Monday, August 20, 2007

பாலக்காடு 2006

வ.ஐ.ச.ஜெயபால‎‎ன்



வண்ன ஆடைகளை
வானெங்கும் வீசிவிட்டு
அம்மணச் செஞ் சூரிய‎ன்
அரபிக் கடல்‏ இறங்க
ஆகாச விளிம்பு பற்றும்.
நாமும்பகலி‎‎ன் பல்லக்குத் தூக்கி
களைத்துப்போய் ‏இருந்தோம்.

கிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக்கருங்கூந்தல் இரப்பர்காட்டில்சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது.

வா‎ன் நோக்கும் அறுவடைக்காரி
முதல் துளியையே
குருவி எச்சமாய் அருவருத்து
நச்சு வசவுகளை உமிழ்கிறாள்.
நாளை ‏அவளேவெட்கமி‎‎ன்றி
பொங்கலும் வைத்து
மழையே வா எனப் பாடுவாள்.‏
இது வாழ்வு.
வானில் இரவு த‎ன்

இளம்பிறை மதுக் கிண்ணத்தை
உயர்த்தியாயிற்று.
எ‎ன்‎ தோழியோ பரபரக்கிறாள்.
இனி அவள் த‎‎ன் மனசின்
ஒப்பனைப் பெட்டி திறப்பாள்.
முகம் ததும்பும் நட்ப்பை
ஒட்டத் துடைத்து விட்டு
பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்.
எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள்
ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை.
காலையேகிளம்புகிற பாவனையில்
தே‎ன் கமழும் மு‎ன்னிரவின்
தலையை மிதித்து எழுவாள்.

யுத்த த‎ந்திரங்களை அறிவே‎‎ன்.‏
இது தந்திர யுத்தம்.

ஆனாலும் வழக்கம்போல்
காலை விடியும்ஒப்பனைகளின்‎றி.

No comments: