சரித்தது இவையெல்லாம் யாருக்குமே தெரியாமல் நான்கு சுவர்களுக்குள் கனகம்மாவே நடத்தி முடித்திருந்த நாடகம். முதலில் காதல் ஒன்றும் இல்லை, வானொலிக் கவிதைகள் தொடர்பாகப் பாராட்டி ராசன் கடிதம் எழுதியது மட்டும்தான் நடந்தது என்று வாதிட்ட குந்தவைக்கு கனகம்மா தான் கைப்பற்றி வைத்திருந்த கடிதங்களைக் காட்டினாள். பின்னர் அவளிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு கதையை தங்கள் இருவருக்குள்ளும் அமுக்கி விட்டாள் கனகம்மா .
இது நடந்து நான்கைந்து வருடங்களுக்குப்பின் மீண்டும் ராசனும் குந்தவையும் தொடர்புகளை பராமரிக்கும் விடயம் கனகம்மாவுக்குத் தெரிய வந்தது. அப்பாவுக்குக்கூட இதனைச் சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனையோடு கனகம்மா அப்போது பல்கலைக்களக மாணவனாக இருந்த குமரனிடம் குந்தவையின் காதல் விபரம் சொன்னாள். குமரனே அப்பாவாக அவதாரம் எடுத்து, குந்தவையை அக்கா என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து அட்டகாசம் செய்துவிட்டான். “எங்கள் அந்தஸ்தென்ன கேவலம் ஒரு சிறு சாப்பாட்டுக் கடை நடத்திற நாயை கல்யாணம் கட்டப் போறியா” என்று குமரன் கத்தினான். “தம்பி நீ பேசிற கொம்யுனிசம் இதுதானா” என்று கிளர்ந்த குந்தவை, பின் பணிந்துபோய் இனி ராசனிடம் தொடர்பு கொள்வதில்லை என்று மீண்டும் சத்தியம் செய்து கொடுத்தாள். இந்தத் தடவை கனகம்மா அவளை நம்பவில்லை. பின்னர் குந்தவைக்கு திருமணப் பேச்சுகள் ஆரம்பித்தபோதும் செவ்வாய் சாதகத்தில் எழாவது வீட்டில் குந்தியிருந்து திருமன முயற்ச்சிகளைத் தோற்கடித்துக் கொண்டிருந்தது.
இதுதான் அவர்களது வாழ்வைத் தலை கீழாக மாற்றிப் போட்ட சம்பவங்கள் பல வேகமாக இடம் பெற்ற காலக் கட்டம். “நாட்டுக்காக வீட்டை விட்டுப் போகிறேன். என்னைத் தேடவேண்டாம்” என துண்டெழுதி சோற்றுப் பானைக்குள் வைத்துவிட்டு சுரேஸ் காணாமல் போனது இந்தச் சம்பவக் கோவையின் தொடக்கம். அதன் பின் தங்கை செல்வி பூப்படைந்தது, நாகலிங்கம் பணியில் இருந்து ஓய்வூதியம் பெற்று வீட்டில் சாய்மனை நாற்காலி வாசியானது, போராளியாக இயக்கத்துக்குப் போன சுரேஸ்கா அகால மரணமடைந்து மாவீரனாகியது, குமரன் நோர்வேக்கு அகதியாக வந்து சேர்ந்து வீட்டாரின் சுமைதாங்கியானது எல்லாம் அடுத்தடுத்து இடம்பெற்ற சம்பவங்கள்.
5
குமரன் அகதியாக நோர்வே வந்து சிதைய யாழ்ப்பாணத்தில் அவனது குடும்பம் சமூக பொருளாதார ரீதியாகப் பலப்படத் தொடங்கியது. புதுப் பவிசு வந்ததில் நாகலிங்கம் தன்னையும் பணக்காரர் வரிசையில் தூக்கி இருத்திக் கொண்டார். கடந்த சில வருடங்களாகக் குந்தவைக்கு பள்ளி ஆசிரியர் மட்டத்தில்கூட ஒரு மாப்பிளை தேட முடியாமல் கஸ்டப் பட்ட நாகலிங்கம் திடாரென்று டாக்டர், எஞ்சினியர், பல்கலைக்களக விரிவுரையாளர் எனன்ற மட்டத்தில் மாப்பிளை தேட ஆரம்பித்தார். குந்தவைக்கு கொழும்பு பல்களைக்களக விரிவுரையாளரான பேரின்பத்தை திருமணம் பேசப் பட்டது. மாப்பிளை வீட்டார் மூன்று லட்சம் சீதணம் கேட்பதாக முதலில் கடிதம் வந்தது. குமரனும் சரி பணம் அனுப்புகிறேன் என்று வழி மொழிந்து பதில் எழுதினான்.
இதற்குள் பேரின்பத்தின் தாயார் மகனுக்கு பல பணக்கார வீடுகளில் இருந்து திருமணம் பேசி வருகிறார்கள் என்று கூறி தங்கள் பெருமை பேசத்தொடங்கினாள். குந்தவையின் சாதகமும் பேரின்பத்தின் சாதகமும் நன்கு பொருந்தி இருப்பதால்தான் தாங்கள் இந்த திருமணத்துக்கு சம்மதித்தாகவும் இந்த திருமணத்தால் தங்களுக்கு நட்டம்தான் என்றும் அவள் திரும்ப திரும்ப கூறியபோது நாகலிங்கம் கொதித்துப் போய்விட்டார். “நாங்கள் மட்டுமென்ன சின்னப் பணக்காரர்களா ? எனது மகன் குமரன் நோர்வேயில் கோடாஸ்வரனாக இருக்கிறான். படதாரி, பெரிய அறிஞன். நோர்வே அரசாங்கமே அவனை இலங்கைக்குத் திரும்பி செல்ல விடாமல் வேலை, வீடு எல்லாம் கொடுத்து தங்கள் நாட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலகாலத்தில் அவனுக்குக் குடியுரிமைகூடக் கொடுத்து விடுவார்கள். நாங்களும் பணக்காரர்தான். எங்களாலும் ஐந்து லட்சம் சீதனமாகக் கொடுக்க முடியும்” என்று ஆத்திரப் பட்டு பொரிந்து நாகலிங்கம் வாக்குறுதியும் வேறு கொடுத்து விட்டார். வீட்டில் கனகம்மா, செல்வி, குந்தவை எல்லோரும் இதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டார்கள்.
இதை அறிந்ததும் குமரனுக்கு ஐந்தாறு நாட்களாக கை கால் ஓடவில்லை. ஒருநாள் முழுவதும் அறையைப் பூட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதான். தனது தந்தையாராகிய நாகலிங்கத்தை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்து நீண்ட கடிதமொன்றும் எழுதினான். சம்பிராய பூர்வமாக “உங்கள் அன்பு மகன் குமரன்” என்று வீட்டுக்கு எழுதும் கடிதங்களை கையொப்பமிட்டு முடிப்பது அவனது வளக்கம். ஆனால் அந்தக் கடிதத்தில் அவன் வெறுமனவே “குமரன்” என்று மட்டுமே கையொப்பமிட்டிருந்தான். நாகலிங்கம் அதைப் பற்றி ஒன்றுமே அலட்டிக் கொள்ளவில்லை. உனது பெருமையை நிலை நாட்டத்தான் அப்படிச் சொன்னேன். அந்த லெக்சரர் மாப்பிள்ளை ஐந்து என்ன, பத்து லட்சமே பெறுவான். நீயும் கொஞ்ச நாளைக்கு ஜெர்மனியில் இருக்கின்ற பக்கத்து வீட்டுப் பையன் நாதனைப்போல இரண்டு வேலை மூன்றுவேலையென ஓடி ஆடிச் செய்யலாம்தானே. கவலையை விட்டுவிட்டு ஆகிறதைப் பார். சீதணப் பணத்தைக் கூடிய விரைவில் அனுப்பிவை.” என்று நான்கு வரியில் கடிதம் எழுதி யிருந்தார்.
ஒருவாறு பாரமிழுக்கிற மிருகம்போலாகி உறக்கத்தையும் ஓய்வையும் மறந்து இரண்டு மூன்று உணவு விடுதிகளில் ஓடி ஓடிக் களுவி ஐந்து லட்சம் அனுப்பியபோது, கனகம்மா குந்தவையும் கையுமாக கொழும்புக்கு வந்து தொலைபேசியில் விக்கி விக்கி அழுதாள். குந்தவை கர்ப்பமாய் இருக்கிறாள், அந்தப் படுபாவி ராசன்தான் அவளை ஏமாற்றிக் கெடுத்துப்போட்டான் என்று அழுத அம்மாவைச் சமாதானம் செய்த குமரன், ரகசியமாக கருச்சிதைவு செய்துவிட்டு ஏற்கனவே பேசி ஒழுங்காய் இருக்கிற மாதிரி பேரின்பத்துக்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று தொலை பேசி மூலமே தீர்ப்பு வளங்கினான்.
“நீ மட்டும் கமலியைக் காதலிக்கலாம் நான் ராசனை விரும்பினால் மட்டும் பிழையா” என்று வாதாட முற்ப்பட்ட குந்தவையை “பொத்தடி வாய் வேசை” என்று நெத்தி அடியில் வாயை அடைத்தவன் கருச்சிதைவுக்குமுன் இனி அவளோடு எதுவும் பேசமுடியாது என்றும் மறுத்து விட்டான்.
“செப்புச் சல்லியும் சீதனமாகத் தனக்கு வேண்டாம் என்று ராசன் கடிதம் எழுதியிருக்கிறான் மகனே. குந்தவையை ராசனுக்கும் செல்வியை பேரின்பத்துக்கும் கலியாணம் செய்து வைப்போமா” என்று தயங்கி தயங்கி கோரிக்கை விடுத்த தாய் மீதும் வெறுப்பைக் கக்கினான். நாகலிங்கமும் குமரனும் , ராசனை நிராகரித்ததற்க்கு ஒரு சிறு உணவு விடுதியின் சொந்தக் காரனான ராசனது தாழ்ந்த சமூக அந்தஸ்துதான் காரணம். மற்றப்படி ராசனும் அவர்களும் ஒரே சாதிதான்.
குந்தவையின் திருமணம் நடந்து அதற்குள் இரண்டு வருட மாகிவிட்டது. அவள் இப்போது தனது கணவன் பேரின்பத்துடன் லண்டனுக்கு வரவிருக்கிறாள். “அத்தானுக்கு மேற்படிப்புக்காக புலமைப் பரிசில் கிடைத்திருக்கிறது. வருகிற யூன் மாதமளவில் லண்டன் செல்கிறோம். நான் தாயாக இருக்கிறேன். கட்டாயம் நீ என்னை வந்து பார்க்க வேண்டும்.” எனக் குந்தவை மகிழ்ச்சியோடு கடிதம் எழுதியிருந்தாள். லண்டனில்தான் குழந்தை பிறக்குமாம்.
6
இரவும் பேய் 'சிசுக் கொலை காரன். ' என்று குற்றம் சாட்டியதில் குமரனுக்கு நித்திரை கொள்ள முடியவில்லை. குந்தவையின் கருச் சிதைவுக்கு ஒருவகையில் தான்தான் காரணமென அவனது மனது அடித்துக்கொண்டது. கருச் சிதைவைச் 'சிசுக்கொலை ' என்று பேய் சொல்கிறது. பேயின் கூற்றில் அவனுக்குச் சம்மதமில்லை.
காலையில் எழுந்தவன் நேரே அடுப்பங்கரைக்குப் போய்ப் பார்த்தான். பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக்கவில்லை. எனினும் மின் அடுப்பிலும் கழுவும் தொட்டியிலும் எச்சில் கோபைகளையும் உணவு அடிப்பிடித்த பாத்திரங்களையும் பேய் குவித்து வைத்திருந்தது. பேயின் தொல்லையால் அவன் இளைத்துப் போனான். தூக்கமின்மையால் நிரந்தரமாகவே கண்கள் சிவந்து போனது.
தலைவலியும் குடிகொண்டது. தலைவலி தாங்க முடியாத ஒரு பொழுதில் சென்ற மாதமே அவன் வைத்தியர் ஒருவரைப் போய் பார்த்திருந்தான். துக்கமும் தூக்கமின்மையும் காராரணமாக குமரனது மனநிலை பாதிப்படைந் திருப்பதாக அந்த வைத்தியர் கூறினார்.
வைத்தியருக்கு விசயம் தெரிந்திருக்க நியாய மில்லை. தன்னுடைய வீட்டில் பேய்த் தொல்லை இருப்பதையும் தூக்க மின்மைக்கு அதுதான் காரணமென்பதையும் குமரன் அந்த டாக்டருக்கு எடுத்துச் சொல்ல முயன்றான். அவனது நோர்வீஜிய மொழி அறிவு அதற்கு ஒத்துழைக்க வில்லை. மூன்றாம் பேர்வளிக்கு இந்த விடயம் தெரிய வேண்டாம் என்பதால் மொழி பெய்ர்ப்பாளர் ஏற்பாட்டுக்கும் குமரன் ஒருப்படவில்லை.
அவனது கதைகள் எல்லாவற்றையும் கேட்ட அந்த வைத்தியர் 'இரண்டு வருடங்களாக இந்தியாவுக்குச் சென்று அம்மாவைப் பார்க்கவும் கமலியை திருமணம் செய்யவும் ஏன் உன்னால் முடியாமல் இருக்கிறது ? ' என்று ஆச்சரியத்தோடு வினவினார்.
'எனக்கு முதலில் இந்தியா விசா கிடைத்தது. அப்போ எனது தங்கை செல்விக்கு சீதணம் உழைத்து அனுப்ப வேண்டி இருந்ததால் இந்தியாவுக்குப் போக முடியவில்லை. இப்போ இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா விசா தருவதில்லை ' என்று தனக்குத் தெரிந்த நோர்வீஜிய மொழியில் சிரமத்துடன் எடுத்துச் சொன்ன அவன் மனமுடைந்து அழுதான். 'இலங்கைத் தமிழர் என்பதால் இந்திய விசா கிடைக்கவில்லையா ' என்று அந்த வைத்தியர் ஆச்சரியப் பட்டார். கமலியையும் அம்மாவையும் இங்கே அழைத்துப் பார்க்கலாம் என்றால் நோர்வீஜிய விசாவும் கிடைக்கவில்லை என்றான் குமரன். டாக்கடர் இரண்டு சீட்டுகள் எழுதித் தந்தார். ஒன்று மருந்துக் கடைக்கு. மற்றது இந்தியத் தூதுவருக்கு. குமரனின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அவனுக்கு இந்திய விசா வளங்கி உதவிட வேண்டும் எனக் கோரும் இந்தியத் தூதுவருக்கான சிறு கடிதம் அது.
டாக்டர் நல்லவர் போலத்தான் தோன்றினார். அவருடைய மாத்திரைகளுக்குப் பேயை விரட்டுகிற சக்தி இருக்கிறதாகவே பட்டது. முந்தி மந்திரித்த வபூதிக்கும் நூலுக்கும் பழக்கப் பட்டது போல, இந்த மருந்துக்கும் பேய் பழக்கப் பட்டுவிடுமோ என குமரன் அஞ்சினான். வைத்தியரின் கடிதத்தைப் பார்த்து விட்டு இந்தியா விசா தந்து விடுவார்கள் என்றும் நம்பத் தலைப்பட்டதில் அவன் மீண்டும் உயிர்க்கத் தொடங்கியிருந்தான். வைத்தியரைச் சந்தித்த இரவு முழுக்க அவன் மூசி மூசித் தூங்கினான். நெடு நாளைக்குப் பிறகு கனவு கண்டான். காலையில் எழுந்த போது ஒரு கனவு மட்டும் நினைவில் சிதைந்திருந்தது.
அந்தக் கனவு முழுவதும் சூரியன் கனன்று கொண்டிருந்தது. உலகத்தைப் பிடித்திருந்த வெண்பனி எல்லாம் உருகி ஆறாக ஓடிக் கழிந்தது. உலகம் பச்சையாக உயிர்த்துத் துடித்தது. குமரனும் ஒரு மரமாக வேர் ஊன்றினான். கைகள் கிழைகளாக விரிய, விரல்கள் மிலாறுகளாக சிலும்பின. கிழைகள் எங்கும் பசும் தளிர்களும் பூக்களும் பிஞ்சுகளும் நிறைந்து இலைகளும் தளிர்களுமாயின. அந்த மரத்தைப் பற்றிப் படர்ந்த பூங்கொடி வேறு யாருமில்லை, கமலினிதான். அந்த மரத்தின் நிழலில் வந்து தங்கிய கிழப் பசுவுக்குக் கனகம்மாவின் சாயல். இந்தப் பசுவும் நானும் சினேகிதம். இந்தப் பசு ஒருபோதும் என்னைத் தின்று போடாது என்று குதூகலமாகச் சொன்னது பூங்கொடி. பூங்கொடியைத் தழுவிய மரம் பசுவுக்கு கனிகள் தந்தது.
கடாயமாக இரண்டு வேலை செய்து பணம் சேற்க வேண்டி இருந்ததில், நெடுநேரம் தூங்க வைக்கிற மாத்திரைகளைக் கைவிட நேர்ந்தது. வைத்தியர்கூட பிசாசின் ஆள்தானோ என்று குமரனுக்குச் சந்தேகமும் வந்தது.
காலையில் வேலைக்கு வருகிறபோதும் பேயின் சேட்டை இருந்தது. இரண்டொரு தடவை ஓடிக் கடந்து செல்கிற மோட்டார் வண்டிக்குள் பாய்ந்து, அந்தப் பேயை வண்டிச் சக்கரங்களுள் நசித்துப் போடவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. வருகிற வழியில் நெடு நேரம் ஆற்றுப் பாலத்தில் நின்றான். ஆற்றில் பாய்ந்தால் பேயை ஆற்றில் மூழ்கடித்து விட்டு தான் மட்டுமே தப்பித்து கரை சேர முடியுமா என்பது பற்றி அவனால் ஒரு இறுதி முடிவு எடுக்க முடியவில்லை.
உணவு விடுதி மூடுவதற்கு இன்னமும் நேரமிருந்தது. வெளியே அந்த நள்ளிரவு பட்டப் பகலாகத் தோற்றம் தந்ததை அவன் சன்னல் வழியாகப் பார்த்தான். வீதிக்கும் கட்டிடங்களுக்கும் பின்னே தேவதாரு மரங்கள் துருத்திக் கொண்டிருந்த மலைக் காட்டின் மேலே அவனது கனவில் சுடர் விட்ட, அதே சூரியன் இருந்தது. உணவு விடுதிச் சமையல் அறைக்குள், வேலையும் மேலதிக நேர வேலையுமாக இரண்டு வருடங்களாகத் தேய்ந்து கிடக்கிற குமரனுக்குக் கனவில் வந்த சூரியனை மீண்டும் பார்ப்பது ஆறுதலாக இருந்தது. ஆப்பிள் மரம்போல துளிர்ப்பதும், கொடி படரவும் பசு துயிலவும் இடம் தந்து வாழ்கிறதும் சாத்தியமே என, கண் சிமிட்டும் அந்தச் சூரியன் அவனுக்கு எடுத்துச் சொன்னது. எனினும் சன்னலில் நின்று ஆறுதல் அடைகிறது சாத்தியமில்லை. குவிகிற எச்சில் தட்டுகளும் கழுவி ஓய்கிற மெசினும் அவனை வா வா என்று அதட்டிக் கொண்டிருந்தது.
நார்வே நாட்டுக்கு வருகிற வரைக்கும் குமரன் எச்சில் தட்டுகள் அற்ற ஒரு உலகத்தில் வாழ்ந்தவன். படிக்கிற போதும் சரி, பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றிய போதும் சரி அவனது உலகத்தில் எச்சில் தட்டுகளும் அழுக்குச் சமையல் பாத்திரங்களும் இருக்கவில்லை. எப்போதாவது அதிகாலைப் பொழுதில் மூத்திரம் பெய்ய எழுந்து வெளியில் வந்தால் புழைக்கடையில் வாழை மரக் கூட்டத்தின் அடியில் லாம்பு வெளிச்சம் தெரியும். கொட்டும் பனியில் எச்சில் தட்டுக்களையும் சமையல் பாத்திரங்களையும் குவித்து வைத்துப் பற்றுத் தேய்த்தபடி கனகம்மாவும் குந்தவையும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இப்படித்தான் ஒரு நாள் கனகம்மா பாத்திரம் தேய்த்தபடி சிருஸ்டியின் ரகசியங்கள் பற்றி குந்தவைக்கு வகுப்பு நடத்திக் கொண்டிருந்தாள். மூத்திரம் பெய்ய எழும்பி வெளியே வந்தவனைப் பார்த்ததும் இருவருக்கும் நாணமாகிப் போய்விட்டது. 'நித்திரை வரவில்லையா ராசா ' என்று கேட்டுச் சமாளித்தாள் கனகம்மா.
மெசினில் இருந்து களுவிய பாத்திரங்களை வெளியியே எடுத்து வைத்த குமரன், புதிதாக அழுக்குப் பாத்திரங்களை அதன் வாயில் திணித்து ஓட விட்டுவிட்டு, மீண்டும் சன்னல் அருகே வந்தான். இப்போதும் கனவுச் சூரியன் மலைமேல் சிரித்துக் கொண்டிருந்தது. சூரியனுக்குக் கீழே மலையில் புதிதாக ஒரு இந்துக் கோவில் இருந்தது. 'ஐயோ எனக்குத் தீர்ப்புநாள் வந்து விட்டது ' என்று குமரன் பரபரப்படைந்தான்.
வீட்டில் இருந்து உணவு விடுதிக்கு வரும் வளியில் ஒரு கிறிஸ்தவத் தேவாலயம் உள்ளது. ஒரு சமயம் அந்தத் தேவாலயத்துக்குப் போன அவன் கடவுளுடன் கூடப் பேசியிருக்கிறான். 'என்னை விசாரித்து தண்டனை வளங்கிடு ' என்று முழங்காலில் இருந்து வேண்டுதல் செய்திருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் 'என்னைச் சிலுவையில் இருந்து இறக்கிவிடு ' என்று கடவுள் அவனைக் கேட்டுக் கொள்வார். ஒருமுறை கடவுளுக்கு உதவப் போனவனை கோவிலின் காவல்காரன் பிடித்துக் கொண்டான். கடவுளைச் சிலுவையில் இருந்து இறக்கினால் சேச்சின் வருமானம் போய்விடுமென்று காவல்காரன் கவலைப் பட்டிருக்க வேண்டும். காவல் காரனின் பிடியில் இருந்தபோதே 'கடவுளே எனது பேயைத் துரத்திவிடு ' என்று அவன் கத்தினான். 'நீ என்னைக் காப்பாற்று, உன்னை நான் காப்பாற்றுகிறேன், ' என்பதுதான் குமரனின் நிலைபாடு. 'குந்தவையின் சிதைந்த கருவும், நாகலிங்கத்தின் பேராசையும்தான் உன்னைப் பிடித்த பேய்கள் ' என்று கடவுள் சொல்லி முடிக்க முன்னமே கோவில் காவல்காரன் குமரனை முற்றத்துக்கு இழுத்து வந்து விட்டான்.
மலையில் தெரிந்தது இந்துக் கோவில். இந்துக் கடவுளர்களுக்கு தன்னைப் பிடித்த பேய்களை துரத்துகிற கெட்டித்தனம் இருக்குமென குமரனுக்குத் தோன்றியது. மீண்டும் திரும்பிப் போய் பாத்திரம் கழுவும் மெசினுக்கு வழமையான பணிவிடைகள் செய்து விட்டு சன்னலண்டை வந்தபோது சூரியனும் இந்துக் கோவிலும் மறைந்து விட்டிருந்தன. உணவு விடுதியில் ஆட்களும் சந்தடியும் குறைந்து காணப்பட்டது.
7
பல்கலைக்கழகத் தேர்வு எழுதி முடித்த வசந்த கால நாட்கள் குமரனுக்கு ஞாபகம் வந்தது. அது அவனைச் சுற்றித் தேவ தூதர்களும் தேவதைகளும் இறகு கட்டிப் பறந்து திரிந்த காலம். பரீட்சை முடிவுகள் எப்படி அமையுமோ என்கிற விசாரம் இருந்தது. கமலியைப் பிரிந்து வெளிநாடு செல்வது இனியும் தவிர்க்க இயலாது என்கிறதை அவன் உணர்ந்தான். பிரிவின் தவிர்க்க இயலாமையை கமலியும் உணர்ந்தாள். அவளது நெஞ்சு துணுக்குற்று நார் நாராக உடைந்தது. எதற்கும் துணிந்தவளாக கமலி ஒத்துழைக்கத் தொடங்கியதில் இருவருமே கவலை மேகங்களுக்கு மெலே சுடர்ந்த இன்பத்துள் சிறகு கட்டிப் பறந்தார்கள். காலம் தனது திசையில் மட்டுமே நகர்ந்து செல்கிறது.
குமரனது பல்கலைக் கழக சகா ஒருவன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டான். இது நடந்து ஒரு வாரம் ஆவதற்குள்ளேயே அவனது தெருவைச் சேர்ந்த, ஒரு வருடத்துக்குமுன் சோற்றுப் பானைக்குள் கடிதம் வைத்துவிட்டுக் காணாமல் போயிருந்த ஒரு இளைஞன் மின் கம்பத்தில் செத்துக் கிடந்தான். அவன் சார்ந்திருந்த போராளி இயக்கத்துள் உட் கட்ச்சிப் பிரச்சினை என்று கதைக்கப் பட்டது. இச் சம்பவங்களால் இளைஞர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சம் அடைந்தார்கள்.குமரனது பாதுகாப்புக்கு வெளிநாட்டுப் பயணம் மட்டுமே உத்தரவாதமென கனகம்மா ஒரேஅடியாக அழுது கொட்டினாள். நாகலிங்கமோ அவனது பாதுகாப்பு, குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பு என்கிற இரண்டு மாங்காய்களையும் ஒரே கல்லில் வீழ்த்துவதில் குறியாகி அலைந்தார். இது அவன் கனடாவிலோ அல்லது மேற்க்கு ஐரோப்பிய நாடு ஒன்றிலோ அகதியானால் மட்டுமே சாத்தியம்.
குமரனது மனப் பதட்டங்களுக்கு பல காரணங்கள் இருந்தன. பரீட்ச்சைப் பெறுபேறுகள் எப்படி அமையுமோ, வெளிநாட்டுக்கு ஆட்களை அகதிகளாக அனுப்புகிற பயண முகவர்கள் காசை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுவார்களோ என்பது போன்ற வளமையான ஏக்கங்களைவிட வெளிநாட்டுப் பயணத்துக்குமுன் ஒருதடவையாவது கமலியுடன் நிறை கலவிச் சுகம் தேடிய மனசின் துக்கம் பெரிதாக இருந்தது. யாரவது நண்பர்கள் வீட்டில், ஒரிரவேனும் தங்கிவிடுகிற கோரிக்கை, கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல் கமலியிடம் எடுபடவில்லை என்பதைக் குமரன் கண்ணீரோடு உணர்ந்தபோது அதிஸ்டம் வீடு தேடி வந்தது.
கனடா போகவிருந்த அவனது பல்கலைக் கழக சகா சிவலிங்கம் திடாரென ஒருநாள் அவனைத் தேடி வந்தான். 'மச்சான் என்னை வழி அனுப்ப வீட்டில் எல்லோரும் கொழும்புக்கு வருகினம். நீதான் எங்க வீட்டையும் நாயையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ' இது சிவலிங்கத்தின் விண்ணப்பமாக இருந்தது. குமரன் அந்த அமவாசை இருட்டில் சிவலிங்கத்தின் வீட்டுக்கு கமலியை அழைத்துச் சென்றான். அவள் பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியில் தங்கியிருந்ததால் எல்லாம் இலகுவாயிற்று. கமலிக்கு தெரு நீழ வியர்த்துக் கொட்டியது. நெஞ்சத் திகிலும்
உடலின் இன்ப வேதனையும் அவளைச் சுட்டெரித்தது. தலைக்குமேல் கனவுப் பிரக்ஞையுள் மஞ்சள் மஞ்சளாக சணல் பூக்கள் அசைந்தன.
தெரு நாய்கள் குரைத்த போதெல்லாம் குமரன் கமலியின் கவசமாக நடந்தான். ஒரு சினிமாத் தனமான வெற்றிப் பெருமிதத்தில் அவன் திழைத்துப்போய் இருந்தான். கமலிக்குப் பெருமிதம் ஏதுமில்லை. இன்பக் கனவுகளிலும்கூட தன்னை இழந்து போகிற உணர்வும் கருப் பயமும் அவளை நிலத்தில் நடக்க வைத்தன. தவிர்க்க இயலாது வரவிருந்த பிரிவினாலும் அவள் உருகிப்போய் கண்ணீர் வடித்தாள்.
கமலி அழாதே, பயப்படாதே , தயவு செய்து என்னை நம்பு , நான் கட்டாயம் உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணையும் தொடமாட்டேன் என அவன் வழி நீழ வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு வந்தான்.
சிவலிங்கத்தின் வீட்டுக்குள் நுழைந்தபோது, கமலியின் கண்கள் பார்க்குமிடமெல்லாம் மஞ்சள் சணல் பூக்களாக நிறைந்து அசைந்தன. கமலியின் நினைப்பில், குமரன் சுகனைபோலவும் தோன்றியது சுகம் செய்தது.
சுகன் ஒரு அழகிய பாடும் பறவையைப் போல கமலிக்குமேல் குந்திவிட்டுப் பறந்து போய்விட்ட ஒரு பயல். அவன் சின்ன வயதில் இருந்தே கமலிக்குத் தெரிந்த பயல்தான். பின்னர் காணாமல் போயிருந்தவன் கொழும்பில் படிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு மீண்டும் ஊருக்கு வந்திருந்தான். நல்ல பிள்ளை மாதிரி ஒருமுறை கமலியின் வீட்டுக்கு வந்து தேனீரும் அருந்திவிட்டுப் போனான். அன்று கமலியின் அம்மா கமலியையும் சுகனையும் பேசவிடவில்லை. தானே முன்னுக்கு நின்று சுகனை உபசரித்து திருப்பி அனுப்பி வைத்தாள். மறுநாள் மாலை கமலியின் அம்மா பால் மாடு சாய்க்க வெளியே போனபோது கமலி வீட்டின் பின்புறமாக நின்று காற்றில் சணற் பூக்கள் அசைந்தாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு திடுப்பென வந்த சுகன் கேட்டுக் கேள்வியில்லாமல் கமலியின் கைகளைப் பற்றினான். மிரண்டுபோன கமலி கைகளை உதறிவிட்டு திமிறிப் பாய முனைந்தாள். சுகன் கமலியின் கால்களைப் பிடித்துக் கொண்டு இரந்தான். அதன்பின் கண் இமைக்கிற நேரத்துக்குள் அவன் கமலியை பூத்து மஞ்சள்க் கடலாகக் கிடந்த சணல் தோட்டத்துக்குள் கிடத்தி விட்டான். கமலியின் கூடப் பிறந்த தற்க்காப்பு உணர்வும்
கரு அச்சமும்கூட கனவுகளுக் குள்ளும் இன்ப அந்தரங்களுக் குள்ளும் மூழ்கிப் போயின. இனம் புரியாத சுகங்களை நிரந்தரமாகவே அவளது மேனியில் சுகன் பச்சை குத்தி விட்ட போதெல்லாம் அவளுக்கு வானமாகவும் தரையாகவும் தெரிந்தவை சுற்றிவர அசைந்தாடிய சணல் பூக்கள்தான். பின்னர் சுகனின் குடும்பம் முழுவதுமே கொழும்புக்குப் போய்விட்டது. அதன்பின் கமலிக்கு தொடும் சுகம் கிட்டியது பல்கலைக்கழகத்தில் குமரனின் அரவணைப்பில்தான்.
மறுநாள் காலை விடிந்தபோதே குமரனது வசந்த காலங்கள் முடிந்து விட்டிருந்தன. விழித்தபோது காற்றில் செனாய் வாத்தியத்தின் இசையில் சகானா இராகம் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது.
'யாரோ இயக்கப் பெடியள் செத்துப் போயிற்றாங்கள் ' என்று சொல்லியபடி குமரன் எழுந்து ஒன்றுக்குப் போய்வந்தான். பாவங்கள் என்றபடி அவனை மீண்டும் ஆரத் தழுவிக்கொண்டு அவனது நெஞ்சுள் புதைந்தாள் கமலி.
சற்றைக் கெல்லாம் இரும்புப் படலை திறக்கப் படுகிற சத்தத்தைத் தொடர்ந்து நாய் குரைக்கத் தொடங்கியது. அது யாழ்ப்பாணத்து நாய்கள் போர் உடை அணிந்தவர்களைப் பார்த்து குரைக்கிற குரைப்பு. பதைத்துப்போய் எழுந்த குமரன் சாரத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தான்.
துப்பாக்கியோடு சில போராளி இளைஞர்கள் முற்றத்தில் நின்றார்கள். ஒருவன் துண்டுப் பிரசுரம் ஒன்றை குமரனிடம் தந்தான். வேறு சிலர் வீட்டுக்குப் பின்புறமிருந்து குலை போட்ட வாழை மரமொன்றை வெட்டித் தோழில் சுமந்து கொண்டு வந்தார்கள். வீதி சோடிக்கிறோம் என்றபடி அவர்கள் வாழை மரத்துடன் வெளியேறியபோது குமரனுக்குச் சற்று கோபம் வந்தது. பின்னர் அவன் கையிலிருந்த துண்டுப் பிரசுரத்தை விரித்தான். முதுகில் கண கணப்பாக முலைகள் தேய்பட கமலி பின்னுக்கு வந்து நின்றாள். ஐயோ என்று குமரன் அலறினான். கமலி அதிர்ந்து போனாள். பின்னர் அவளும் குரல் எடுத்து அழத் தொடங்கினாள். அஞ்சலி துண்டுப் பிரசுரத்தில் குமரனின் தம்பி சுரேஸ் இராணுவ உடையில் எழுந்து நின்றான். படத்தின் கீழ் மேஜர் பகத்சிங் (சுரேஸ்) திண்ணவேலி, மலர்வு : 5- 6- 1968 வீர மரணம் 6- 5-.1986 என்றிருந்தது.
இப்படித்தான் அவர்களது வசந்த காலங்கள் முடிவுக்கு வந்தன. குமரன் நோர்வே நாட்டுக்கு வந்து சேர்ந்து , வேரறுந்த அகதியாகி, அன்னியப் பட்டு, உறவுகளின் பேராசைப் புதை மணலுள் கால் வைத்து, உடலும் உள்ளமும் நைந்து, இப்படிப் பேய் பிடித்தவனாகச் சிதைந்துபோனான்.
8
உணவு விடுதி மூடப் பட்டதும் தெருவில் இறங்கிய குமரன் பஸ்தரிப்பை நோக்கி விரைந்தான். இரண்டு பக்கமும் கட்டிடங்களில் வண்ண வண்ணக் கீற்றுகளாக ஒளிக் குறிகள். தெருவெல்லாம் வசந்த காலத்தின் இரவை அனுபவிக்கிற இளைய தலை முறையின் கும்மாளம். இவற்றை யெல்லாம் அனுபவிக்கிற மனித ரசனையை ஏற்கனவே அவன் இளந்து விட்டிருந்தான். சகோதரிகளது சீதனம், பெற்றோரின் பேராசை, வயசு வந்தும் காதலும் காமமும் இன்மை என்பவற்றுள் நசிந்து சிதைகிற யாழ்ப்பாணத்து அகதி இளைஞர்கள் தருகிற முதற் பலி மனித ரசனைதானே.
பஸ் தரிப்பில் யாருமில்லை. வெளியே மெல்லிய இருளும் குளிரும் தலையெடுத் திருந்தன. நான்கு குமரிகளும் மூன்று இளைஞர்களும் பியர் போத்தல்களுடன் அவனைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி தன்னைப் போலவே கபில நிறமாக இருந்ததில் அவனுக்கு சிடு சிடுப்பு ஏற்பட்டது. வெறுப்புடன் வேசி என்றவன் அந்தப் பெண் தமிழிச்சியாக இருக்க மாட்டாள் என தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
வானம் மேலும் இருண்டது. ஏன் இன்னமும் பஸ் வண்டி வரவில்லை என்பது அவனுக்குப் புரியவில்லை. மீண்டும் அவன் தனது பாவப் பட்ட வாழ்வின் நினைவுக் குழிக்குள் இடறி விழுந்தான்.
குந்தவைக்குச் சீதணமாக ஐந்து லட்சம் ரூபா அனுப்பியதுமே, அவனுக்கு கமலியை திருமணம் செய்து கொடுக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார் நாகலிங்கம். பின்னர் அவர் உனக்கு நல்ல சீதணத்தில் திருமணம் பேசி வருகிறார்கள். சீதணத்தை வாங்கிச் செல்விக்குக் கொடுத்து விட்டு அவர்களில் ஒருத்தியை திருமணம் செய்துகொள் என வலியுறுத்தத் தொடங்கினார்.
நாகலிங்கத்தை முதல் முதலாக எடுத்தெறிந்து அவன் கடிதம் எழுதியதே கமலியின் விடயத்தில்தான். 'உங்களுக்குக் காதலைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இதற்கு மேலும் எங்கள் காதலுக்குக் குறுக்கே நின்றால் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வேன். ' என்று கோபமும் துணிச்சலும் மிகுந்திருந்த ஒரு தருணத்தில் கடித மெழுதி அஞ்சல் செய்தான். அதன்பின் நாகலிங்கம் வாய் மூடி மெளனமாக ஒதுங்கிக் கொண்டார். குந்தவையின் திருமணம் முடிந்த கையோடு கனகம்மா கமலியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.
எல்லாம் கனவுபோல இனித்தது. ஒரு கனவில் பசிய சோலைகளின் ஊடாக அவன் சிறகசைத்துப் பறந்தான். திடாரென விபத்தில் அகப்பட்டது வாழ்வு. செல்வியின் கடிதம் அவன் இதயத்தை ஊனப் படுத்தியது. சக மனிதர்கள் மீதான நம்பிக்கை அதிர்ந்தது. 'அண்ணா எனது பெயருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் போட்டு விட்டு நீ கமலியை திருமணம் செய்து கொள்ளலாம் ' எனச் செல்வி எழுதி யிருந்தாள். நாகலிங்கமும் தனது நெடுநாளைய மெளனத்தைக் கலைத்து செல்வியின் கடிதத்தின் கீழே 'அவள் மூர்க்கத்தோடு இருக்கிறாள். எனக்குப் பயமாக இருக்கிறது.
எதும் செய்து விடுவாள் ' எனக் கிறுக்கியிருந்தார். எதுவும் செய்வதென்பது தற்கொலை செய்தல், போராளியாக இயக்கத்துக்கு ஓடுதல், குடும்பத்துக்கு அவமானம் விளைவிக்கக் கூடிய மாதிரியான சாதி தாழ்ந்த காதல் திருமணம் செய்து கொள்ளுதல் என பல்வேறு அர்த்தங்களாக முடிச்சு அவிழ்ந்ததில் குமரன் பதறிப் போனான்.
செல்விக்கு ஏற்கனவே தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனோடு கடிதத் தொடர்பு இருந்தமை வீட்டில் கண்டு பிடிக்கப் பட்டதும் கட்டுக் காவல் அதிகரிக்கப் பட்டதும் குமரனுக்கு ஞாபகத்தில் வந்தது. அதன் பின் இயக்கத்துக்கு ஓடி விடவும் அவள் எத்தணித் திருக்கிறாள். தன்மீது அனுதாபம் இல்லாத ஒருவனாகவும் காதலைப் பற்றிய மனிதப் புரிந்துணர் வில்லாத ஒருவனாகவுமே அவள் குமரனைப் பார்த்தாள். 'வாழ்தல் என்பது வாழ்வைப் பணயம் வைத்து அந்தஸ்துக்காக ஆடும் சூதல்ல, அண்ணாவோடு நீ வாழ்வை அனுபவிக்க முடியும் என்று வீன் கனவு காணாதே ' என்று கமலிக்குக் கூட செல்வி புத்திமதி கூறி எழுதியிருக்கிறாள்.
செல்வியின் கடிதம் குமரனை மட்டுமல்ல கமலியையும் கனகம்மாவையும் கூட கிழித்துப் போட்டது. இது செல்வியின் வேலையல்ல , அந்த சுயநலம் பிடித்த கிழவனின் சதியென நாகலிங்கத்தைத் திட்டி கனகம்மா கடிதம் எழுதியிருந்தாள். 'கமலியை உனது கையில் பிடித்துத் தராமல் நான் நான் வீடு திரும்ப மாட்டேன். உனக்காக சென்னையில் கமலியுடன் காத்திருப்பேன். ' என எழுதி சிவப்பு மையில் அடிக் கோடு வேறு போட்டிருந்தாள். அடிக்கோடு கமலியின் வேலை என்பதைக் குமரனும் புரிந்து கொண்டான்.
கமலியைத் திருமணம் முடித்து, பின் இருவருமாக வேலை செய்து, ஒரு வருடத்துக்குள்ளேயே செல்வியின் சீதணம் ஐந்து லட்சம் ரூபாவும் அனுப்பி வைப்பதாக குமரன் எழுதிய கடிதத்துக்கு வீட்டில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.
தனது மனிதக் கனவுகளைப் புதைத்து விட்டு இரவும் பகலும் வேலை வேலை யென்று சிதைந்து போகிற அவலம் அவனது இருப்பில் இப்படித்தான் தொற்றிக் கொண்டது. 'எனக்கென்று இந்த உலகில் இருப்பதெல்லாம் அம்மாவும் கமலியும்தான் ' என அவன் தனது நாட் குறிப்பில் எழுதினான். 'மற்ற எல்லோரும் போன பிறவியில் எனக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள். இந்தப் பிறவியில் வெனிஸ் நகரத்து சைலொக் போல உறவுகளாகப் பிறந்து வந்திருக்கிறார்கள்.
சம்பந்தப் படுகிறவர்களால் சக மானிடர்களாக அடையாளப் படுத்தப் படுகிறதுதான் பாக்கியம். இதனாலேயே மனித இருப்பு வாழ்வாகச் செழித்து அர்த்தப் படுகிறது. நோர்வே வந்து சேர்ந்ததில் இருந்தே குமரன் இந்த வரப்பிரசாதத்தை இழந்து போனான். இதுதான் துர் அதிஸ்டம். குமரன் மட்டுமல்ல புற்றீசல்களாகப் பறந்துபோய், பணம் பண்ணக் கூடிய நாடுகளில் அகதிகளாக விழுந்து கிடக்கிற ஈழத் தமிழர் பலரது துர் அதிஸ்டமும் இதுதான். தன்னை, தனது மனித முகத்தை சிதை சிதை யென்று சிதைத்து ஐந்து லட்சம் ரூபா திரட்டி ஊருக்கு அனுப்பியபோது குமரனின் தலையில் புதிய இடியொன்று விழுந்தது.
அதிற்சி தருகிற சென்னைச் செய்திகளும் அதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகம் இலங்கைத் தமிழர்களுக்கு விசா வழங்குவதை திடாரென நிறுத்தி வைத்ததும் அவனது கனவுகளை நிர்மூலமாக்கியது.
'ஐயோ நான் என்ன பாவம் செய்தேன் ' என பஸ்தரிப்பில் நின்றபடி குமரன் வாய்திறந்து அழத்தொடங்கினான்.
9
பஸ்வண்டி ஓடத் தொடங்கியது. அந்த நள்ளிரவிலும் தெருக்களில் பெண்களின் கூட்டம் நிறைந்திருந்ததை அவன் பார்த்தான். ஒஸ்லோ நகரத்தின் அழகே அந்தப் பாதுகாப்புத்தான்.
நாளைக்கே மீண்டும் இந்தியத் தூதரகத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அவன் தீர்மானித்துக் கொண்டான்.
விசா கிடைத்தால் சிதம்பரம் கோவில் உண்டியலில் இந்தியப் பணம் பத்தாயிரம் போடுவதாகவும் கதிர்காமத்துக்கு ஆயிரம் ரூபா தபாலில் அனுப்புவதாகவும் பஸ்ஸில் இருந்துகொண்டே தாராளமாக நேர்த்தி வைத்தான். இத் தொகை இரண்டு மாதங்களுக்கு முன்னம் சிதம்பரத்துக்கு ஐயாயிரமும் கதிர்காமத்துக்கு ஐந்நூறும் என்றிருந்தது. பணம் தேடுகிற சக்க்தியைத் தவிர ஏனையவற்றை எல்லாம் ஏற்கனவே இழந்து போயிருந்தவனுக்கு முடிந்ததெல்லாம் அவ்வளவுதான்.
கமலியை நோர்வேக்கு கூப்பிட்டு விட்டால் தனது துயரங்கள் எல்லாம் தீர்ந்துவிடுமென அவன் மனப்பூர்வமாக நம்பினான்.வேலை முடிந்து வீடு திரும்புகிற போது கமலி வீட்டில் இருப்பாள். எச்சில் பாத்திரங்கள் எல்லாம் கழுவி அடுக்கி இருக்கும். உணவு விடுதிக்கு வருகிற நார்வீஜியரைப் போல சாப்பாட்டு மேசையில் போய் உட்கார வேண்டியதுதான். கமலி செல்லம் கொஞ்சிக் கொஞ்சி அவனுக்கு உணவு பரிமாறுவாள்.
'பெண்கள் குந்தியிருந்து அரட்டை அடிக்கிறது எனக்குப் பிடிக்காது ' என்று அவன் அரற்றியபோது பஸ்வண்டியின் முன் இருக்கையில் இருந்த இளைஞர்கள் அவனை திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். கமலி வந்த உடனேயே ஒரு நல்ல தொலைக் காட்சிப் பெட்டியும் வி.சி.ஆரும் வாங்க வேண்டும் என்று அவன் மீண்டும் உறுதி எடுத்துக் கொண்டான்.
எந்தத் திரைப்படமும் சென்னையில் வெளிவந்த கையோடேயே சாயம் போன திருட்டு வீடியோக்களாக ஐரோப்பாவில் நடமாடும். கமலி வந்தபின் அடிக்கடி புதிய திரைப்படங்கள் பார்க்கலாம். தினசரி செல்லம் கொஞ்சி, கலவி முடிந்த பின்னும் சினுங்கச் சினுங்க இரவு முழுவதும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கலாம் என்ற கனவுலகில் மூழ்கி இருந்தபோது கமலி முலைகள் நசிய முதுகில் சாய்ந்திருப்பது போன்ற பிரமை குமரனுக்கு ஏற்பட்டது. பிரக்ஞை மீண்டபோது குமரன் தனது திருமணம் தள்ளிப் போனதற்காக அப்பாவையும் தங்கையையும் வசை பாடினான்.
பஸ்ஸில் இருந்த இளைஞர்கள் அடிக்கடி குமரனை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
10
அது குமரன் வழக்கமாகப் பயணம் செய்கிற பஸ் வண்டியாகிப் போனதில் சாரதியே சரியான பஸ் தரிப்பில் பஸ்ஸை நிறுத்திவிட்டுக் குரல் கொடுத்தான். அவன் தனது கனவுகளில் இருந்து மீண்டு, பஸ்ஸினால் கீழே இறங்கச் சற்று நேரம் எடுத்தது. நள்ளிரவிலும் சூரியன் மறையாது நிற்கிற காலமது. எனினும் வானில் பரவி இருந்தது அதிகாலை வெளிச்சம்தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். இப்படி ஆறுதலாக நின்று வானத்தையும் பூமியையும் பார்த்து ஐந்து வருடங்களாகிவிட்டன. அது அவன் நோர்வே வந்து சேர்ந்த வருடம். மொழி படிப்பதற்காக முறைசாராத மக்கள் கலூரி ஒன்றில் மாணவனாகி இருந்தான். அதுதான் அவன் மனிதனாகி இருந்த இறுதி வருடம்.
அந்த வருடம்கூட 'குமரன், அங்கு உனக்குப் படிப்பதற்க்கு அறுபதாயிரம் குரோனர் கடன் தருவார்கள். பணத்தை எடுத்து வீண் செலவு கிலவு செய்து விடாதே. பணத்தையும் உன் வரவு செலவுக் கணக்கையும் உடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும். ' என நாகலிங்கம் கடிதம் எழுதியிருந்தார்.
கடனாகக் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை வீட்டுக்கு அனுப்பிய போதும் அந்த வருடதின் வசந்த்தையும் கோடையையும் அனுபவிக்க பண முடையும் கமலியின் பிரிவும் அவனுக்குத் தடையாக இருக்கவில்லை.
11
ஒற்றையடிப் பாதையில் இறங்கி வீட்டை நோக்கி நடந்த போது கும்ரன் பிசாசு தன்னைப் பின் தொடர்ந்து வருவதை உணர்ந்தான். திரும்பிப் பாராமலே தன்னைத் தொடர்வது ஒரு பெண் பிசாசு என்பதை அவன் ஊகித்துக் கொண்டான். காற்றில் மிதந்து வந்த நறுமணம் சிறு வயதில் கேள்விப்பட்ட மோகினிப் பிசாசுகளின் கதைகளை குமரனுக்கு நினைவு படுத்தியது.
எதிரில் பூத்திருந்த அப்பிள் தோட்டம் இன்னமும் இருண்டு கிடந்தது.
(முற்றும்)
Tuesday, August 21, 2007
ஈழத்து மண்ணும் எங்கள் முகங்க்களும்
1986ல் எழழுதப் பட்ட ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் 1987ல் சென்னையில் காந்தளகத்தால் வெளியிடப் பட்டது.
இக் குறுங் காவியம் 1987 - 2003 வரை சென்னைப் பல்கலைக் களகத்தில் எம் பில் தமிழ் இலக்கிய பாட நூலாக அமைந்தது.
எனது முதன்மைப் படைப்பான இந்த கவிதை நாவல் பற்றிய கருத்துக்களளை வரவேற்கிறேன்.
http://noolaham.net/library/books/03/278/278.pdf
இக் குறுங் காவியம் 1987 - 2003 வரை சென்னைப் பல்கலைக் களகத்தில் எம் பில் தமிழ் இலக்கிய பாட நூலாக அமைந்தது.
எனது முதன்மைப் படைப்பான இந்த கவிதை நாவல் பற்றிய கருத்துக்களளை வரவேற்கிறேன்.
http://noolaham.net/library/books/03/278/278.pdf
காட்டுப் பூவின் பாடல்
ஒரு கதை கேள் தோழி.
ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிற
ரோமியோக்களின் கதை கேள்.
காகிதப் பூக்களின் நகரத்தில்
காதலில் கசிந்து
தேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி.
என் இனிய பட்டாம் பூச்சியே
சுவர்க் காடுகளுள் தேடாதே.
நான் வனத்தின் சிரிப்பு
வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும்
வானவில் குஞ்செனப் பாடியது
பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ.
ராணித் தேனீக்களே எட்டாத
கோபுரப் பாறைகளில் இருந்து
கம கமவென இறங்கியது
அதன் நூலேணி.
வாசனையில் தொற்றிவந்த
வண்ணத்துப் பூச்சியிடம்
இனிவரும் வசந்தங்களிலும்
தேனுக்கு வா என்றது பூ.
காதல் பூவே வசந்தங்கள்தோறும்
ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிற
பட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில்
உலகம் தழைத்தது.
நிலைப்ப தொன்றில்லா வாழ்வில்
கடக்கையில் பெய்கிற முகிலே உறவுகள்.
ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிற
ரோமியோக்களின் கதை கேள்.
காகிதப் பூக்களின் நகரத்தில்
காதலில் கசிந்து
தேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி.
என் இனிய பட்டாம் பூச்சியே
சுவர்க் காடுகளுள் தேடாதே.
நான் வனத்தின் சிரிப்பு
வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும்
வானவில் குஞ்செனப் பாடியது
பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ.
ராணித் தேனீக்களே எட்டாத
கோபுரப் பாறைகளில் இருந்து
கம கமவென இறங்கியது
அதன் நூலேணி.
வாசனையில் தொற்றிவந்த
வண்ணத்துப் பூச்சியிடம்
இனிவரும் வசந்தங்களிலும்
தேனுக்கு வா என்றது பூ.
காதல் பூவே வசந்தங்கள்தோறும்
ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிற
பட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில்
உலகம் தழைத்தது.
நிலைப்ப தொன்றில்லா வாழ்வில்
கடக்கையில் பெய்கிற முகிலே உறவுகள்.
Monday, August 20, 2007
பாலக்காடு 2006
வ.ஐ.ச.ஜெயபாலன்
வண்ன ஆடைகளை
வானெங்கும் வீசிவிட்டு
அம்மணச் செஞ் சூரியன்
அரபிக் கடல் இறங்க
ஆகாச விளிம்பு பற்றும்.
நாமும்பகலின் பல்லக்குத் தூக்கி
களைத்துப்போய் இருந்தோம்.
முதல் துளியையே
குருவி எச்சமாய் அருவருத்து
நச்சு வசவுகளை உமிழ்கிறாள்.
நாளை அவளேவெட்கமின்றி
பொங்கலும் வைத்து
மழையே வா எனப் பாடுவாள்.
இது வாழ்வு.
வானில் இரவு தன்
இளம்பிறை மதுக் கிண்ணத்தை
உயர்த்தியாயிற்று.
என் தோழியோ பரபரக்கிறாள்.
இனி அவள் தன் மனசின்
ஒப்பனைப் பெட்டி திறப்பாள்.
முகம் ததும்பும் நட்ப்பை
ஒட்டத் துடைத்து விட்டு
பகை பூசிபோர்ச் சன்னதங்கள் எழுதுவாள்.
எதில் இருந்தும் கண்டுபிடிப்பாள்
ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.
காலையேகிளம்புகிற பாவனையில்
தேன் கமழும் முன்னிரவின்
தலையை மிதித்து எழுவாள்.
யுத்த தந்திரங்களை அறிவேன்.
இது தந்திர யுத்தம்.
ஆனாலும் வழக்கம்போல்
காலை விடியும்ஒப்பனைகளின்றி.
வண்ன ஆடைகளை
வானெங்கும் வீசிவிட்டு
அம்மணச் செஞ் சூரியன்
அரபிக் கடல் இறங்க
ஆகாச விளிம்பு பற்றும்.
நாமும்பகலின் பல்லக்குத் தூக்கி
களைத்துப்போய் இருந்தோம்.
கிளர்ந்து குன்று தளுவும் முகிலின் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.
வான் நோக்கும் அறுவடைக்காரிமுதல் துளியையே
குருவி எச்சமாய் அருவருத்து
நச்சு வசவுகளை உமிழ்கிறாள்.
நாளை அவளேவெட்கமின்றி
பொங்கலும் வைத்து
மழையே வா எனப் பாடுவாள்.
இது வாழ்வு.
வானில் இரவு தன்
இளம்பிறை மதுக் கிண்ணத்தை
உயர்த்தியாயிற்று.
என் தோழியோ பரபரக்கிறாள்.
இனி அவள் தன் மனசின்
ஒப்பனைப் பெட்டி திறப்பாள்.
முகம் ததும்பும் நட்ப்பை
ஒட்டத் துடைத்து விட்டு
பகை பூசிபோர்ச் சன்னதங்கள் எழுதுவாள்.
எதில் இருந்தும் கண்டுபிடிப்பாள்
ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.
காலையேகிளம்புகிற பாவனையில்
தேன் கமழும் முன்னிரவின்
தலையை மிதித்து எழுவாள்.
யுத்த தந்திரங்களை அறிவேன்.
இது தந்திர யுத்தம்.
ஆனாலும் வழக்கம்போல்
காலை விடியும்ஒப்பனைகளின்றி.
உயிர்த்தேன்
உயிர்த்தேன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
காலப் பாலை நடுவினிலே
வினோதங்கள் வற்றி
உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே
வாழும் கனவாக என் முன்னே
வளரும் சிறு நதியே.
உன் தோழமையின் பெருக்கில்
துயர்கள் கரையுதடி
வாழத் துடிக்குதடி கண்ணம்மா
என் வார்த்தைகள் காவியமாய்
கூதிர் இருட் போர்வை உதறி
குவலயம் கண் விழிக்க
போதியோடு இலை உதிர்த்த இருப்பும்
புன்னகைத்தே துளிர்க்க
மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன்
மண்ணைப் புணருகின்றான்.
மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா
மூச்சால் உயிர் மூட்டி.
கடைசித் துளியும் நக்கி
காலி மதுக் கிண்ணம் உடைத்து
என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன்.
நீ கள்நதியாக நின்றாய்.
உயிர்த்தும் புத்துயிர்த்தும்
இந்த உலகம் தொடர்வதெல்லாம்
உன் பொற்கரம் பற்றியன்றோ .
மாண்டவர் மீள்வதெல்லாம் பெண்ணே நின்
மந்திரத் தொடுகையன்றோ .
பெண்களே பூமியர்கள்
ஆண்கள் நாம் பிற கோளால் வந்தவர்கள்
உன்னைப் புரியாமல் கண்ணம்மா
இந்த உலகம் புரிவதில்லை
வ.ஐ.ச.ஜெயபாலன்
காலப் பாலை நடுவினிலே
வினோதங்கள் வற்றி
உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே
வாழும் கனவாக என் முன்னே
வளரும் சிறு நதியே.
உன் தோழமையின் பெருக்கில்
துயர்கள் கரையுதடி
வாழத் துடிக்குதடி கண்ணம்மா
என் வார்த்தைகள் காவியமாய்
கூதிர் இருட் போர்வை உதறி
குவலயம் கண் விழிக்க
போதியோடு இலை உதிர்த்த இருப்பும்
புன்னகைத்தே துளிர்க்க
மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன்
மண்ணைப் புணருகின்றான்.
மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா
மூச்சால் உயிர் மூட்டி.
கடைசித் துளியும் நக்கி
காலி மதுக் கிண்ணம் உடைத்து
என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன்.
நீ கள்நதியாக நின்றாய்.
உயிர்த்தும் புத்துயிர்த்தும்
இந்த உலகம் தொடர்வதெல்லாம்
உன் பொற்கரம் பற்றியன்றோ .
மாண்டவர் மீள்வதெல்லாம் பெண்ணே நின்
மந்திரத் தொடுகையன்றோ .
பெண்களே பூமியர்கள்
ஆண்கள் நாம் பிற கோளால் வந்தவர்கள்
உன்னைப் புரியாமல் கண்ணம்மா
இந்த உலகம் புரிவதில்லை
இன்றைய மது
இன்றைய மது
வ.ஐ.ச.ஜெயபாலன்
உலகம்விதியின் கள்ளு மொந்தை.
நிறைந்து வழிகிறது அது
மதுக் கிண்ணம் தாங்கியவர்களால்
எப்போதும் நுரைத்தபடி.
நேற்றிருந்தது வேறு.
இங்கே நுரைபொங்குவது
புதிய மது.
அது இன்றைய நாயகனுக்கானது.
நாளை கிண்ணம் நிறைகிறபோது
வேறு ஒருவன் காத்திருப்பான்.
நிச்சயம் இல்லை நமக்கு
நாளைய மது அல்லது நாளை.
எனக்காக இன்று சூரியனை
ஏற்றி வைத்தவனுக்கு நன்றி.
அது என் கண் அசையும் திசைகளில்
சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.
மயக்கும் இரவுகளில்
நிலாவுக்காகஓரம்போகிற சூரியனே
உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.
கள்ளு நிலா வெறிக்கின்ற
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும்
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.
எப்பவுமே வரப்பிரசாதங்கள்
வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.
நனைந்த நிலத்தில்
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.
காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.
வ.ஐ.ச.ஜெயபாலன்
உலகம்விதியின் கள்ளு மொந்தை.
நிறைந்து வழிகிறது அது
மதுக் கிண்ணம் தாங்கியவர்களால்
எப்போதும் நுரைத்தபடி.
நேற்றிருந்தது வேறு.
இங்கே நுரைபொங்குவது
புதிய மது.
அது இன்றைய நாயகனுக்கானது.
நாளை கிண்ணம் நிறைகிறபோது
வேறு ஒருவன் காத்திருப்பான்.
நிச்சயம் இல்லை நமக்கு
நாளைய மது அல்லது நாளை.
எனக்காக இன்று சூரியனை
ஏற்றி வைத்தவனுக்கு நன்றி.
அது என் கண் அசையும் திசைகளில்
சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.
மயக்கும் இரவுகளில்
நிலாவுக்காகஓரம்போகிற சூரியனே
உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.
கள்ளு நிலா வெறிக்கின்ற
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும்
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.
எப்பவுமே வரப்பிரசாதங்கள்
வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.
நனைந்த நிலத்தில்
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.
காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.
நட்போடு வாழ்தல்
நட்போடு வாழ்தல்
வ.ஐ.ச.ஜெயபாலன்
இன்னும் தொடுவானில் கையசைக்கும்
மணக்கோலச் சூரியன்.
கீழே படுக்கையில்
பொறுமை இழந்த பூமிப் பெண்
வெண்முல்லைப்பூ தூவிய
நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள்.
எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.
என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை
கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும்.
வழித்துணையை போற்றினும் புணரினும்
எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.
தோழி
உடன் இருக்கிற இன்பங்களும்
பிரிகிற துன்பங்களும் அடுக்கிய
நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா
நம் வாழ்வு.
பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து
ஆர்ப்பரித்த வானம்
இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும்.
என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா
நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா
அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா
இந்த மாரி இரவு.
கண்சிந்தும் பிரிவுகளில்
நிறைகிறது வாழ்வு.
ஒவ்வொரு தோழ தோழியர் செல்கிறபோதும்
காதலியர் வசைபாடி அகல்கையிலும்
நாளை விடியாதென உடைந்தேன்.
இனி முடிந்ததென்கிற போதெல்லாம்
பிழைத்துக் கொள்கிறது
வெட்டுண்ட தாய் அடியில் புதிதாய் ஒரு
குட்டிவாழை பூக்கிற உலகு.
என் இன்றைய கனவுகளின் நாயகியோ
எப்போதும் காதலில் நீந்துகின்ற மீன்.
இன்னும் எத்தனை நாள் எத்தனை நாள்
எனக்காக அந்த ஏந்திழையாள் யாழ் மீட்டும் ?
தோழி உன் யாழிசையில்
சந்தணமாய் எனது மொழி தேய்கிறது.
கிடங்கில் திராட்சை மதுவாய்
முதிர்கிறதென் கவி மனசு.
எச்சில் ஒழுக வழி மறித்து
முத்தமிடும் துருவத்துப் பனிக் காற்றிலும்
எரிகிறது என் ஆத்மா.
கண்டங்களே அசைகிற உலகில்
மனிதர்களிடையே நிலையானது எது ?
எங்கள் நடுகல் வேலித் தாய் மண்ணில்
கரு கறுத்த மேகங்களின் கீழ்
பஞ்சு விதைகளாய் மிதக்கும் மாவீரர் கனவுகள்போல
உயிர்தெழுமெம் வாழ்வு.
-2005. May
வ.ஐ.ச.ஜெயபாலன்
இன்னும் தொடுவானில் கையசைக்கும்
மணக்கோலச் சூரியன்.
கீழே படுக்கையில்
பொறுமை இழந்த பூமிப் பெண்
வெண்முல்லைப்பூ தூவிய
நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள்.
எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.
என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை
கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும்.
வழித்துணையை போற்றினும் புணரினும்
எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.
தோழி
உடன் இருக்கிற இன்பங்களும்
பிரிகிற துன்பங்களும் அடுக்கிய
நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா
நம் வாழ்வு.
பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து
ஆர்ப்பரித்த வானம்
இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும்.
என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா
நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா
அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா
இந்த மாரி இரவு.
கண்சிந்தும் பிரிவுகளில்
நிறைகிறது வாழ்வு.
ஒவ்வொரு தோழ தோழியர் செல்கிறபோதும்
காதலியர் வசைபாடி அகல்கையிலும்
நாளை விடியாதென உடைந்தேன்.
இனி முடிந்ததென்கிற போதெல்லாம்
பிழைத்துக் கொள்கிறது
வெட்டுண்ட தாய் அடியில் புதிதாய் ஒரு
குட்டிவாழை பூக்கிற உலகு.
என் இன்றைய கனவுகளின் நாயகியோ
எப்போதும் காதலில் நீந்துகின்ற மீன்.
இன்னும் எத்தனை நாள் எத்தனை நாள்
எனக்காக அந்த ஏந்திழையாள் யாழ் மீட்டும் ?
தோழி உன் யாழிசையில்
சந்தணமாய் எனது மொழி தேய்கிறது.
கிடங்கில் திராட்சை மதுவாய்
முதிர்கிறதென் கவி மனசு.
எச்சில் ஒழுக வழி மறித்து
முத்தமிடும் துருவத்துப் பனிக் காற்றிலும்
எரிகிறது என் ஆத்மா.
கண்டங்களே அசைகிற உலகில்
மனிதர்களிடையே நிலையானது எது ?
எங்கள் நடுகல் வேலித் தாய் மண்ணில்
கரு கறுத்த மேகங்களின் கீழ்
பஞ்சு விதைகளாய் மிதக்கும் மாவீரர் கனவுகள்போல
உயிர்தெழுமெம் வாழ்வு.
-2005. May
Saturday, August 18, 2007
என் கதை
அவள் தனி வனமான ஆலமரம்.
நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.
என்னை முதன் முதற் கண்டபோது
நீலவானின் கீழே அலையும்
கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.
நானோ அவளை
கீழே நகரும் பாலையில் தேங்கிய
பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.
ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி
ஜாடை காட்டினாள்.
மறுநாள் அங்கிருந்தது என் கூடு.
இப்படித்தான் தோழதோழியரே
எல்லாம் ஆரம்பமானது.
தண்ணீரை மட்டுமே மறந்துபோய்
ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்
பாலை வழி நடந்த காதலர் நாம்.
அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.
நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.
சிறகுகளில் மிதக்கும் எனக்கோ
நிலைத்தல் இறப்பு.
மண்ணுடன் அவள் எனை
வேரால் இறுகக் கட்ட முனைந்தும்,
நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்
எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.
உண்மைதான் அவளை
நொண்டியென்று விரக்தியில் வைதது.
முதலில் அவள்தான் என்னைப் பார்த்து
கண்ட மரம் குந்தி, ஓடுகாலி
மிதக்கும் நரகல் என்றாள்.
ஒரு வழியாக இறுதியின் இறுதியில்
கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்
சமரசமானோம்.
மாய ஊறவின் கானல் யதார்த்தமும்
வாழ்வின் உபாயங்களும்
காலம் கடந்தே வாய்த்தது நமக்கு.
நம் காதலாய் அரங்கேறியதோ
உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்
என்றோ எழுதிய நாடகச் சுவடி.
இப்போது தெளிந்தேன்.
சந்திக்கும் போதெலாம்
என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.
"ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்
உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.
"மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்"
என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்
என் கிளைகளில் அமர்ந்ததோ
நீ மட்டும்தான்."
இப்படித்தான் தோழதோழியரே
ஒரு மரமும் பறவையும் காவியமானது.
நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.
என்னை முதன் முதற் கண்டபோது
நீலவானின் கீழே அலையும்
கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.
நானோ அவளை
கீழே நகரும் பாலையில் தேங்கிய
பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.
ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி
ஜாடை காட்டினாள்.
மறுநாள் அங்கிருந்தது என் கூடு.
இப்படித்தான் தோழதோழியரே
எல்லாம் ஆரம்பமானது.
தண்ணீரை மட்டுமே மறந்துபோய்
ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்
பாலை வழி நடந்த காதலர் நாம்.
அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.
நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.
சிறகுகளில் மிதக்கும் எனக்கோ
நிலைத்தல் இறப்பு.
மண்ணுடன் அவள் எனை
வேரால் இறுகக் கட்ட முனைந்தும்,
நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்
எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.
உண்மைதான் அவளை
நொண்டியென்று விரக்தியில் வைதது.
முதலில் அவள்தான் என்னைப் பார்த்து
கண்ட மரம் குந்தி, ஓடுகாலி
மிதக்கும் நரகல் என்றாள்.
ஒரு வழியாக இறுதியின் இறுதியில்
கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்
சமரசமானோம்.
மாய ஊறவின் கானல் யதார்த்தமும்
வாழ்வின் உபாயங்களும்
காலம் கடந்தே வாய்த்தது நமக்கு.
நம் காதலாய் அரங்கேறியதோ
உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்
என்றோ எழுதிய நாடகச் சுவடி.
இப்போது தெளிந்தேன்.
சந்திக்கும் போதெலாம்
என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.
"ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்
உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.
"மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்"
என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்
என் கிளைகளில் அமர்ந்ததோ
நீ மட்டும்தான்."
இப்படித்தான் தோழதோழியரே
ஒரு மரமும் பறவையும் காவியமானது.
Subscribe to:
Posts (Atom)

